Saturday, 1 October 2016

நூல் அறிமுகம்

*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*

*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*

இன்னும் 6⃣1⃣நாட்களே உள்ளன ...

அறிமுக நூல் : 4⃣0⃣

இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?

*நூலின் பெயர் :* சொல்வனம் [கவிதை தொகுப்பு ]

ஆசிரியர் : விகடன் வாசகர்கள்

இது ஒரு கவிதை தொகுப்பு...

ஆனந்தவிகடன் வார இதழில் *சொல்வனம்* என்ற தலைப்பில் வெளியான கவிதைகளின் தொகுப்பு ..

விகடன் வாசகர்களால் எழுதப்பட்ட கவிதைகள்...

இலக்கிய மரபுகள் உடைத்து, யதார்த்த மனிதர்களின் கவிதை...

குட்டி குட்டி கவிதைகளில் உங்களால் சிலிர்த்துபோக முடியுமா..?

அந்த கவிதைக்கு ஏற்ற ஓவியத்திலோ, புகைப்படத்திலோ கரைந்து போக முடியுமா..?

சிலிர்த்து போகவைக்கிறேன், கரைந்து போக வைக்கிறேன் என சவால் விடுகிறது இந்த நூல்..

ஏறத்தாழ 1300 கவிதைகள்...

400 புகைப்படங்கள்..

300 ஓவியங்கள்...

ஒவ்வொறு கவிதைக்கு பின்னும் விகடனின் இதயத்துடிப்பான வாசகர்களின் வலி, வேதனை, சந்தோசம், துக்கம், சிலிர்ப்பு , ஏமாற்றம், என ஏதேனும் ஒரு உணர்வு வசீகரிக்கும்..

வாசியுங்கள்..

இவை கவிதைகள் அல்ல சாமானிய மக்களின் ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டம் என்பது புரியும் !

வெளியீடு  : விகடன் பிரசுரம்
விலை        : .ரூபாய் 495
பக்கங்கள் : 400

வாசிப்பை சுவாசமாக்குவோம் !

*நம்பிக்கையுடன்*
         ஸ்ரீதர்
��திண்டுக்கல்

No comments:

Post a Comment