உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
தனக்குத் தானே துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை"
-வாலி
ஞாயிறு தோறும் தலைமறைவாகும்
வேலை என்னும் பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது
-ஞானக்கூத்தன்
ஹைக்கூ கவிதைகள்:
எத்தனை
காதல் தோல்வியோ...
ஆட்டுக்கிடாவுக்கு தாடி!
தன்மேல்
துளையிட்டதால்
அழுகின்றதோ மூங்கில்...
புல்லாங்குழல்!
இடைநிறுத்தம் இல்லா பேருந்து
நின்று நின்று சென்றது...
சாலையில் குழிகள்!
கடைசிப்பேருந்து...
இருக்கும் பத்துரூபாயும் கிழிசல்..
பயனில்லாச் சொந்தம்!
அப்பா கோபப்பட
பழைய சைக்கிளை
தள்ளுகிறேன் பழுதுபார்க்க...
தாத்தாவுக்கு வைத்தியம்!
நன்றி -வாரமலர்
#காரணமற்று சில கணங்கள் வெறித்துப் பார்ப்பது காட்சிகளையா?,நினைவுகளையா?"
-மணி
#எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்
எட்டு மனி நேரம் தூங்க வேண்டும்
எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?
-விக்கிரமாதித்யன்
வாழ்க்கை,லாப நோக்கம் உள்ளவனாக மனிதனை மாற்றுகிறது.
அதை மீறி மனிதனாக வாழ போராட்டம் தேவைப்படுகிறது
-மேலாண்மை பொன்னுசாமி
#கடனின்றி அமையாது...
நினைவு புதைகுழிக்குள்
பத்திரமாய் எல்லாம்
கனரா வங்கியில்
கடன் வந்த மறுநாள்
மூத்தவன் பிறந்தது
சொசைட்டி கடன்பெற்ற
மூன்றாம் நாள்
அவனுக்கு
முடியெடுத்து காது குத்தியது
அபிராமி பைனான்சில்
கையெழுத்து போட்டுவிட்டு
அப்படியே போய்
அவனை
பள்ளியில் சேர்த்தது
காரவீட்டு ராமசாமியிடம்
வீட்டை
அடகு வைத்த நாளில்
அவனை
கல்லூரியில் சேர்த்தது
ரோடுபோடுவதற்கோ
எதற்கோ
எல்லா நிபந்தனைகளுக்கும்
கட்டுபட்டு
உலக வங்கியில்
நிதியமைச்சர்
கையெழுத்து போட்ட தினத்தில்
அவன்
தேர்ச்சி பெற்றது
வயலை
அடகு வைத்து
அவனை
வெளிநாடு அனுப்பியது
நினைவுப் புதைகுழிக்குள்
எல்லாம்
பத்திரமாய்
இரா எட்வின்
No comments:
Post a Comment