*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*
*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*
இன்னும் 6⃣2⃣நாட்களே உள்ளன ...
அறிமுக நூல் : 3⃣9⃣
இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?
*நூலின் பெயர் :* விடுதலை போராட்டத்தில் 25 கம்யூனிஸ்ட்களின் நினைவுகள்
தொகுப்பு ஆசிரியர் : சீதாராம் யெச்சூரி
இந்திய விடுதலை போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின பங்கு ஈடுஇணையற்றது...
பள்ளி, கல்லூரி நூல்களில் அவர்களின் வரலாறு, பங்களிப்பு இடம்பெறாமல் இருந்தாலும் வரலாற்றை ஆழமாக வாசிப்போருக்கு பங்களிப்பு புரியும்...
நாட்டின் ஒவ்வொறு மூலைமுடுக்கிலும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது அந்த போராட்டத்தை வலுவாக்கி தீவிரப்படுத்தியதில் கம்யூனிஸ்ட்களுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு...
அத்தகைய 25 தியாகிகளின் விடுதலை போராட்ட நினைவலைகள் தான் இந்த நூல்...
மீரட் சதிவழக்கில் மிக அதிக தண்டணை வழங்கப்பட்ட தோழர் *முசாபர் அகமது*..
1929 ல் சிட்டாகாங் ஆயுதக்கிடங்கை தகர்த்த *கணேஷ்கோஷ்*..
ராஜஸ்தானிய சிற்றரசர்களுக்கு எதிராகவும் , பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் போராடிய *மித்தலால்*..
32 ஆண்டுகள் சிறையிலும், 11 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்த *சதீஷ்பக்ராஷி*...
1945-47 வார்லி பழங்குடியின மக்களின் போராட்டத்திற்கு தலைமைதாங்கிய *கோதாவரி பருலேகர்*...
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கிய *கேப்டன் லட்சுமி*..
இப்படி 25 தியாகிகளின் நினைவலைகள்...
வாசியுங்கள்..
அறியப்படாத வரலாறு இவ்வளவா என ஏக்க பெருமூச்சு வெடிக்கும் !
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூபாய் 140
பக்கங்கள் : 224
வாசிப்பை சுவாசமாக்குவோம் !
*நம்பிக்கையுடன்*
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment