Monday, 17 March 2025
சுழல் வெப்சீரிசில் ஒரு வசனம் வரும். "இருட்டுல எப்படி நம்மால மற்றவற்றை பார்க்க முடியாதோ அதே போல ரொம்பப் பிரகாசமான வெளிச்சத்திலும் நம்மால் மற்றவற்றை பார்க்க முடியாது". இருளும் ஒளியும் ஒரு பர்ஃபெக்ட் விகிதத்தில் கலந்திருந்தால் தான் காட்சி தெரியும். ஒலி கூட அதே போன்றது தான். சப்தமற்ற மௌனத்தையும் கேட்க முடியாது. மிக அதிக இரைச்சலிலும் நம்மால் கேட்க முடியாது. மனித காதுகளால் ஒரு குறிப்பிட்ட ஃப்ரீக்குவன்ஸியை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு குறைவான / அதிகமான ஃப்ரீக்குவன்சிக்கு நாம் செவிடர்கள் தான்.வாழ்வென்பதே இது போன்று இரண்டு எதிரெதிர் முரண்களின் பிணைப்பால் தான் ஆகியுள்ளது.தீதும் நன்றும் சேர்ந்ததே வாழ்வு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment