Monday, 29 May 2017

மேத்தா

நன்றி:திரு தங்கம்

*மு.மேத்தா*

*மே-22*

*திண்டுக்கல் இலக்கியக்களம்*

*சகாய மாதா மக்கள் மன்றம்*

*தமிழ் இனி*என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

*சிறப்புப் பதிவு*

*ஆகாயத்துக்கு அடுத்த வீடு*

ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
என்னை
உன்னிடம் கொண்டுவந்து
சேர்த்துவிடும்
இந்தக் கடிதம்!
🏵
எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என் கடிதத்தை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!
🏵
எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னைப்
எட்டிப் பார்க்கிறேன் நான்!
🏵
காற்று உன் வீட்டுக்
கதவுகளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுபடுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!
🏵
ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக

அர்த்தம் சொல்லத்தான்
அகராதி கிடைக்கவில்லை
🏵
பூங்கொத்து வேண்டாம்
எப்போதும்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...
🏵
புகைவண்டியில் உன்னை
வழியனுப்பும்போது
கேட்பேன்
"இப்போதாவது
என்னை
என்னிடம் விட்டுச் செல்!"
🏵
அவசியம் அனுப்பிவை
உன் திருமண
அழைப்பிதழை...
பரிசு விழுந்தது
யாருக்கென்று
பார்த்துக் கொள்கிறேன்!

No comments:

Post a Comment