நான் பேச்சாளன் அல்ல
எழுத்தாளன் அல்ல,
நான் கருத்தாளன்!
-பெரியார்
விருப்பம்போல் ஆணியடிக்க
விடிய விடிய விளக்கெரிக்க
விருந்தினரை உபசரிக்க
முடியாத வாடகை வீட்டில்
வசிக்கலாம்,வாழமுடியாது
-யுகபாரதி
இராத்திரி
அப்பா மிச்சம் வைத்த
கஞ்சியைக் குடிக்க
பசியோடு காத்திருப்பேன்
அதுல.. மிக்சர் பொடியும்
எவனுக்கோ
வெட்டித்தள்ளிய
அஞ்சாறு முடிகளும் மிதக்கும்.
(கலைவாணன் இ.எம்.எஸ் எழுதிய "ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்" தொகுப்பிலிருந்து.)
#இருப்பதை வைத்து
சந்தோசப் படமுடியவில்லை
"கடன்"!
-மணி
#எல்லையற்றது
இந்த உலகத்தின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை
-மனுஷ்யபுத்திரன்
#கூடி கூடி
பேசுவார்கள்
பிரிந்து போவதற்கு..
-மீரா
#வீரத்தால் வென்றவர்களை விட.. துரோகத்தால் வீழ்த்தியவர்களே அதிகம்.
நாணயத்தால் உயர்ந்தவர்களை விட...
நயவஞ்சகத்தால்
மின்னியவர்களே மிகுதி.
#வெ_இறையன்பு
No comments:
Post a Comment