சரியான
நேரம் காட்டுகிறது
கடிகாரம்
நாம்தான்
காலதாமதமாகிறோம்
-ராஜா சந்திரசேகர்
#தூக்கத்தையும்
விற்கலாம்
தூங்காமலிருந்து
-தமிழன்பன்
#சுதந்திரம் எதில்
விடுதலையிலா
விடுபடுதலிலா..
-ராஜா சந்திரசேகர்
#சங்ககால கவிதைகள், தொல்காப்பியம்,சிலப்பதிகாரம்,ராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சிகரச் சிந்தனைகள் நாம் இன்று,உருவாக்கினால்தான்,இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தவர் நம்மை மதிப்பார்கள்: உலகம் நம்மை மதிக்கும்.
இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை செய்யும் ஆக்கங்கள் நம்மிடம் இல்லையென்றால்,நேற்று இருந்தவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்
-சுந்தரராமசாமி
#கணினிக்கும் மூளைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கணினி-அணை
மூளை-ஊற்று
-கலைஞர்
(நண்பர் சென்னைத்தமிழன் உரையாடலில் பகிர்ந்தது)
No comments:
Post a Comment