Saturday, 15 October 2016

வண்ணதாசன்

கெட்டிக்காரத்தனம் என்பது உப்பு மாதிரி
கொஞ்சம் கூடினால் ரொம்ப கரிக்கும்
ருசி கெட்டு விடும்
-வண்ணதாசன்

பென்சில் சீவிக் கொண்டிருக்கிறேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய
-வண்ணதாசன்

பண்டம் சுடுகிற அடுக்களை மண் அடுப்பின்
உட்பக்கத்து தணலும்,தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது
-வண்ணதாசன்

(@manipmp):
உங்கள் உள்ளங்கைக்குள் இருட்டு நுழைந்தது போல,ஒளியும் நிரம்பியிருக்கிறது என்பது எளிய உண்மை
-வண்ணதாசன்

உதடுகள் ஒற்றிக்கொள்வது முத்தமல்ல
நாவறட்சி
-வண்ணதாசன்

No comments:

Post a Comment