குழந்தைகளை மதிப்பெண்களாகவே பார்க்கிறவர்களும்,
மனிதர்களைப் பதவிகளாகவே பார்க்கிறவர்களும்,
இணையைச் சம்பளமாகவே பார்க்கிறவர்களும்,
புடவையை விலையாகவே பார்க்கிறவர்களும்,
பரிசைப் பணமாகவே எடை போடுகிறவர்களும் புள்ளிவிவரப் புலிகளாக இருக்கலாம். ஆனால் துள்ளி வருகிற மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரர்கள் அல்லர்.
வாழ்க்கையை புள்ளிவிவரமாகப் பார்க்கிறவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
கடந்த காலத்தை ஆண்டுகளாகவும்,
தோல்விகளாகவும்,
நிகழ்காலத்தை மதிப்பெண்களாகவும்,
எதிர்காலத்தை ஊதிய உயர்வாகவும் பார்க்கிறவர்களால் தென்றலையும் ரசிக்க முடியாது,தேனையும் சுவைக்க முடியாது.
#இறையன்பு
No comments:
Post a Comment