ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அன்று நெறி
இன்று வெறி
மதங்கள் !
அமாவாசையன்று
நிலவு
எதிர்வீட்டு சன்னலில் !
அச்சப்பாத்திரம்
திருவோடானது
பட்டச்சான்றிதழ் !
அறுக்கமாட்டாதவன் இடுப்பில்
ஐம்பத்தெட்டு அரிவாள்
அதிகபட்ச அமைச்சர்கள் !
குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம் !
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிந்து நில்லடா
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா ?
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளைந்தது
முதியோர் கல்வி !
சுனாமி வருவதாக
மருமகள்கள் பேச்சு
மாமியார் வருகை !
கோடாரியை
கூர் தீட்டுகையில்
வருந்தியது கைப்பிடி !
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !
ஏமாற்றிப் பிழைப்பவர்களின்
ஏக வசனம்
சோதிடம் !
விதவைகளின் எண்ணிக்கை
விரிவாக்கம் செய்யுமிடம்
மதுக்கடை !
காவல் தெய்வம்
கையில் அரிவாள்
காணவில்லை உண்டியல் !
--
No comments:
Post a Comment