Saturday, 15 October 2016

கமல்ஹாசன்

*தமிழ் மகளுக்கு*

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜீரம்
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்

காவியும் நாமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்

அன்றொரு பெரியவன் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்

புத்தன் சொன்ன தம்ம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்.
    
     -கமலஹாசன்

No comments:

Post a Comment