ஈகோ பிரச்சனையில்
முட்டின வார்த்தைகளில்
போடா மயிரென்று
பிரிந்த நண்பனை
முந்தாநாள் மார்க்கெட்டின்
மூலையில் சந்தித்தேன்
அவன் கொஞ்சம் சிரித்தானோ..?
நானும் சிரித்திருக்கலாமோ ?
'எல்லாம் மறந்தாச்சு
எப்படிடா இருக்கே ?' வென
நேசமாய் கேட்டிருக்கலாமோ?
கிட்டேப்போய் கைகுலுக்கி
காபிக்கடைக்குக்
கூட்டிப்போய்
வயித்து வலி
இப்பவும் வருதாவென
வாஞ்சையாய் விசாரித்திருக்கலாமோ ?
கர்வத்தை அணிந்து கொண்டு
கற்பனையில் நொந்து கொண்டு
இப்போது அவனும்
இப்படித்தான்
இமை நனைய
கவிதை
எழுதிக்கொண்டிருப்பானோ..?
- பட்டுக்கோட்டை பிரபாகர்.
No comments:
Post a Comment