Monday, 31 March 2025

#30நாள்வாசிப்புப்போட்டி#25RM055#ஒரு_மாதம் _ஒருஎழுத்தாளர்புத்தகம்-16பக்கங்கள் -231நாள்-7கழிமுகம் -பெருமாள் முருகன்கழிமுகம் என்பது நதியும் கடலும் சேரும் இடம் ஆகும் இதனை அப்படியே நாவலுடன் ஒப்பிட்டால் மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. பழமையும் புதுமையும் இணையும் போது கிடைக்கும் புதிய சிந்தனைகள் புதிய வாழ்க்கை ஆகும். இந்த புத்தகத்தில் நான் படிக்க ஆரம்பித்தது மிகவும் ரசித்தது அதன் முன்னுரை பகுதி தான். நான் எழுதியவை, எழுதுபவை அனைத்தும் புனைவுதான். அவற்றில் சிறிதும் உண்மை கிடையாது. அது மட்டுமல்ல, உண்மை என்றே ஒன்று கிடையாது. உண்மை போலத் தோற்றம் காட்டுபவை உண்டு. இந்தக் கணத்தில் உண்மை போலத் தோன்றுவது அடுத்த கணத்தில் புனைவின் தன்மை கொண்டு விடுகிறது. ஆக எல்லாமே புனைவுதான். புனைவை உண்மை போலத் தோன்றச் செய்வதற்குத்தான் பெரிதும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அப்படிப் பலகாலம் மெனக்கெட்டிருக்கிறேன். அந்த மெனக்கெடல் வீண் போகவில்லை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துவிட்டேன். ஆனால் மேலும் மேலும் அப்படி மெனக்கெட என்னால் ஆகாது. ஆகவே புனைவைப் புனைவாகவே தோன்றச் செய்துவிடலாம் என முடிவெடுத்து எழுதிய நாவல் இது.என் நாவலில் நான் ரசித்தது கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் அசுரர்களின் பெயர்களாக இருக்கும். உதாரணத்திற்கு குமாரசுரர்,மங்காசுரி, மேகாஸ் என்று இருக்கும். இதற்கு காரணமாக அவர் முன்னுரையில் சொல்வது நாம் வாழும் வாழ்க்கை யை அன்றாட வாழ்வில் நெருக்கடியில் ஒரு அசுரலோகம் தான். அந்த அசுரலோகத்தில் உலவும் மனிதர்கள் அசுரர்களாகவே இருக்கிறார்கள். பிரச்சனை களில் மூழ்கி எழுவது பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவது கிட்டத்தட்ட அசுரலோகம் தான் என புரிந்து கொள்ள முடிகிறது. கதாபாத்திரங்கள் முதலில் நெருடலாக இருந்தாலும் போகப்போக நம் மனதுக்கு நெருக்கமாக ஆகிவிடுகிறது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் தான் கதைக்களமாய் நாவலாய் உருவாகியுள்ளது. குமாரசுரர் எனும் அரசு ஊழியிருக்கும் அவன் மகன் மேகாஸ் மற்றும் மனைவியுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். நடுத்தர வாழ்க்கையில் கல்வி தான் முக்கியம் என்று படிப்பதற்கு முக்கிய இடம் கொடுத்து மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்கிறார் .ஆனால் மகனோ மற்ற இளைஞர்களை போல பொறியாளராகவே என்று உறுதியாய் இருந்து ஆகி விடுகிறார். கல்லூரி தேடி அலையும் கதை ஒரு தனி அத்தியாயமா எழுதப்பட வேண்டியது.பொறியியல் கலந்தாய்வு மற்றும் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசிய போது தந்தையிடம் அவன் ஒரு விலை உயர்ந்த அலைபேசி வேண்டும் என கேட்கிறார் பழமையின் மகத்துவத்தை உணர்ந்து அவர் மன நெருக்கடியில் உள்ளாகிறார் .இறுதியில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து அவர்கள் அனைவரும் எந்த மனநிலையில் இருந்தார்கள் என்பதுதான் இந்த நாவலின் கதை. அப்பா மகன் உறவின் பிரச்சனைகளை மிக விரிவாக அலசி உள்ளார். ஒரு இடத்தில் சொல்லும்போது இன்றைய சமூகம் குற்றத்தை கூட மிகவும் ஆஆர்வத்துடன் உற்சாகமாய் செய்கிறது, உதாரணத்திற்கு லஞ்சம் கொடுப்பதை குற்றமாக இருந்தாலும் தன்னுடைய வேலை முடிய வேண்டும் என்பதில் நோக்கமாய் கொண்டு ஆர்வமாய் கொடுக்கின்றனர் அதேபோன்று அலைபேசி உள்ளிட்ட அனைத்து வகைகளையும் அலசி உள்ளார். பிரச்சனைகள் மூழ்கி அதனை சமாளித்து வெளியேறுவது மனிதர்களின் முக்கிய வேலையாய் உள்ளது கழிமுகம் என்பதற்கு பழமையும் புதுமையும் இணையும் இடம் என்று சொல்கிறார் அது நாவலில் மிக அழகாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.*காசு இருக்குதாய்யா? என்ற கேள்வி அக்கறையில் வருவது. இப்படித்தான் அப்பா மகனிடம் அக்கறையுடன் நடந்து கொள்ள முடிகிறது*படிக்கிறாயா என்னும் கேள்வி தகவல் பெறும் பொருட்டு கேட்கப்படும் கேள்வி அல்ல படிப்பதை நினைவூட்ட சொல்லப்படும் கேள்வி.*பேருந்து பயணத்தில் மகனிடம் ஹெட் போன் வாங்கி கேட்கும் தந்தையின் மனநிலையை அப்படியே தத்ரூபமா விவரித்து இருப்பார். மிக யதார்த்தமான நிலையை அப்போது காண முடிந்தது.எதார்த்தமான ஒரு நடுத்தர குடும்பத்தின் மனநிலையை தன்னுடைய நாவல்களில் இவ்வளவு தத்துருபமாய் விவரிக்க முடியுமா என்று தெரியாது. கடின நடையோ புரிந்துகொள்ள கடுமையாகவோ இல்லாமல் வெறுமனே நாம் அண்டை வீட்டில் நடக்கும் வாழ்க்கையை நாம் எழுத்துக்களில் பார்ப்பது போல இருந்தது மிகச்சிறப்பு.தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம் 39


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-15
பக்கங்கள் -384
நாள்-7

பவா சொன்ன கதைகள்
-பாரதி கண்ணம்மா

பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களிடம் இரு, ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் பல்வேறு பாடல்கள் பாடினாலும் கூட்டத்தில் யாரேனும் ஒருவர் ஏதாவது ஒன்றை பாடச் சொல்லிக் கேட்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்று அவர் உற்சாகமாய் பதில் சொன்னார். நான் அப்போதும் முதன்முறை  மைக்கின் முன் நின்று பாடுவது போல உணர்ந்து பாடுவேன் .ஏனெனில் கலைஞனுக்கு அயர்ச்சி இருக்கக் கூடாது. எதிரில் இருப்பவருக்கு அது புதிதாய் இருக்கும். நமக்கு அந்த அலுப்பு வரவே கூடாது என்பார். இது பாவா அவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். மேடைகளில் கதைகளை சொன்னாலும் பல்வேறு இடங்களில் வாசகர்கள் அந்த கதைகளை அவர் வாயிலாக கேட்கும் போது அதே உற்சாகத்துடன் சொல்லுவார்.

அவரின் குரலும் ஒரு ஸ்லாங்கும் அந்த கதைக்கு புதிய வடிவத்தை சேர்க்கின்றன. முதல் கதையான யானை டாக்டரில் அவருக்கே உரிய வடிவத்தில் அதை சொல்லி இருப்பார் படிக்கும்போது அவருடைய குரல் நன்கு கேட்கிறது. எனக்கு பிடித்தது அந்த செந்நாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கே யின் மனநிலை தான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி விலங்கு குறித்த அச்சம் இன்றி உயிரை பணயம் வைத்து அவர் செய்திருப்பார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறம் தொகுப்பு வந்தவுடனேய முதலில் படித்தது யானை டாக்டரை தான்.

கந்தர்வனின்" தான் 'கதையை பவா சொல்லித்தான் நான் நேரடியாக கேட்டு இருக்கிறேன். அவர் சொல்லும்போதே அடுத்து என்ன என்ன என்று நம்மை எதிர்பார்க்க வைக்கும். இறுதியில் மனிதாபிமானத்தோடு நமக்கு கந்தர்வனின் மீதும் மரியாதையும் வரும். அவர் எழுதிய தொகுப்பு நூலை வம்சி பதிப்பகம் தான் கொண்டு வந்தது. ஒவ்வொரு கதையுமே அட்டகாசமாக இருக்கும். கந்தர்வனை அவர் உச்சி முகர்ந்து பாராட்டும் போது நாமே அந்த கலைஞனுக்கு அருகில் இருந்து மரியாதை செய்தது போல் இருக்கும்.

இலங்கைப் பெண்ணுக்கும் வியட்நாம் ஆணுக்கும் இடையில் உருவாகும் குழந்தை அமெரிக்காக்காரியாக பிறக்கிறதா என்பதை ஏக்கத்துடனும் வலியுடனும் இறுதியில் மன மகிழ்வுடன் கதையை முடித்து இருப்பாரா முத்துலிங்கம் அவர்கள் அமெரிக்கா காரி எனும் கதையில்.. அதில் தன் தாய்க்கு அலைபேசியில் பேசும்போது" ஒரே நேரத்தில் இருவரும் பேசுவார்கள் அப்போது அவர்களின் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன" என்று ஆ முத்துலிங்கம் தன்னுடைய அக்மார்க் முத்திரையை பதித்திருப்பார்.

கெடுபிடி நிறைந்த இடங்களில் தான் தவறுகள் மிகவும் மலிவாக நடக்கின்றன என்பார்கள் அதுபோல கருணா எழுதிய கெட்ட குமாரன் கதை பள்ளிக்குத் தாமதமாய் சென்றால் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் 37 வழிகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நிகழ்கிறது அதில் தலைமை ஆசிரியர் நிகழ்வும் மாணவரின் நிகழ்வும் எவ்வாறு மனமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருப்பார்கள்.

ஜா தீபா எழுதிய குரு பீடம் கதை ஆனந்த விகடனில் வெளிவந்து அந்த வாரம் முழுக்க பேசுபொருளானது. மனதை கணக்கச் செய்யும் கதையை பவா அவர்கள் தனக்கே உரிய பாணியில் பல்வேறு மேடைகளில் பேசியது குறிப்பிடத்தக்கது நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய கதை.

பெண்களின் அகவுலகை சொல்லும் போது நிச்சயம் சுந்தர ராமசாமி எழுதிய ரத்னாபாயின் ஆங்கிலம் தவறாமல் இடம்பெறும் கதைகளில் ஒன்று பெண்களின் உலகம் நுட்பமானது என்பதனை காட்டிட அந்த கதை ஒன்றே போதுமானது. அதேபோல ஜெயகாந்தனின் அந்தரங்கம் புனிதமானது கதையை பள்ளி நாட்களில் படித்தது மீண்டும் படித்து நினைவூட்டியது அந்த காலத்திற்கே சென்று வந்த உணர்வைத் தந்தது. 

இந்த தொகுப்பில் 25 கதைகள் உள்ளன. நாம் வாசித்து அறியும்போது கிடைக்கும் உணர்வை விட கதை சொல்ல மூலம் கேட்டு அறியும்போது நம்மளுடைய கற்பனை இன்னும் அதிகமாக பரவும். நம்மை அந்த மூல வேர்களுடன் நம்மை இணைத்து பார்க்க செய்யும். அவரது குரலில் கேட்கும் போது நம்முடைய உள்ளத்தில் புதிய உணர்வுகளை தோற்றுவிக்கும். அவரின் குரல் அனைவரையும் ஈர்த்தது நம் மனதில் எவ்வாறெல்லாம் அந்த கதை இடம்பெற வேண்டும் என்பதை நம் வழியே அதை உருவகித்து இருப்பார் .இந்த கதைகளை எல்லாம் கேட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தகமாக்கும் வகையில ஈடுபட்டதற்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம் 38


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-15
பக்கங்கள் -384
நாள்-7

பவா சொன்ன கதைகள்
-பாரதி கண்ணம்மா

பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களிடம் இரு, ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் பல்வேறு பாடல்கள் பாடினாலும் கூட்டத்தில் யாரேனும் ஒருவர் ஏதாவது ஒன்றை பாடச் சொல்லிக் கேட்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்று அவர் உற்சாகமாய் பதில் சொன்னார். நான் அப்போதும் முதன்முறை  மைக்கின் முன் நின்று பாடுவது போல உணர்ந்து பாடுவேன் .ஏனெனில் கலைஞனுக்கு அயர்ச்சி இருக்கக் கூடாது. எதிரில் இருப்பவருக்கு அது புதிதாய் இருக்கும். நமக்கு அந்த அலுப்பு வரவே கூடாது என்பார். இது பாவா அவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். மேடைகளில் கதைகளை சொன்னாலும் பல்வேறு இடங்களில் வாசகர்கள் அந்த கதைகளை அவர் வாயிலாக கேட்கும் போது அதே உற்சாகத்துடன் சொல்லுவார்.

அவரின் குரலும் ஒரு ஸ்லாங்கும் அந்த கதைக்கு புதிய வடிவத்தை சேர்க்கின்றன. முதல் கதையான யானை டாக்டரில் அவருக்கே உரிய வடிவத்தில் அதை சொல்லி இருப்பார் படிக்கும்போது அவருடைய குரல் நன்கு கேட்கிறது. எனக்கு பிடித்தது அந்த செந்நாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கே யின் மனநிலை தான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி விலங்கு குறித்த அச்சம் இன்றி உயிரை பணயம் வைத்து அவர் செய்திருப்பார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறம் தொகுப்பு வந்தவுடனேய முதலில் படித்தது யானை டாக்டரை தான்.

கந்தர்வனின்" தான் 'கதையை பவா சொல்லித்தான் நான் நேரடியாக கேட்டு இருக்கிறேன். அவர் சொல்லும்போதே அடுத்து என்ன என்ன என்று நம்மை எதிர்பார்க்க வைக்கும். இறுதியில் மனிதாபிமானத்தோடு நமக்கு கந்தர்வனின் மீதும் மரியாதையும் வரும். அவர் எழுதிய தொகுப்பு நூலை வம்சி பதிப்பகம் தான் கொண்டு வந்தது. ஒவ்வொரு கதையுமே அட்டகாசமாக இருக்கும். கந்தர்வனை அவர் உச்சி முகர்ந்து பாராட்டும் போது நாமே அந்த கலைஞனுக்கு அருகில் இருந்து மரியாதை செய்தது போல் இருக்கும்.

இலங்கைப் பெண்ணுக்கும் வியட்நாம் ஆணுக்கும் இடையில் உருவாகும் குழந்தை அமெரிக்காக்காரியாக பிறக்கிறதா என்பதை ஏக்கத்துடனும் வலியுடனும் இறுதியில் மன மகிழ்வுடன் கதையை முடித்து இருப்பாரா முத்துலிங்கம் அவர்கள் அமெரிக்கா காரி எனும் கதையில்.. அதில் தன் தாய்க்கு அலைபேசியில் பேசும்போது" ஒரே நேரத்தில் இருவரும் பேசுவார்கள் அப்போது அவர்களின் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன" என்று ஆ முத்துலிங்கம் தன்னுடைய அக்மார்க் முத்திரையை பதித்திருப்பார்.

கெடுபிடி நிறைந்த இடங்களில் தான் தவறுகள் மிகவும் மலிவாக நடக்கின்றன என்பார்கள் அதுபோல கருணா எழுதிய கெட்ட குமாரன் கதை பள்ளிக்குத் தாமதமாய் சென்றால் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் 37 வழிகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நிகழ்கிறது அதில் தலைமை ஆசிரியர் நிகழ்வும் மாணவரின் நிகழ்வும் எவ்வாறு மனமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருப்பார்கள்.

ஜா தீபா எழுதிய குரு பீடம் கதை ஆனந்த விகடனில் வெளிவந்து அந்த வாரம் முழுக்க பேசுபொருளானது. மனதை கணக்கச் செய்யும் கதையை பவா அவர்கள் தனக்கே உரிய பாணியில் பல்வேறு மேடைகளில் பேசியது குறிப்பிடத்தக்கது நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய கதை.

பெண்களின் அகவுலகை சொல்லும் போது நிச்சயம் சுந்தர ராமசாமி எழுதிய ரத்னாபாயின் ஆங்கிலம் தவறாமல் இடம்பெறும் கதைகளில் ஒன்று பெண்களின் உலகம் நுட்பமானது என்பதனை காட்டிட அந்த கதை ஒன்றே போதுமானது. அதேபோல ஜெயகாந்தனின் அந்தரங்கம் புனிதமானது கதையை பள்ளி நாட்களில் படித்தது மீண்டும் படித்து நினைவூட்டியது அந்த காலத்திற்கே சென்று வந்த உணர்வைத் தந்தது. 

இந்த தொகுப்பில் 25 கதைகள் உள்ளன. நாம் வாசித்து அறியும்போது கிடைக்கும் உணர்வை விட கதை சொல்ல மூலம் கேட்டு அறியும்போது நம்மளுடைய கற்பனை இன்னும் அதிகமாக பரவும். நம்மை அந்த மூல வேர்களுடன் நம்மை இணைத்து பார்க்க செய்யும். அவரது குரலில் கேட்கும் போது நம்முடைய உள்ளத்தில் புதிய உணர்வுகளை தோற்றுவிக்கும். அவரின் குரல் அனைவரையும் ஈர்த்தது நம் மனதில் எவ்வாறெல்லாம் அந்த கதை இடம்பெற வேண்டும் என்பதை நம் வழியே அதை உருவகித்து இருப்பார் .இந்த கதைகளை எல்லாம் கேட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தகமாக்கும் வகையில ஈடுபட்டதற்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

இயற்கையும் இயற்கையின் விதிகளும் இருளுக்குள் கிடந்தன/ “நியூட்டன் பிறப்பதாக” என்றார் கடவுள், எல்லாம் வெளிச்ச மாயிற்று.’ (அலெக்ஸாண்டர் போப் எழுதிய, நியூட்டனின் கல்லறை வாசகம்)-ஆசை

Sunday, 30 March 2025

சகுனங்கள் சகுனங்களாகவேமறைந்து விடுகிற வாழ்வில் நீ எனக்காக அழுகிற கண்ணீரில் அன்பின் உப்பு இவ்வளவு கரிக்க வேண்டாம்..-நேச மித்ரன்

‘எலி’ என்று ஒரு சிறுகதை. மிகவும் ரசனையாக எழுதப்பட்ட கதை அது. ஓர் எலியைக் கொல்வதற்காக ஒருவன், சூடாக அப்போதுதான் போடப்பட்டுக்கொண்டு இருக்கும் மசால் வடை ஒன்றை வாங்கிக்கொண்டு வருவான். ‘இதை நான் தின்பதற்காக வாங்குகிறேன் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஓர் எலியைக் கொல்வதற்காக வாங்கிப் போகிறேன் என்று தெரிந்தால் வருத்தப்படுவானோ?’ என்று அவன் மனசுக்குள் நினைத்துக் கொள்வான். எலிப்பொறியில் வடையைப் பொருத்தி வைத்துவிடுவான். மறுநாள் காலை எலி கழுத்து நசுக்குண்டு இறந்திருக்கும். அதன்பின் அசோகமித்திரன் கடைசி வரியாக எழுதியிருந்ததுதான் ரொம்ப டச்சிங்! ‘அந்த வடை துளியும் தின்னப்படாமல் முழுசாக இருந்தது கண்டு அவன் மனம் கலங்கியது’ என்று எழுதியிருப்பார். சாகிற எலி கடைசி நேரத்தில் அந்த வடையைச் சுவைத்துவிட்டாவது சாகக் கூடாதோ! பாவம், அதற்குக் கொடுப்பினை அவ்வளவுதான்! #அசோகமித்திரன்

Saturday, 29 March 2025

கலீல் ஜிப்ரானின் இக்கவிதை தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. எதிர்மறை கருத்தையும் நேர்மறை கருத்தாக மாற்றவல்லது. எண்ணமே வாழ்வு! நேர்மறை எண்ணங்களைக் கொண்ட மனிதனுக்கு என்றுமே தோல்வி கிடையாது.பயம்======சமுத்திரத்தில்சங்கமிப்பதற்கு முன்புசஞ்சலப்பட்டு நிற்கிறது நதி!சர்வ நாடியும் துடிக்க பயந்து நடுங்குகிறது சாகப் போவதை நினைத்து !நடந்து வந்த பாதையைநினைவலைகளில் அசை போடுகிறது நதி !மலைமுகட்டில் தொடங்கிகாடுகளில் நுழைந்துகிராமங்களில் புகுந்துபாதைகளில் வளைந்து நெளிந்துநெடுந்தூரம் கடந்து..நிறைவேற்றிய சாகசப்பயணம் அன்றோ!கண்முன்னே இப்போதுகாட்சி தருகிறதுபரந்து விரிந்த பெருங்கடல் !கலந்து விட்டால் கணப்பொழுதில்கரைந்து காணாமல் போய் விடுவோம்என்ற யதார்த்தம் நதிக்கு நன்கு புரியும் !வேறு வழி என்ன உண்டு இப்போது?‘கறந்த பால் முலைப் புகாகடைந்த வெண்ணெய் மோர் புகா’புறப்பட்டு வந்த பாதைக்குபோக முடியாது நதியால் !நதிக்கு ‘ரிஸ்க்’' எடுப்பது‘ரஸ்க்’ சாப்பிடுவதைப் போல !துணிந்து ஒரு முடிவெடுத்தால்தான்பயத்தை வெற்றி கொள்ள முடியும் !நதிக்கு யதார்த்தம் நன்கு புரியும்பெருங்கடலில் கரைந்து நாம் இப்போதுகாணாமல் போய்விடுவோம் என்று!மாறாக....நாமே சமுத்திரமாக இப்போது உருமாறிசாகசம் செய்யப் போகிறோம் என நினைத்துதனக்குத்தானே பெருமிதம் கொள்கிறது !துணிந்து கலந்து ஜீவநதி சமுத்திரமாகிறது!மூலம் : கலீல் ஜிப்ரான்மொழிபெயர்ப்பு : #அப்துல்_கையூம்

புத்தகம் 35


30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-12
பக்கங்கள் -568
நாள்-5

கிரண வாசல்
-தி.மு அப்துல் காதர்

பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் அனுபவங்களையும் தன் கவிதைகளையும் தான் படித்த விஷயங்களையும் சமூக மாற்றத்திற்கான கருத்துகளையும் உள்ளடக்கிய கட்டுரை தொகுப்பாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. இந்த புத்தகத்தில் உள்ள 52 தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றன, சிந்திக்க வைக்கின்றன. மூடநம்பிக்கையை பற்றி சொல்லும் போது நாட்டின் சாமியார்கள் அதிகம் பெருத்து விட்டனர். அதற்கு தன்னுடைய நகைச்சுவை பாணியில் மூடநம்பிக்கை முற்றியதால் சாமியார்கள் கதவை திற காற்று வரட்டும் என்கிறார்கள். இவர்கள் மடத்தில் கதவைத் திறந்தால் காற்று வருவதில்லை பெண் வருகிறார் என்று எள்ளலுடன் கூடிய பார்வை நமக்கு முன் வைக்கிறார்.

ஒரு கட்டுரையானது புறவுலக எதார்த்தத்தின் விளைவாக அகத்தில் ஏற்படும் சந்தேகங்களை காட்சிகளை கேள்விகளை வெவ்வேறு தளங்களில் புதிய அனுபவத்தை ஒவ்வொரு கட்டுரை வாயிலாக நமக்கு தந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் பெண் இருப்பாள் அதாவது உணவுக்கு சுவையூட்டுவது உப்பு எங்காவது துருத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரிகிறதா? உணவின் அனைத்து அணுவிலும் உப்பு கரைந்து இருக்கிறது. அதுவே சுவையை தீர்மானிக்கிறது என்று புதிய வடிவத்தில் இந்த விளக்கத்தை நமக்கு தருகிறார்.

தை பிறந்தால் வலி பிறக்கும் என்ற கட்டுரையில் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமையும் விலைவாசி உயர்வும் விவசாயம் நிலங்கள் பாழ்படுவதையும் பற்றி குறிப்பிடுகிறார் .அம்மா /அடுக்கு மூட்டு/ குளிராவது காய்ந்து கொள்கிறோம்/ என்ற இளம்பிறையின் கவிதை மேற்கோள் காட்டி விவசாய குடும்பங்களில் இன்னும் வறுமை வாட்டிக் கொண்டிருப்பதை நமக்கு சொல்கிறார் .அதோடு விவசாயம் குறித்த கவிதைகளையும் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விவசாயிகளுக்கான போராட்டங்களையும் துயரங்களையும் சொல்லிவிட்டு மாட்டுப்பொங்கல் சில இடங்களில் மாட்டையே பொங்கல் வைத்து விடுகிறார்கள். மனிதர்கள் நாட்டையே பொங்கல் வைத்து விடுகிறார்கள் என்று ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் எள்ளளுடன் கூறுகிறார்.

நடைமுறை வாழ்க்கையில் மனித மதிப்பீடுகளில் பெரிய அளவில் வளர்ச்சிதை மாற்ற நிகழ்ந்து கொண்டிருக்கிறது .எல்லாமே சந்தைக்கான உற்பத்தியாக மாறிக்கொண்டிருக்கின்றன. மனிதனை நுகர்வோனாக மாற்றும் சக்தி வந்து விட்டது‌.மனிதனே சந்தையாகிப் போனான் என்று கூறுவார்கள். விளிம்பு நிலை மனிதர்களின் துயரங்களை நுணுக்கமான உரையாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

குழந்தைகளுக்கு கற்பித்தல் நிகழ்வு எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதையும் குழந்தைகளை தற்காலத்தில் எவ்வாறு வளர்க்க வேண்டும் முறைகளையும் பற்றி கூறும் போது துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கடுமையாக நடத்தினால் மாணவர்கள் கற்க மாட்டார்கள் குழந்தைகளோடு குழந்தையாக மாறும் போது தான் கற்றுக் கொள்வார்கள் என்று கூறி உதாரணத்திற்கு கலியில் ஜிப்ரானின் கவிதை ஒன்றை சொல்லும்போது பெற்றோர்களுக்கான கவிதையாக அது அமைகிறது அது என்னவென்றால் 

 படுக்கையில் தூங்கும் பிள்ளைகளை 
பள்ளிக்கு அனுப்ப தயவுசெய்து 
முதுகில் அறைந்து எழுப்பாதீர் 
கன்னத்தில் முத்தமிட்டு எழுப்புங்கள் என்று குறிப்பிட்டார். அகமும் புறமும் சுத்தமாக்கி அரும்புகளை அடைய அரும்புகளை ஆயத்தம் செய்வோம் என்று அந்த கட்டுரை முடிகிறது. 

சுதந்திர இந்தியாவின் அரசு உருவானதற்கு முன்பே ஒரு நவ பாரதி சிற்பியாக விளங்கியவர் திப்பு சுல்தான். மதச்சார்பற்ற ஒரு  அரசின் முன் வரைவு திட்டமாகவே அவரின் ஆட்சி விளங்கியது என்கிறார். திப்பு சுல்தான் தன் பிரதமர் அமைச்சராக பூரணைய்யா என்ற பிராமணரை நியமித்திருந்தார். இந்த நல்லிணக்க ஆட்சியை நீட்சியாக அடையாளமாக வேலூரில் இருக்கும் கோட்டை விளங்குகிறது. கோட்டைக்குள் திப்புவின் வாரிசுகளின் கல்லறை சதுக்கத்தில் அவர் பிள்ளைகளின் கல்லறைகளோடு பூரணைய்யாவின் மகளின் கல்லறையும் சேர்ந்து இருக்கிறது. இதனை படிக்கும் போது உண்மையில் புதிய செய்தியாக இருந்தது.

கஸல் என்ற அரபி பதத்துக்கு பொருள் பெண்களிடம் பேசுதல் காதல் மொழி பேசுதல் என்பது ஆகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் ஏற்படும் விரக வேதனை குறித்தும் பாடப்படும் ஒரு பாவினம் தான் கஸல். முதல் இரண்டு அடிகளுக்கு மத்தலா என்றும் இறுதி இரண்டு அடிகளுக்கு மக்தா என்றும் பெயர். 15க்கும் குறைவான அடிகள் இடம் பெற்றிருக்கும். பாடல்கள் மொழி அமைப்பு பூரணமாக இருக்க வேண்டும் தரமற்ற சொற்கள் இருக்கவே கூடாது. இந்த இலக்கண விதிகளின் படி கசல்கள் பாடியுள்ளனர். சிலர் அதனை உடைத்தும் வேறு பல விஷயங்களை சேர்த்து பாடியுள்ளனர். கஸல் கவிதைகளின் உள்ளடக்கம் மனித காதல் மட்டுமல்லாது இறைநேய காதலும் பாடுபொருள் ஆகிறது என்பதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்

ஈசலுக்கு சிறகு முளைத்தது போல நம் வாழ்க்கை அவசர அவசரமாக போய்க்கொண்டிருக்கிறது. அதனை தீர்க்கதரிசனமாக அண்ணா அவர்கள் இன்றைய பொழுது இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தின் கரித்தாள் நகல்கள் ஆகிவிட்டனர். ஆம் கரித்தாள் நகல்கள் ஆகிவிட்டனர் ஆனால் அதிக பிழையுடன் கூடிய நகல்கள் என்று கூறுகிறார்.

ஒவ்வொரு கட்டுரைகளிலும் அறிய கருத்துக்களை மிக இயல்பான நடையுடன் மேற்கோள்கள் வாக்கியங்களை சொல்லியும் அந்த கருத்தினை முழுமையாக நம் மனதில் பதிய வண்ணம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Expiry date நெருங்குவதால்Emergency-யாய்மனிதம் நிரப்பி வாழ்வோம் மானிடா!!-ரா.பார்த்திபன்

புத்தகம் -34


30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-11
பக்கங்கள் -124
நாள்-5

அழல் பழுத்த கனி
-தமிழில் கோ.கமலக்கண்ணன்

பார் லாகர்க்விஸ்ட் எழுதிய பராபாஸ் ஒரு புகழ்பெற்ற நாவல். தமிழில் அழல் பழுத்த கனி என மொழி பெயர்ப்பு வந்துள்ளது.இதன் தலைப்பு அழல் பழுத்த கனி என்பது பழுத்த வாழைப்பழத்தை குறிக்கும்.

இந்நாவல் பராபாஸ் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது. பராபாஸ் என்பவர் பைபிள் கதையில் குறிப்பிடப்படும் ஒரு கொள்ளையன்.நாவல் இயேசுவும் அவருடன் இருந்தவர்கள் சிலுவையில் அறையும் காட்சியுடன் துவங்குகிறது. நான்காவதாக சிலுவையில் அறைய இருந்தவன் தான் பராபாஸ்.மூவரின் இறப்பையும் கண்ணால் பார்க்கிறான்.தன்னுடைய குற்றத்திற்க்கான தண்டனை பெறவில்லை என்பதால் குற்றவுணர்வில் இருந்தான்.

 இயேசு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, ரோமன் அதிகாரிகள் யூத மக்களிடம், இயேசுவையா அல்லது பராபாஸையா விடுதலையாக்க வேண்டும் என்று கேட்டனர். மக்கள் பராபாஸை விடுதலையாக்குமாறு கோரிக்கை வைத்தனர், இதனால் பராபாஸ் விடுவிக்கப்பட்டு இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

இந்த நாவல், பராபாஸின் வாழ்க்கையை அதன் பின்னணியில் விவரிக்கிறது. சிலுவைப் போராட்டத்தைக் கண்டு கொண்ட பராபாஸ், இயேசுவின் இறப்பால் மனதளவில் பதற்றம் அடைகிறார். அவர் குற்ற உணர்ச்சியில் துயரமடைந்து, நம்பிக்கையற்றவனாக மாறுகிறார். ஏற்கனவே கடவுளில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், இயேசுவின் மரணம் அவரது மனதில் குழப்பத்தையும், தேடலையும் ஏற்படுத்துகிறது.

நாவல் பராபாஸின் மனஅழுத்தத்தையும், பாழான வாழ்க்கையையும், கடவுள் பற்றிய அவனது சந்தேகத்தையும் சித்தரிக்கிறது. பராபாஸ், இயேசுவின் சீடர்களையும், அவரை நம்பிய மக்களையும் சந்திக்கிறார். ஆனாலும் அவர் முழுமையாக தெய்வ நம்பிக்கையை ஏற்க முடியாமல் தவிக்கிறார்.இறை நம்பிக்கையில் சந்திக்கும் ஐயத்தையும்,கடவுள் பற்றிய கேள்வியையும் முன் வைக்கிறது.

நம்பிக்கை! கண் முன்பு சிலுவையில் தொங்கி உயிர்நீத்த மனிதன்மீது எப்படி நம்பிக்கை கொள்வது என சராசரி மனிதனின் ஐயத்தை கூறுகிறது பாத்திரம்.சுரங்க்த் தொழிலாளியாய் ஈடுபட்டு ஐம்பது வயதாகும் போது ஒரு நண்பன் கிடைக்கிறான்.பஸஹாக்குடன் உரையாடுகிறான் பராபாஸ்.சிலுவையில் அறைந்த இடத்துக்கு சென்று பார்க்கிறான்.இப்போது ஸஹாக்கும் அவனும்.கடவுள்.குறித்து உரையாடுகிறார்கள்.இரண்டாம் முறையாக ஸஹாக் சிலுவையில் கொல்லப்படுவதைப் பார்க்கிறான்.

அதற்கு பின் என்ன என்பது முடிவு. இந்நாவலின் பெரும்பலம் கோ. கமலக்கண்ணனின் மொழி பெயர்ப்பு என்பேன். அழுத்தமான மொழியில் இயல்பான நடையில் அட்டகாசமான வாசிப்பு உணர்வு தந்தது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 28 March 2025

தன்னடக்கம் என்பது பல நேரங்களில் தற்புகழ்ச்சிக்கான சுயவிளம்பர யுக்தியாக இருக்கிறது.-ஆண்டன் பெனி

புத்தகம் 33


30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-10
பக்கங்கள் -224
நாள்-5

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன
-வழக்கறிஞர் த. ராமலிங்கம்

10 ஆண்டுகளுக்கு முன் திருப்பூருக்கு புத்தகத் திருவிழாவில் பட்டிமன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அப்போது நடுவராக பங்கேற்றவர்தான் திரு ராமலிங்கம் அவர்கள். பட்டிமன்ற பேச்சின் ஊடே இலக்கிய நயம் அதிகம் பயன்படுத்தி காண்போர் அனைவரையும் கட்டிப்போட்ட அவரின் பேச்சினை தொடர்ந்து அவருடைய புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். கண்ணதாசன் குறித்து அவர் எழுதிய புத்தகம் மற்றும் இலக்கிய புத்தகங்கள் அனைத்திலும் சேர்ந்த வாசிப்பாளரின் உணர்வு வந்த புத்தகத்தில் பரிமளிக்கும். இந்த புத்தகம் நமது நம்பிக்கை இதழில் தொடராக வந்த மனித சிந்தனைகள் குறித்த 30 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன.

மனித மனங்கள் எப்போதும் பலம் மற்றும் பலவீனங்களால் நிரம்பியது தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும் முடியும் தட்டிக் கொடுத்து அதனை அலைக்கழிக்கவும் முடியும். ஆக நல்ல சொற்கள் விதைகள் போல் மனதில் விழுந்தால் தான் நல்ல எண்ணங்கள் வளரும். தன்னம்பிக்கையுள்ள மனிதர்கள் நன்கு வாழ்வார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அதீத தன்னம்பிக்கை இருப்பது over confident இந்த காலத்தில் மாறி விடுகிறது. அதீத நம்பிக்கை சில சமயம் அலட்சியமாகவும் மாறிவிடுகிறது. அளவோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் அமுதமும் கூட விஷம் தான் என்றும் பழமொழி நினைவுக்கு வருகிறது. அதனை குறித்த திருக்குறளையும் கூறி புத்தரின் வரிகள் இதற்கு பொருத்தமாகச் சொல்லி இருப்பார் 
Anything in excess is poison.

நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எப்போதும் மேலோங்கி இருந்தால் நட்பு நிலைப்பதில்லை. திரைப்படங்களில் காட்டப்படும் மிகப்பெரிய மரங்கள் சிறு காற்றுக்கும் சாய்ந்து விழுவதைப் போல அவை விழுந்து நொறுங்குகின்றன. காட்சிப் பொருளாக மட்டுமே உருவாகும் அவை அதனால் தான் காற்றின் வேகத்துக்கு கூட நிற்பதில்லை என்ற எளிய உண்மையை ஆழமான கருத்துக்களில் விவரிக்கிறாரீ. எந்த உருவமும் அப்படித்தான் மனதில் உண்மையும் பழகுபவர் மீது அக்கறையும் இருந்தால் மட்டுமே உறவுகள் ஓங்கி நிலைக்கின்றன என்கிறார்.

சுய ஆய்வு என்பது நம்மை நாமே ஆய்வு செய்து கொள்வது கள ஆய்வு என்பது நமது சூழலை சுற்றி இருப்பவரை ஆய்வு செய்வது இவை இரண்டும் சரியாக இருப்பது மிகவும் அவசியம். எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை செய்ய வேண்டி உள்ளது. அப்படி செய்தால்தான் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பாக அமைகிறது. உறங்கி எழுந்தவுடன் உறங்கச் சொல்லும் முன்பும் செய்து கொள்ளும் இந்த சிந்தனைகளை சரியாகவே நம்மை நாமே செய்து கொள்ளும் முடிவு இதற்கு உரிய குறளாக 

"சொல்ல பயன்படுவது சான்றோர் ;கரும்பு போல் கொல்ல பயன்படும் கீழ் என்னும் குறளை மேற்கோள் சொல்கிறார்.

சாறு எடுப்பது என்பது சாதாரண வேலை அன்று. கீழ் மக்கள் என்று சொல்வதற்கு காரணம் கரும்பிலிருந்து சாறு எடுப்பது போல் எடுத்தால் தான் அவர்களிடம் நல்லது நடக்கும் இல்லை எனில் நடக்காது .நீ சொல்ல பயன்படுபவனா அல்லது பிழிந்து எடுத்தால் மட்டும் பயன்படும் கரும்பு போன்றவனா? உன்னை நீயே ஆய்வு செய்து கொள் என்று வள்ளுவன் சொல்வதாக சொல்கிறார். சுற்றி இருப்பவர்களில் இந்த இரண்டு விதமான மனிதர்களுடன் தான் நாம் காலம் தள்ளுகிறோம்.

நாளெல்லாம் வினை செய் என்கிறார் பாரதி தனது புதிய ஆத்திச்சூடி அப்படியானால் எப்போதும் இலக்கை நோக்கி முயன்று கொண்டே இரு அதுதான் முன்னேற்றத்திற்கான வழி பொருள் .நேரத்தை எல்லாம் வீணடிக்காமல் தூக்கமும் ஓய்வும் வீணாகும் நேரம் தான் எடுத்துக் கொள்ளப்படும். இலக்கை நோக்கி தொடர் முயற்சிகள் நமது நேற்றைய நாளை விட இன்றைய நாளை உயர்ந்ததாகவும் சிறந்ததாகும் ஆக்க வேண்டும் என்கிறார். உயிரே போவது என்பது எளிதல்ல ஒவ்வொரு நொடியும் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்க வேண்டும். 

நிறைய தன்னம்பிக்கை கருத்துக்கள் திருக்குறள் சங்க இலக்கியங்கள் வாழ்வியல் மேற்கோள்கள் என அனைத்தும் இந்த சிறு நூலை சுவாரஸ்யமான நூலாக வாசிக்க வைக்கிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, 27 March 2025

இந்தியாவில் மட்டும் தான் பெற்றோர் சாகும் வரை பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளது வாழ்வையும் சேர்த்து தானே வாழ்வார்கள்-பிருந்தா சேது

30நாள்வாசிப்புப்போட்டி#25RM055புத்தகம்-8பக்கங்கள் -180நாள்-4தலைமை தாங்க -டாக்டர் கேரன் ஒடாஸோதலைமை பண்பு சார்ந்த புத்தகம் இது. வெற்றிகரமான தலைவரை உருவாக்கும் அதிசய மந்திரம் எதுவும் இல்லை என்பதனை முன்னுரை யிலேயே ஆசிரியர் கூறுகிறார். நாளைய தினம் சிறப்பாக அமைவதற்கான யோசனையை சொல்லி.. தலைவராக்க முடியும் அல்லது தலைமை பண்பை பெறுவதற்கான நம்பிக்கையை இந்த புத்தகம் தரும் என்கிறார். இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் நாம் எங்கே இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வழிகாட்டுகின்றன. பல்வேறு வகையான அனுபவங்களை பெற உதவுகின்றன.தலைமை பண்புக்கான சிந்தனையை பொறுப்பான பதவியை அலங்கரிப்பதற்கு முக்கியமாக இருக்கும். அடிப்படை விதிகளாக வேலை செய்யும் பழக்கமும் தலைமை பண்பை கட்டமைப்பதற்காக செய்யும் நோக்கமும் வழிமுறையும் மற்றவர்களோடு உறவாக இருப்பது கவனத்தை மேம்படுத்துவது என்ற எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.மேலாண்மையை பொறுத்தவரை சரியான தேர்வு சரியான தீர்வு என்பார்கள். நல்ல ஊழியர்களை தேர்வு செய்வதற்கான குறிப்புகளை தருகிறார் .அதே போல் தலைமை ஏற்கும்போது ஏற்படும் குறைகளான காலக்கெடு, நம்முடைய ஈடுபாட்டை நாமே சரி செய்வது, முடிவெடுப்பதில் தெளிவாய் இருப்பது ,செலவை கண்காணிப்பது குழுவை எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட வைப்பது என்பது பற்றி எல்லாம் விரிவாக ஒவ்வொரு ஃபார்முலாவாக விவரிக்கிறார்.பல்வேறு மேற்கோள்கள் இந்த புத்தகத்தின் தலைப்புக் கேட்ப சுவாரசியமாக்குகின்றன .அதில் ஒன்று வெற்றிகரமான அமைதியான தலைமை என்றால் அது ரூஸ்வெல்ட் சொல்வது போல.. அமைதியான பேச்சும் நீண்ட தடியும் வைத்திருப்பதாகும். நீண்ட தடி என்பது பலமும் உறுதியும் இணைந்தது. நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதும், அங்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக யோசித்து வைத்திருந்தால் அதை வெளியே சொல்லாமல் அமைதியாக அந்த காரியத்தை செயல்படுத்தி காட்ட வேண்டிய பிறகு சொல்லலாம் என்கிறார்‌.தலைவனுக்கான முக்கிய பண்பாக புதுமை செய்ய அல்லது புதுமையான செயல்களை செயல்படுத்த எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பிறரின் ஆலோசனைகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்த வேண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட யோசனைகளை ஆராய்ந்து நல்லதொரு யோசனையை தேர்ந்தெடுப்பது. உங்கள் வயிற்றிலிருந்து நீங்கள் சரியாக மூச்சு விடுவீர்கள் ஆனால் உங்களுக்கு உத்தரவிடும் தொனி கிடைக்கும் என்கிறார். தலைவனுக்குரிய முக்கிய அம்சமாக உத்தரவிடும் பணி அல்லது கட்டளை செய்து அதனை செயல்படுத்துவது அதற்கான சாதுரியம் உங்களுடைய பேச்சில் தான் இருக்கிறது.மேடையில் நடிக்கப் போகும் நடிகர்கள் ஒப்பனை அறையில் காத்திருக்கும் போது ஒரு கலந்துரையாடல் கலந்து கொண்டு பேசுவார்கள். தங்களை தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கும் அறைக்கு கிரீன் ரூம் என்று பெயர். அவர்கள் அரங்கத்துக்குள் நடந்து வரும்போது நிகழும் மாற்றம் அபாரமானது. அவர்கள் தங்கள் பாத்திரங்களை இயக்கும்போதோ நிகழ்ச்சிகள் பேசும்போது சட்டென பெரும் ஒளியாக திகழத் தொடங்கி விடுவார்கள். அவர்களுடைய அதிசய உற்சாகம் பார்வையாளர்களை அப்படியே கட்டி போடும். அதுபோலத்தான் தலைவர்களும் தங்களுடைய ஊழியர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் அந்த உன்னத நிலை தான் தலைமைக்கான முக்கிய பண்பு.சக்தி வாய்ந்த அவர்களையே மக்கள் பார்க்கின்றனர் வியக்கின்றனர் இது வியாபாரிகளுக்கு நன்கு தெரியும் .அவர்கள் பொருட்களை விற்க பார்த்தவுடன் நம்பக்கூடிய சரியான பேச்சாளர்களையும் தேர்ந்தெடுத்து துடிப்பாக பேசி மக்களிடம் நன்கு கலந்து விடுவார்கள். ஒருவரின் நடவடிக்கை அழகு போன்ற நுணுக்கங்களை பார்வையாளர்கள் பார்க்க மாட்டார்கள். மாறாக மொத்தமாக எப்படி இருக்கிறார்கள் என்று மட்டும் பார்த்துக் கொள்வார்கள். அந்த பாத்திரம் நம்பும்படியாக இருக்குமானால் பார்வையாளர்கள் அவர் முன்னிலைப்படுத்தும் பொருளையும் நம்புவார்கள். நோக்கத்தை தீர்மானித்துக் கொண்டு வெற்றி பெறுவதில் முன்னோடியாக இருக்க வேண்டும். முக பாவங்களை நல்லதொரு நேர்மறை யுக்திகளை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். கைகளை வைத்துக் கொள்வது கூட எப்படி என்று கூறுகிறார் .கைகளை முன்னால் சாதாரணமாக குவிந்த நிலையில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இருக்கைகளைப் பிடித்துக் கொள்வது போன்ற தேவையற்ற பதற்றங்கள் வெளியே தெரியாது அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிலை அங்கு ஏற்படும்.ஊழியர்களை திறமைகளின் அடிப்படையில் பிரிப்பதற்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு குறைந்த திறமை அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயிற்சியும் ,குறைந்த ஈடுபாடு அதிக திறமை உள்ளவர்களுக்கு சில சலுகைகள் தர வேண்டும். அதிக திறமை அதிக ஈடுபாடு இவர்களிடம் இருந்தால் தைரியமாக பொறுப்புகளை பிரித்தளிக்கலாம் இவர்கள் வெற்றி பெறுவது உறுதி.தலைமை துவத்தில் இத்தனை நுணுக்கங்கள் இருக்கின்றனவா என்று யோசிக்கும்படி சில கட்டுரைகளும் மேற்கோள்களும் வாசிக்கும் போது நல்லதொரு விஷயத்தைத் தெரிந்து கொண்ட திருப்தியை தருகிறது தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம் 30


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-7
பக்கங்கள் -136
நாள்-3

அப்புறம் என்பது எப்போதும் இல்லை
-பிருந்தா சேது

பிருந்தா சேது அவர்கள் எழுதிய புத்தகம் பெண்ணியம் குறித்த பதிவுகளை எளிமையாகவும் அதே நேரத்தில் அன்றாட நிகழ்வில் ஒரு பெண் எவ்வாறு செயல்படுகிறார், சமூகத்தில் அழுத்தம் அவள் மீது எவ்வாறெல்லாம் விழுகிறது என்பதனை இந்த புத்தகத்தில் சொல்லி இருப்பார்.இந்நாட்டின் தலித்தை விடவும் கீழான நிலை என்றால் அது பெண்கள்தான். ஏதோ சில பெண்ணிய ஆண்கள் சமத்துவமாக இருப்பதால் மொத்தமும் மாறிவிட்டதாக அர்த்தம் இல்லை என்று பொதுமைப்படுத்துதலில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்.

வீட்டு வேலையிலும் கூட தியானத்தை கடைப்பிடிக்கலாம். ஏனெனில் சில செயல்களை நாம் ஈடுபாடின்றி செய்யும்போது அதனை மீண்டும் செய்யும்படி ஆகிவிடுகிறது. மனதார இந்த கணத்தில் செய்யும் செயலில் மட்டும் மனதை வைத்து செய்வது கூட தியானம் போன்றது தான். ஏனெனில் மறு பார்வையில் தான் செய்யும்போது விட்டுப் போன எல்லாமே பிடிபடும் அந்த வேலையில் இருந்து மன பதற்றம் விலகி வெறும் பார்வையாளராய் பார்க்க தொடங்குவோம் என்று கூறி பல்வேறு உதாரணங்களை அடுக்குகிறார்.

இன்றைய ஒரு நாளை நீங்கள் தீர்மானியங்கள்; பிறகு ஒவ்வொரு நாளாக அன்றைய தினத்தை மட்டும் தீர்மானியங்கள் என்ற வரி மிகவும் பிடித்தமாக இருந்தது. கொரோனா காலத்தில் பெண்கள் எவ்வாறெல்லாம் அவதிப்பட்டனர் என்பதைச் சொல்லி அது சார்ந்த பதிவுகளை தந்திருப்பார். ஓடிக்கொண்டே இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஓய்வு முக்கியம் என்பதனை வலியுறுத்தி இருப்பார்.

தங்கள் கஷ்டங்களை சொல்லும் போது மிகப்பெரிய தத்துவத்தையும் எளிதில் போகிற போக்கில் சொல்வார்கள் .அது போல இந்த கட்டுரையில் கடவுள் என்னும் இடத்தில் உண்மையில் நன்மை தீமை என்பதெல்லாம் நாமாக ஏற்றுக் கொண்ட பெயர்கள் .விரும்பியது நடந்தால் நன்மை. விரும்பாதது நடந்தால் தீமை என்கிறார். இப்போது என்கிற சலனமான சிறிய கணத்தில், மிகப்பெரிய ஒன்றை ஒருக்காலும் அளவிட்டு விட முடியாது. ஏனெனில் மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சரி என தோன்றுவது நாளை தவறாக இருக்கக்கூடும். தவறு என்பது நாளை சரியாக இருக்கக்கூடும். நிலைத்த தன்மைய எப்போதும் கொண்டிருப்பதில்லை. எல்லாமே அந்தந்த நேரத்தில் உண்மைகள் என்ற உளவியல் பூர்வ பார்வையும்
 இதில் காட்டி இருப்பார்.

பயத்தைப் பற்றி சொல்லும்போது பயத்தின் அவநம்பிக்கையின் காரணமாக எல்லாரையும் சந்தேகிப்பது. ஒரு நாளில் மனதில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட எண்ணங்கள் தோன்றுகின்றன. அத்தனை எண்ணங்களின் பின்னாலும் ஓடி களைத்து உற்சாகமாகி பதறி செத்து உயர்த்து வீழ்ந்து பலூனாக காற்றின் உயரத்தில் பறந்து வெடித்து இப்படி அடுக்கிக் கொண்டே செல்வது களைத்துப் போவதற்கு முக்கிய காரணம் .மனதும் உடலும் எண்ணங்களுக்கு எதிர்வினை புரிந்து புரிந்து அதுதான் நோய்களாக பரிணமிக்கின்றன. எண்ணங்களுடன் நட்பு கொள்ளும்போது அதனால் எந்த வித தீமையும் ஏற்படுவதில்லை என்ற தத்துவத்தையும் இதில் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் எதார்த்தத்தில் என்னதான் அறிவின் துணை கொண்டு அனுபவங்களின துணை கொண்டு முதிர்ச்சியாக சிந்திப்பவன் ஆக இருந்தாலும் மனதில் தேய்த்த முள்ளாக ரத்தமும் செயலும் வர நம் நிதானத்தை சீர்குலைப்பானாக சில இருக்கும் 

*அன்பைச் சொல்ல விரும்புவர்கள் அவ்வப்போது சொல்லி விடுங்கள். தேவைப்படும்போது கிடைக்காதது. தேவையில்லாத போது எவ்வளவு கிடைத்தாலும் வீண் தான். அதற்கு உரிய மரியாதை இருக்காது.

இளம் வயதில் தான் வாசித்து அனுபவங்களையும் பள்ளி வைத்து நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார் இன்று பணியாற்றும் இடங்களில் ஒரு பெண் சந்திக்கும் சவால்களையும் அதனை எவ்வாறெல்லாம் எதிர்கொள்வது என்பதை பற்றி கூறியதோடு ஆங்காங்கே வரும் தத்துவ வரிகள் நமக்கு இந்த புத்தகத்தை மேலும் வாசிக்க தூண்டுகின்றன. வென்றதை விட தோற்றத்தைச் சொல்ல அதிகமான துணிவு வேண்டும். அடித்ததை விட அரை வாங்கியதைச் சொல்ல மன உறுதி வேண்டும். சில தவறுகள் ஈடுகட்டப்படுவதில்லை. அவற்றை அப்படியே கடந்து வர வேண்டி இருக்கிறது ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது எனும் வரிகள் உண்மையில் மனதை தொட்ட வரிகளாகும்.

பெண்ணியம் குறித்த நூல்கள் பொதுவாக பிறரை வசை பாடுவதாக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் ரன்னை பற்றிய சுயமதிப்பீடாகவும் தான் சந்தித்த சவால்களை பற்றியும் சமூகத்தில் பெண்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை பற்றியும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார்.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-29


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-6
பக்கங்கள் -512
நாள்:3

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3
திருக்குறள்

திருக்குறள் புத்தகங்கள் பலவும் தமிழ் மொழியில் வந்துள்ளன. ஆனால் நான் படித்தவற்றில் மிகச்சிறந்த உரையாசிரியராக உரைநூலாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. வள்ளுவத்துக்கு அடிகளார் தரும் புதிய பார்வைகள் பளிச்சிடுகின்றன. பகுத்தறிவு கருத்துக்கள் மூடநம்பிக்கைகளை தகர்த்தெறியும் வார்த்தைகள் அறிவியல் செய்திகள் மேலைநாட்டு தத்துவங்கள் என ஒவ்வொரு திருக்குறளுக்கும் அவர் காட்டும் மேற்கோள்களும் அவர் சொல்லும் வாழ்வியல் உண்மைகளும் நம்மை அடுத்தடுத்த பக்கத்தை நோக்கி வேகமாய் அதே சமயத்தில் சொன்ன கருத்துக்களை அசைபோடும் விதத்திலும் அமைந்துள்ளது.

அடிகளாரைப் பற்றி முதன் மதலில் கேள்விப்பட்டது அவர் மார்க்சியம் பயின்றவர் என்பது தான்.ஒரு முனிவர் மார்க்சியம் பயில்வாரா என்பதுதான் ஆச்சரியம். ஆனால் நூலை படிக்க படிக்க அவர் தரும் தெளவான சிந்தனைகள் ஆன்மீக சிந்தனைகள் என பலதரப்பட்ட விசாலமான பார்வை அவரிடம் உண்டு. 
இந்த நூலில் வாழ்க்கை நலம் ,மண்ணும் விண்ணும், முத்து மொழிகள், திருவள்ளுவர் காட்டும் அரசியல், சிந்தனை மலர்கள், தமிழமுது, இறுதியாக அடிகளார் மடல் என ஏழு பகுதிகளாக விரிந்துள்ளது. ஒவ்வொரு பகுதியில் உள்ள கட்டுரைகளும் ஒரு வாழ்வியல் சிந்தனைகளோடு ஒரு திருக்குறளையும் முன்வைத்து அடிகளார் அவர்களின் சொற்பொழிவாக அந்த கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு என்ற குரளுக்கு பொருள் மட்டும் சொல்லி இருந்தால் போதும். ஆனால் தண்ணீரின் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக வான்மழை பெறுவதற்கு நீர்நிலைகளை பேண வேண்டிய அவசியத்தை குறிக்கிறார்."அவித்தல் என்றால் அழித்தல் அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறை என்று அவித்தல் பக்குவப்படுத்துதல் உண்ண முடியாத கிழங்கு முதலியவற்றை அவிப்பது போல, பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர்உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும் பக்குவம் அடையும் என்று கூறுகிறார்.

பொறாமையை திருக்குறள் அழுக்காறு என்கிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம்.அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீயது என்கிறார்.

"O Beware My Lord of Jealousy" . "அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது" என்பார் காட்டன். 'Envy will sting itself to death' என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை; முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால், தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. "தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்" என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.

நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் 'பாவி' என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.
இதுபோல் ஒரு சாதாரண சொல்லுக்கு மேற்கோள் செல்லும் உதாரணங்களே இந்த குறட்பாவை நம் மனதில் எளிமையாய் பதிய வைக்கிறது.

A in the sweet of the fere shalt than cat Bread" அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல் அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.

"Nothing is free" என்ற வாழ்க்கையை நியதியாக்கு வோம். உழைப்பு - படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு! - நேர்மையான உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்.

இப்படி குறளுக்கு ஆழ்ந்த விளக்கத்தையும் மேலைநாட்டு சிந்தனையில் மேற்கோள் காட்டும் போது அந்த புத்தகம் எவ்வளவு உயர்வானது என்பது எண்ணிப் பாருங்கள்.

மார்க்சீயம், சொற்களுக்குக் காணும்பொருளே வேறு. மார்க்சீய அகராதியில் 'பொருள்' என்றால் தங்கம் - நாணயம் ஆகியவற்றை ஒரு பொழுதும் குறிக்காது. மனிதக் குலத்திற்குப் பயன்படும் தகுதி குறித்தே பொருளுக்கு மதிப்பு என்பது மார்க்சீயத்தின் சித்தாந்தம். திருக்குறளும் 'பொருள்' என்ற சொல்லுக்கும் பொருளாகக் காட்டியது; மனிதகுலம் துய்த்து மகிழ்ந்து அனுபவித்து வாழக்கூடிய, வாழவைக்கக் கூடிய பொருள்களையே. "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" என்ற திருக்குறளுக்கு இதுவே கருத்து. உடல்-உயிர்ப் பிணைப்பில் நடமாடும் மனித உலகம் நெடிதுநாள் வளர வாழ உண்பனவும், தின்பனவும் ஆகிய துய்ப்புப் பொருள்கள் தேவை. அத்தகைய பொருள்களே பொருள்கள் என்பது வள்ளுவத்தின் செழுமையான கருத்து.

உழைப்பாற்றலே மனிதனுக்குரிய ஒரே உடமையாக இருக்க வேண்டும், என்பது மார்க்சீயம். "உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை" என்றே மார்க்சீயம் ஐயத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறது. நமது திருக்குறளும்.

இறுதிப் பகுதியான ஏழாவது பகுதியில் அதிகார வரவுகள் தமிழ்ச்செல்வனுக்கு என்ற கடிதம் எழுதுகிறார். நேரு மகளுக்கு கடிதம் எழுதியது போல தமிழ் மக்களுக்கு திருக்குறளின் கருத்துக்களை கடிதம் மூலம் நமக்கு எடுத்து இயம்புகிறார்.

ஒரு கடிதம் அறிவின் அழகு என்ற தலைப்பில் இப்படி துவங்குகிறது..

வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவு இரு வகையினது. ஒன்று ஆனது அறிதல்; பிறிதொன்று ஆவது அறிதல். ஆனது அறிவதைப் பட்டறிவு என்பர். அதாவது இந்த நொடிக்கு முன்புவரை நம்முடைய வாழ்க்கையானாலும் சரி சமுதாய அமைப்பானாலும் சரி நடந்தனவற்றை அறிதல். இங்கு அறிதலாவது அவற்றின் நடைமுறைகளையன்று. சென்றகால நிகழ்வுகளின் விளைவுகளை அறிதல் அல்லது எதிர்விளைவு களை அறிதல்.

இதன் தொடர்ச்சியாக அறிவைக் குறித்து தான் அறிந்த தகவல்களையும் குறளையும் சொல்லி நல்வழிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இவை யாவும்  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வகையில் தான். ஆற்று நீரில் ஒரு சிறு அளவைத்தான் இதில் பதிவு செய்ய முடிந்தது. இந்த ஊற்று நீரை பருகப் பருக மேலும் அறிவின்பம் பெறலாம் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 26 March 2025

இல்லாததை காட்டுவதற்கு கண்ணாடி இன்னும் கற்றுக்கொள்ளவில்லை தான். -ஜே.பி.சாணக்யா ~

புத்தகம் 27


#Reading_Marathon2025
#25RM055

Book No:27/100+
Pages:360

#30நாள்வாசிப்புப்போட்டி
Day-2

ரைட்டர்
-சி சரவண கார்த்திகேயன்

ரைட்டரின் எழுத்துக்களை 2012ல் டிவிட்டரில் இருந்து வாசித்து வருகிறேன். பேட்ஸ் மேன் எல்லா பக்கத்திலும் ரன் அடித்து ஆடுவது போல்,சமூகம் அரசியல், ஜோக், இலக்கியம்,அறிவியல், நடிகை, வரலாறு, ரசனை என அனைதது ஜர்னரிலும் எழுதக் கூடியவர். நல்ல கேள்வியே நல்ல பதிலின் தாய் என்பது போல் மும்மூர்த்திகள் புத்தகம் இவரின் கேள்வி அறிவை எண்ணி சிலாகித்திருக்கிறேன். ரொம்ப இம்ப்ரஸ் ஆனது தடம் இலக்கிய இதழில்.பெடக்ஸ் பற்றி எழுதியிருப்பார். செம ரைட்டரே. அப்பவே மெசேஜ் செய்து வாழ்த்தினேன். அவரை பத்தி நானே சொன்னா போர் அடிக்கும். இனி அவரை பத்தி அவரே சொல்வதை பார்ப்போம். சுயசரிதை போல் விரியும் புத்தகம். எழுத்தை தீவிரமாய் ரசிப்பவனே நல்ல எழுத்தாளன் ஆவதற்கு உதாரணம்.

சுயபுராணம் தலபுராணம் என இரண்டு பகுதிகளாக புத்தகம் அமைந்துள்ளது சுய புராணத்தில் ஆரம்ப நாட்களில் இருக்கும் வாசிப்பும் எழுத்தாளராகவும் நோக்கமும் குறிக்கோளும் சினிமா, இதழ்கள், இணையம், நேர்காணல் என இப்படி விரிகிறது. தலபுராணத்தில் எழுத்தாளரின் அடுத்த கட்டமாக எழுத்து, கதை சொல்ல்,எழுத்தாளர்களுக்கு உரிய உரிமைகள் கடமைகள்,எழுத்தாளர்களாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள  எடுத்த அனுபவங்களையும் இதில் நமக்கு பகிர்கிறார்.

இன்றும் பலர் எண்ணிக் கொள்வது உயர்கல்வியில் தமிழ் படித்திருந்தால் தான் தமிழ் எழுத்தாளராக முடியும் என்பது இந்த அற்புதங்களை முற்றிலும் உடைத்தவர் சுஜாதா என நீளும் பட்டியலில் நம்முடைய ரைட் தரும் பொறியியல் கல்லூரி மாணவர்தான். சுயம் உண்டே தவிர சரிதம் கிடையாது என ஒப்புதல் வாக்குமூலமும் முன்னுரையில் கொடுத்துள்ளார். தலை பிரசவமான முதல் புத்தகத்தில் இளையராஜா குறித்து எழுதிய அனுபவத்துடன் தான் வாசித்து பிரம்மிப்படைந்த எழுத்தாளர்களை பற்றியும் கூறியுள்ளார். 

துக்கத்துக்கான ஒத்தடமே ஆறுதல் என்று கூறி ஆறுதல் பரிசுகள் எத்தனை ஆறுதலானவை என சொல்ல முடியவில்லை என நான் ஆறுதல் பரிசு பெற்ற அனுபவங்களையும் பகிர்கிறார். உண்மையில் புத்தகம் வெளியிடுவது என்பது பிரசவமான வேதனை தான் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவை வாசகர்களை சென்றடைய வேண்டும் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்க்காத எழுத்தாளனே இல்லை எனலாம். அதே போல் தான் கலந்து கொண்ட கருத்தரங்கங்கள் வாசிப்பாளனாக தனக்கு கிடைத்த அனுபவங்கள் என எழுதுவதற்கு தேவையான உரங்களை புத்தகம் மூலம் தான் பெற்றதாக அவரின் எழுத்துக்களில் காண முடிகிறது.

முகநூலின் அவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பின் வழியே அறிவது அவர் எப்போதும் நடுநிலை தவறிவதில்லை. பலர் சொல்வது போல நடுநிலை என்பது ஏமாற்று வேலை என்பார்கள் ஆனால் அதற்கான விளக்கத்தை அவரே தருகிறார். என் அறிதலில் உண்மை என்னவோ கருத்து என்றால் அதில் என் புரிதலை வந்தடையும் நிலைப்பாடு என்னவோ அதையே எழுதுவேன் அதன் பக்கமே நிற்பேன் என்கிறார். எல்லோருக்குமான இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த பல எழுத்தாளர்களை குறிப்பிடும்போது "எழுத்தில் சுயம்புகள் அரிது ஆனால் அதே சமயம் எழுத்தில் கற்றல் பொதுவாக ஏகலைவன் மார்க்கமாகவே நிகழும்" என்று உரைக்கிறார்.

முதல் குறும்பட அனுபவத்தையும் திரைப்படத்தில் தான் பங்கு கொண்டு நடந்த கசப்பான அனுபவத்தையும் நமக்கு பகிர்ந்துள்ளார். உண்மையில் எவ்வளவு தூரம் எழுத்தாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. மின்னதழில் பெருமாள் முருகன் நேர்காணலை வைத்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்த அனுபவம் திகைப்பூட்டுகிறது.

புனைவு எழுத்துக்களே ஒரு எழுத்தாளர் உருவாவதற்கான களம் என்பதனை கூறி புனைவு எழுத்தில் தான் பெற்ற அனுபவத்தையும் விவரிக்கிறார். கதைகளின் கதை எழுதுவதற்கான முதல் தகுதி வாசிப்பு என்பதனையும் பலர் மறந்து வரும் சூழலில் தன்னுடைய ஒவ்வொரு எழுத்திலும் தான் வாசித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
நான் நினைத்துப் பார்க்கிறேன் அப்போது வலைப்பூவில் அவர் 85 கட்டுரைகள் தான் ரசித்த பகுதிகளை பகிர்ந்தது இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது. அதனை அவ்வப்போது நானும் வாசித்து வந்துள்ளேன்.

பல மாணவர்கள் வளர்ந்து பெரியவரான உடன் ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை பார்ப்பதை தவிர்ப்பார்கள்.ஏனெனில் குழந்தையாய் இருக்கும்போது தான் செய்த குறும்புகளை அவர்தான் பார்த்திருக்கிறார் என்று நினைப்பில்.. அதேபோல் எழுத்தாளர்கள் தங்களுடைய முதல் கதைகளை தொகுப்பில் சிலர் அதனை தவிர்ப்பதை சுட்டிக்காட்டி உதாரணத்திற்கு காகஙகள் பகுதியில் சுந்தர்ராமசாமி தவிர்த்ததைப் பற்றி சொல்லியிருக்கிறார் .உண்மையில் நடைமுறை எதார்த்தத்தில் எழுத பழகிய ஒருவன் முதல் கதை படித்துப் பார்த்தால் சுமாராகத்தான் இருக்கும். தனது புகழை எடுத்து விடுமோ என்று எண்ணத்தில் பலரும் அதனை செய்து விடுவார்கள். ஆனால் ரைட்டர் அவர்கள் முதல் கதை என்பது நம்முடைய முதல் குழந்தை போல நாம் செய்த தவறுகள் நம்முன் தெரியும் என்பதனை சுட்டிக்காட்டியது மகிழ்ச்சி அளித்தது.

*எழுத்தாளனுக்கு மொழி ஆயுதம் அல்ல வாகனம் தான். சிந்தை தான் அவனது ஆயுதம் என்ற வரி மிகவும் ரசிக்க வைத்தது.

சுண்டக்காய் 8 அணா சுமை கூலி பத்து அணா என்பார்கள் அதே போல் தான் எழுதிய புத்தகத்தை மார்க்கெட்டிங் செய்வதும் புத்தக விழாக்கள் நடத்துவதும் மின்னூலின் ஆதிக்கமும் எழுத்தாளர் உரிமைகளை பற்றியும் இதில் எடுத்துரைத்துள்ளார்.
படைப்புச் சுதந்திரம் ராயல்டி பிரச்சனைகள் எழுத்தாளர்களின் கடமைகளாக முன்வைக்கும் கூறுகள் ஆகியவற்றை பற்றி இதில் இணைத்துள்ளார். அவ்வப்போது நேர்காணலையும் பகிர்ந்து புத்தகம் போர் அடிக்காமல் வாசிப்பு அனுபவத்தை தர எண்ணியுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வினை வர வைக்கும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 25 March 2025

#30நாள்வாசிப்புப்போட்டி#25RM055புத்தகம்-3பக்கங்கள் -150உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்-,டாக்டர் கு.கணேசன்உலக நாடுகள் மத்தியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை குறித்த கருத்துக்களை தெரிவிக்கும்படி ஒரு ஆய்வு நடைபெற்றது. ஆனால் அந்த ஆய்வு மாபெரும் தோல்வி அடைந்தது. ஏனெனில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தவர்களுக்கு ஊட்டச்சத்து என்றால் என்னவென்று தெரியவில்லை. ஐரோப்பிய நாட்டு மக்களுக்கு பற்றாக்குறை என்றால் தெரியவில்லை .இப்படி உலக நாடுகள் பலவும் இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதை அறிய முடிந்தது.வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் பற்றாக்குறை உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடு தான் உலகில் மூன்றில் ஒரு குழந்தையின் இறப்புக்கு காரணமாகின்றது .இதுவே பலரின் ஆரோக்கிய வளர்ச்சியை பாதித்து அவர்களை வாழ்க்கை முழுக்க போதுமான பலத்துடன் உழைக்க விடாமல் தடுக்கிறது என்கிறது ஆய்வறிக்கை.மருத்துவர் கு கணேசன் அவர்களின் பெயரை பார்த்தவுடன் புத்தகத்தை வாங்கிவிடலாம். ஏனெனில் அந்த புத்தகத்தில் இடம் பெறும் தகவல்கள் அத்தனை பொக்கிஷம் ஆனவையாக கருதப்படும். இந்த புத்தகமும் அப்படித்தான் வைட்டமின்கள் பற்றிய முழு விவரங்களையும் சிறு குழந்தைகளுக்கு சொல்வது போல் நமக்குச் சொல்லி இருப்பார். 15ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஸ்கர்வி நோய்க்கு மருந்து கண்டுபிடித்த கடற்படையில் மருத்துவராக பணியாற்றிய ஜேம்ஸ்லிண்ட் என்பவர்தான் ஸ்கர்வீ நோயை தடுக்க நிறைய ஆரஞ்சு எலுமிச்சை சாறுகளை சாப்பிட வேண்டும் என ஆலோசனை கூறினார் .அப்போதுதான் நோயை குணப்படுத்த வேண்டுமானால் மருந்து சாப்பிட வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு நோய்க்கு மருந்து தேவை இல்லை, உணவே போதும் என்ற லிண்ட் யோசனையை மக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்பு கல்வியும் நாகரிகமும் வளர வளர தான் வைட்டமின்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் வந்தது.வைட்டமின்கள் என்பவை வேதி வடிவத்தின் படி ஒரு கரிம சேர்மம். நாம் உண்ணும் உணவு பொருளில் கிடைக்கின்ற சத்து பொருள் இவை எந்த சத்தையும் நேரடியாக வழங்குவதில்லை. மாறாக வைட்டமின்கள் கிரியா ஊக்கிகளாக செயல்படுகின்றன. வேகப்படுத்துகின்றன .அதன் மூலம் முதலில் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தேவையான ஆற்றலை பெற்று தருகின்றன.வைட்டமின்களை இரு வகைகளாக பிரிக்கலாம் அவை கொழுப்பில் கரையும் வைட்டமின்களானA,D,E&K தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் மொத்தம் ஒன்பது ஆகும். B1,B2,B3,B5,B6,B7,B9B12 மற்றும் C.என வகைப்படுத்தி உள்ளனர் மேலும் வைட்டமின்களின் வரலாறு அவற்றைக் கண்டறிந்தவர்கள், வைட்டமின்கள் கண்டுபிடித்த கதையினையும் அதன் பின்னால் உள்ள சுவாரசிய அனுபவங்களையும் நம்முடைய பகிர்ந்துள்ளார்.உதாரணத்திற்கு ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் இருந்து கப்பல் பயணம் மேற்கொண்ட எட்வார்ட்ஸ் அவர் பயணம் செய்த கப்பலில் தான் மாலைக்கண் குறைபாடு வந்தது. ஹிப்போக்ரடீஸ் காலத்து சிகிச்சை முறை பின்பற்ற முன்வந்தார். அதாவது எருதுவின் கல்லீரலை அந்த 75 பேருக்கும் தினசரி உணவில் கொடுத்த தொடங்கியதும் மாலைக்கண் நோய் குறைந்தது. அதற்கு பின் வந்தவர்கள் மாலைக்கண் நோய்க்கான சக்தி எதில் உள்ளது என்பதனை அறிய முற்பட்டனர். அதன் விளைவாக ரிச்சர்டு கூன் என்பவர் தாவர உணவுகளில் பீட்டா கரட்டின் எனும் சத்துக்கள் உள்ளது என்றும் அது உடலுக்குள் சென்றதும் வைட்டமின் ஏ வாக‌ மாரி பலன் தருகிறது என்றும் கண்டுபிடித்து 1938 இல் நோபல் பரிசு பெற்றார்.வைட்டமின் கண்டுபிடிப்புகளில் ஒரு சர்ச்சைக்குரிய வைட்டமின் உள்ளது என்றால் அது வைட்டமின் ஈ என்கிறார் .எலிகளில் ஆராய்ச்சி செய்த கலிபோர்னியாவை சேர்ந்த மருத்துவர்கள் எலிகள் கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் வைட்டமின் ஈ தேவை என உறுதி செய்கின்றனர். இதன் மூலம் மலட்டுத்தன்மைக்கு தீர்வு காண முடியும் என நம்புகின்றனர். தினசரி சமையலின சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துதல் குழந்தைக்கு குறைந்தது ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுத்தல் தினமும் சரிவிகித உணவு சாப்பிடுவோருக்கு வைட்டமின் குறைபாடு வருவதில்லை என்கின்றனர். இன்றைய உணவு கலாச்சாரத்தில் செயற்கை உணவுகளை ஏன் உண்ணக்கூடாது என்பதற்கான காரணங்களின் முக்கியமானது சல்பைட் எனும் வேதிப்பொருள் உள்ளது அந்த உணவுகள் உள்ள வைட்டமின் சத்தை அழித்துவிடும் .ஆகவே முடிந்த வரை செயற்கை உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.*வைட்டமின்கள் அதிக வெப்பத்தில் அழிந்துவிடும் எனவே உணவு சமைக்கும்போது அதிக வெப்பம் ஆகாது இதனால் ஏற்கனவே சமைத்த உணவை சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் *உணவுகளை அதிக அளவில் தண்ணீரில் கொதிக்க வைத்தாலும் வைட்டமின்கள் கரைந்து விடும் இந்த மாதிரியான சமையல் முறைகளை தவிர்க்க வேண்டும். *அளவுக்கு அதிகமானால் வைட்டமினும் விஷம் தான். பீட்சா பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளில் வைட்டமின் உள்பட எல்லா சத்துக்களும் மிகையாகவே இருக்கும். இவை உடல் நல குறைபாட்டுக்கு வழிகோலும்.*இந்தியாவில் ஆராய்ச்சி செய்யப்பட்டு இயற்கை உணவில் தயாரிக்கப்பட்டு உலக தரச் சான்றிதழ் பெற்றுள்ள ஸ்பிருலினா என்னும் ஊட்டச்சத்து மாத்திரையை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம் 2(30)


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-2
பக்கங்கள் -112

அன்பின் ஐந்திணை
-க.மோகன் ரங்கன்

ஒரு கணத்தில் மின்னலென விரியும் மனதின் நினைவுகள் திடீரென கதையாக உருப்பெறும் போதும் நினைவுகளை அசைபோடும் போது நம் நெஞ்சில் தங்கி இருந்த  கதைகளை மீட்டுருவாக்கம் செய்யும்போதும் சுவையான மொழியில் பகிரும் வகையில் அமையும் போது அந்த கதை ஒரு சிறப்பான கதையாக அமைகிறது. அந்த வகையில் திரு மோகனரங்கன் அவர்களின் அன்பின் ஐந்திணை கதைகள் அவரின் டைரி குறிப்புகள் போல் பால்ய காலத்தில் நடந்த கதைகளை தற்போது மீட்டூருவாக்கம் செய்வது போல் அமைந்திருந்தது

முதல் கதையான மனம் என்னும் மத்த யானை தன்னுடைய இளமைக்காலத்தில் தனது நண்பன் சேட்டு மற்றும் தனம் இருவரும் விரும்புகின்றனர். அவர்களின் பிரிவில் தனம் வேறொருவருக்கு நிச்சயமாகிறார். இதனை பொறுத்துக் கொள்ளாத சேட்டு நண்பன் கிருஷ்ணாவிடம் புலம்புகிறான். பிரிவின் வாதையை சொல்லும் கதையாக இக்கதை அமைந்துள்ளது."சைக்கிளை மெதுவாக தள்ளிக் கொண்டு நடந்தான் சேட்டு. ஒரு நாளிலேயே ஏழு எட்டு வயசு கூடியவனை போல் ஆகிவிட்டான்" என்று வார்த்தைகளில் விளையாடி இருப்பார் கவிஞர்.

முன்னையிட்ட தீக்கதையும் ஒரு காதல் தோல்வி கதை தான். கல்லூரியில் பயிலும் சேகர் டிராயிங் மாஸ்டரின் பெண்ணிடம் எடுத்த போட்டோ வெளியில் தெரிய ட்ராயிங் மாஸ்டர் ஜிம்காரரை உதவிக்கு அழைக்க அவரும் வந்து மிரட்டி விட்டு சென்றார். திரும்ப பஞ்சாயத்து பேச சென்றவரிடம் ஜிம்காரர் சொல்ல  மீண்டும் சேகரிடம் காதலை விட்டுக் கொடுக்க தூண்டியது. கடைசியில் என்ன ஆனது என்பதே கதை. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் சிரிப்பு வருவது போல் உள்ளது ஆனாலும் அவர்களின் சோக கதை நம்மை விடாமலும் தடுக்கிறது.

சிறுகோட்டு பெரும்பலம் கதையில் காதலர்கள் கருணாநிதி காதல் தோல்வியால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறான் என்ற கதை மனதை அழுத்தும் விதத்தில் இருக்கிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு இதை அவன் செய்ததற்கு தர்க்கபூர்வமான உதாரணம் ஒன்றும் இருந்தது என விவரிக்கிறான் நண்பன். பரமபதத்தில் கனவு ஏணியில் உச்சிப்படி வரைக்கும் என்னை வழிநடத்திச் சென்ற பெண்ணை முடிவில் லௌதீக பாம்பின் வாய்க்கு திண்ண தந்து விட்டு ஆட்டத்தில் தோற்று திரும்பி இருந்த சமயமது இரவின் தனிமைக்கு அஞ்சி அவளவை செய்திருக்கலாம் என அதற்கு நியாயம் கற்பிப்பது போலும் கதை நகர்கிறது.

தன்னுடைய காதலியை குடிகார கணவனை கட்டிக் கொண்ட பிறகு அவளிடம் தன் காதலை தெரிவித்தான் நாயகன். ஆனால் அப்போது மறுத்துவிட்டு பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள் அப்போது நாயகனின் குழந்தைய வாங்கி முத்தமிட்டு திருப்பிக் கொடுக்கிறாள் ஜோதி அட்சத்தில் உன்னை பார்த்த மாதிரியே இருக்கான் உன் பையன் என்கிறாள் வயதுகளையும் வருடங்களையும் கடந்து வந்த அச்சிறுப்பில் முன்னே என்னை சுட்ட நெருப்பில்லை மாறாக தீண்டும் எதனையும் குளிரச் செய்யும் தன்மை இருந்தது அணங்கு கொல் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார்.

வார இறுதியில் தங்கள் நிம்மதிக்காக கொல்லிமலை செல்லும் நண்பர்கள் மலை ஏறும் போது அருவியை நோக்கி சென்று குளிக்க வேண்டும் என நினைத்து ஏறுகிறார்கள். ஏறும்போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் நினைவுகள் கற்பனைகள் அவைகளை அனைத்தும் அசைபோட்டு இறுதியில் நீரினை பார்த்து அவர்கள் பிரமிப்பது தான் கதையாக உள்ளது .இறுதியில் இந்த அருவி இல்லை .ஆறு கடல் ஏரி என நீர் பரப்பை பார்த்தாலும் ஒரு தடவை பார்த்து லயிச்சு போய் நின்னுட்டா அது அன்றோடு தீராது. மறுபடியும் எப்ப திரும்பி வரலாம் ன்னு உங்கள் நினைப்பு நிற்கும் என மாதேஸ்வரன் கூறியது நமக்கும் சொன்னது போல் உள்ளது.

இத்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் மிக எளிமையான நிலையில் உரையாடல் வடிவில் நினைவில் தங்கிய நிஜங்களை நமக்கு பகிரும் வகையில் கதைகள் யாவும் அமைந்திருந்தன. 
"பஸ் புறப்பட்டு போன பிறகும் அது விட்டு சென்றபுகையில் டீசலின் மணம் மிதந்து கொண்டிருந்தது" எனும் வரி போல் ஆங்காங்கே வரும் வரிகள் மெல்லிய உணர்வை தட்டி எழுப்பும் படி உள்ளது

தொடர்ந்து வாசிப்போம் 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 21 March 2025

ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதும் வரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதல்ல. இனி என்ன செய்வதென்று தெரியாமல், இருண்மைக்குள் மூழ்கி மூச்சுத் திணறும்போது, வெளிச்சம் நனைந்த கை ஒன்று நம்மை நோக்கி நீட்டப்படுவது..!-ஈரோடு கதிர்

புத்தகம்-23


#Reading_Marathon2025
#25RM055

Book No:23/100+
Pages:-288

ரொம்ப கெத்தான ஆளா நீங்க?
-ஜீயோ டாமின்

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம் இது. இந்த புத்தகம் வாங்கும் போது இதன் ஆசிரியரையும் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. பூவுலகின் நண்பர்கள் என்றாலே அனைவரையும் பயமுறுத்துவார்கள் வார்த்தைகளில் அச்சப்படுத்துவார்கள் என்று பலரும் தவறாய் எண்ணி வருகின்றனர். தற்போது சூழலில் எவ்வாறு உள்ளது என்பதனை எப்போதும் நினைவூட்டிக்  கொண்டும் எதிர்காலத்தில் நடைபெறும் மாற்றங்களை தங்களின் எழுத்துக்கள் வாயிலாகவும் உரக்க சொல்லி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலம் மாறும் வேகத்தை விட தொழில் நுட்பங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன அதற்கு விலையாக நாம் பலவற்றை இழந்து வருகிறோம் நுகர்வு உற்பத்தி என்பது எல்லாம் மிகையாகி வருகிறது. இந்தத் தொகுப்பில் சிந்திக்க வைக்கும் வகையில் 29 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

2050 ஆம் ஆண்டில் ஒருவன் பூமியை பற்றி எண்ணுவது தான் அல்லது எழுதும் டைரி குறிப்புகள் தான் முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் கூட இது போன்ற ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நெகிழி வேண்டாம் உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் அதனை வெறுமனே சொல்லாமல் அதற்கான காரணத்தையும் தகவல்களையும் தரவுகளையும் மேற்கோளாக காட்டும் போது ஆமாம் தானே என்று படிப்போரையும் எண்ண வைக்கிறது.

குப்பைகள் கொட்டுவது முதல் பசுமை இல்ல வாயுக்கள் சூடாவது என பல இயற்கைக்கு விரோதமான பல செயல்களை நம்முன் காட்சிப்படுத்துகின்றனர். நெகிழி சாலைகள் பயன்படுத்துவதை ஊக்கு விக்கலாமா என்றால் அது நெகிழியை அப்படியே குப்பைகளில் கொட்டுவதை விட ஆபத்தானவை என்பது பெட்டி செய்தியில் விளக்கியுள்ளார்.

மினிமலிச கொள்கையை விளக்குவதுடன் தேவைக்கு அதிகமான பொருட்கள் வாங்கும் நுகர்வு கலாச்சாரத்தையும் சாடியுள்ளார். எந்த பொருட்களாலும் நம் மதிப்பையோ மகிழ்ச்சியோ அதிகரிக்க முடியாது. எந்த பொருட்களாலும் நமக்கு மகிழ்ச்சியை கொண்டு வர முடியாது .பொருட்கள் மனிதருக்கும் இந்த பூமிக்கும் சுமை பொருட்களற்ற வெறுமை தரும் எளிமை என்பது வறுமையல்ல மாறாக வளமை என்று கூறுகிறார்.

சூழல் பொறுப்புள்ளவராய் உணர்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி கூறும்போது முதலில் மறுபரிசீலனை செய்யுங்கள் என்கிறார் .நாம் செய்யும் செயல்களை சுற்றுச்சூழல் தாக்கத்தின் அடிப்படையில் சீர்தூக்கி பார்க்கவும், பரிசீலனை முடிவில் அத்தியாவசியமாக தேவையற்றதாய் உணரும் அத்தனை பொருட்களையும் புறக்கணிக்கும்படியும் சொல்கிறார். பின்பு புறக்கணிக்க இயலாத பொருட்கள் இருப்பின் அதனை குறையுங்கள் என்கிறார். நாம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலும் நீரை வீணடித்து பசுமை இல்ல வாயுக்களை உமிழ்ந்து சூழ்நிலை மாசு படுத்தி அடைவதை பழுது பார்த்து தொடர்ந்து பயன்படுத்துங்கள் என்கிறார்.

 தேவை முடித்த பின்னர் மாற்றுப் பயன்பாட்டுக்கு உட்படுத்தி அதன் ஆயுளை அதிகாரியுங்கள் என்கின்றனர். அதன் பின்பு சமூகத்தில் ஒருவருக்கொருவர் பொருட்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் நாம் குறைவான நுகர்வுத் திறனை அடையலாம் என்கின்றனர். பின்பு முடிந்தவரை பொருட்களை மறுசுழற்சி செய்யலாம் .இவ்வாறு எல்லாம் செய்தால் இறுதியாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்கிறார்கள்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறையுங்கள்  என்று சொல்கிறார்களே தவிர அதன் உற்பத்தியை குறைப்பதாக இல்லை. அங்கு தான் ஒளிந்துள்ளது கார்ப்ரேட் மயம். பில்கேட்ஸ் எழுதியுள்ள காலநிலை பேரழிவை எப்படி தடுப்பது போன்ற புத்தகங்களை பற்றியும் சொல்லி உள்ளார்.

பொருட்கள் வாங்கிக் குவிப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பொருட்கள் பணத்தை வீணாக்குகின்றன. உறவுகளை விலக்குகின்றன. பொருட்களால் பெறப்படும் கெத்து ஒரு சமூக அநீதி. அது மதிப்பை அன்றி ஏளனத்தையும் புறக்கணிப்பை மே பெற்றுத் தரும். மனிதர்களை உள்ளடக்கிய நம் சூழலின் மீதான காதல் தான் உண்மையாக தலைநிமிறச் செய்யும் கெத்து என்று புத்தக தலைப்புக்கு ஏற்ற வகையில் கட்டுரை அமைந்துள்ளது.

வளர்ச்சி என்ற பெயரில் நாம் கொடுக்கும் விலை அதிகம் என்பதனை ஒவ்வொரு கட்டுரைகளிலும் நாம் பார்க்க முடிகிறது. பாதிக்கப்படாத வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சி. அது இயற்கையை எப்போதும் சீண்டுவதில்லை. முன்னேறும் போது எந்தவித பாதிப்பையும் செய்யாமல் முன்னேற்றம் அடையும்போது அனைவருக்கும் ஆன வளர்ச்சி அங்கு ஏற்படுகிறது .அதை நோக்கிப் பயணிக்கும் வகையில் இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் நாம் எண்ணிக் கொண்டு பயணித்தால் நம்முடைய வளர்ச்சியில் உண்மையிலேயே நல்ல வளர்ச்சியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday, 17 March 2025

நீ எப்போது மிகச் சரியாக இருக்கிறாயோ அப்போதுதான் இந்த உலகம் உன்னை அதிகமாகக் குறைசொல்லும்!-அகரன்

சுழல் வெப்சீரிசில் ஒரு வசனம் வரும். "இருட்டுல எப்படி நம்மால மற்றவற்றை பார்க்க முடியாதோ அதே போல ரொம்பப் பிரகாசமான வெளிச்சத்திலும் நம்மால் மற்றவற்றை பார்க்க முடியாது". இருளும் ஒளியும் ஒரு பர்ஃபெக்ட் விகிதத்தில் கலந்திருந்தால் தான் காட்சி தெரியும். ஒலி கூட அதே போன்றது தான். சப்தமற்ற மௌனத்தையும் கேட்க முடியாது. மிக அதிக இரைச்சலிலும் நம்மால் கேட்க முடியாது. மனித காதுகளால் ஒரு குறிப்பிட்ட ஃப்ரீக்குவன்ஸியை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு குறைவான / அதிகமான ஃப்ரீக்குவன்சிக்கு நாம் செவிடர்கள் தான்.வாழ்வென்பதே இது போன்று இரண்டு எதிரெதிர் முரண்களின் பிணைப்பால் தான் ஆகியுள்ளது.தீதும் நன்றும் சேர்ந்ததே வாழ்வு.

Sunday, 16 March 2025

புத்தகம்-22


#Reading_Marathon2025
#25RM055

Book No:22/100+
Pages:-153

பைப்லைனில் பணம்
-பர்க் ஹெட்ஜஸ்

பணம் சம்பாதிக்க இந்த உலகில் பலரும் முயன்று கொண்டுதான் இருக்கின்றனர்.சிலர் வெற்றி பெறுகின்றனர்.சிலர் தொடர்ந்து வெற்றி பெற போராடுகின்றனர்.மொழிபெயர்ப்பு புத்தகங்கள் நம் ஊருக்கு ஒத்துவராது என்றாலும் சிலயோசனைகள் ஆமால்ல என்று எண்ண வைக்கும்.

இப்புத்தகம் முதலில் வரும் உருவகக் கதையில் இருந்து துவங்குகிறது.1801ம் ஆண்டு, மத்திய இத்தாலியிலுள்ள ஒரு பள்ளத்தாக்கு. அப்பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிற்றூரில், பாப்லோ, புரூனோ ஆகிய இரண்டு இளைஞர்கள் பாப்லோ, புரூனோ அருகருகே வசித்து வந்தனர். எப்பாடுபட்டாவது வாழ்க்கையில் முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தனர்.

அந்தச் சிற்றூருக்கு அருகே இருந்த ஓர் ஆற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து அந்த ஊரின் பொதுத் தொட்டியில் ஊற்றுவதற்காக இரண்டு பேரை வேலைக்கு அமர்த்த அந்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.இரு வாளிகளை கொடுத்து நூறு வாளி கொண்டுவந்தால் பணம் என்றனர்.முதல் நாள் இருவரும் உழைத்தனர்.பின் பாப்லோ கொஞ்சம் தயங்கினான்.எளிதாக செய்ய யோசித்தான். புரூனோ எப்போதும் போல் நீர் கொண்டு வந்தான். பாப்லோ வித்தியாசமாய் பைப் லைன் அமைத்து நீர் கொண்டு வந்து அசத்தினான். உலகம் முழுக்க பின்பற்ற முன்னோடியாய் இருந்தான்.ஏறத்தாழ எறும்பும் வெட்டுக்கிளியும் போல. கோடைக்காலத்திலேயே உணவையும் உண்டு பின் நாட்களுக்காக சேமிப்பதுதான் பைப்லைன் கதை.

இதை வைத்து விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். வாளியை தூக்குவதை நிறுத்தியதும் பணமும் நின்றுவிடுகிறது.உண்மையான பொருளாதாரப் பாதுகாப்பு வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பாப்லோ செய்ததைப்போல வாளியைத் தூக்கிக் கொண்டு திரியும்போதே பைப்லைனைப் போடுவதுதான் என்கிறது.

நாம் ஏன் வாளிகளை தூக்கிக்கொண்டு செல்லும் வேலைக்கே ஈர்க்கப்படுகிறோம்.நம்மைச் சுற்றியுள்ள மக்களில் 99 சதவீதத்தினர் வாளிகளைத் தூக்கிக் கொண்டு திரியும் வேலைகளில் இருப்பதால், வாழ்க்கையில் நாம் பெற விரும்புபவற்றைப் பெறுவதற்கான ஒரே வழி அதுதான் என்று நாம் அனுமானித்துக் கொள்ளுகிறோம்.பெரிய ஆட்கள் பெரிய வாளி பயன்படுத்துகின்றனர் அவ்வளவே. அவர்களுக்கான செலவு அதிகம் என்பதால் அவர்களும் சராசரி ஊழியர்களைப் போலவே மாத நாட்களை ஓட்டுகின்றனர்.சேமிப்பற்ற பெரிய வருமானமும் இறுதியில் ஒன்றுமில்லாமலேயே போகிறது.

வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேளைதான் நீண்டகாலப் பைப்லைன் போன்ற ஒன்றைத் துவக்குவதற்கு உகந்த ஆகும்.

*செல்வம் என்பது நீங்கள் சேர்க்கும் பணமே அன்றி, நீங்கள் செலவழிக்கும் பணம் அல்ல

*நீண்ட காலமுதலீட்டில் முதலீடு செய்து பணம் பார்ப்பது

*பிரம்மாண்டமான ஓக் மரத்தின் உச்சிக்குச் செல்ல இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, அம்மரம் விதையாக இருக்கும்போது நீங்கள் அந்த விதையின்மீது ஏறி உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அம்மரத்தில் விறுவிறுவென்று ஏற வேண்டும்.

*ரோலக்ஸ் கைக்கடிகாரங்களையும் விலையுயர்ந்த ஆடைகளையும் அணிந்து கொண்டிருப்பவர்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருப்பதுபோலத் தோன்றக்கூடும். ஆனால் அவர்களில் பலர் பெருங்கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கக்கூடும்.

இப்புத்தகத்தை முடித்ததுவுடன் அறிய முடிந்தது வருவாய்க்கு ஏற்ற செலவும் சேமிப்பும். வேலைகளை எவ்வாறு எளிமையாக்கிக் கொள்வது., வாளி தூக்கியாக இல்லாமல் புதிய ஐடியா மூலம் நிலை நிறுத்திக் கொள்வது, பணக்காரர்களை ஒப்பிட்டு நோக்காமல் நாம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்துவது, யாரும் நிம்மதியாக இல்லை எல்லோருமஓடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.நமக்கு சிறிய பிரச்சினை எனில் பிறருக்கு பெரிய பிரச்சினை. புதிய முயறையை கைவிடாமல் இலக்கை அடைவோம். நேரத்தை வீணக்காமல் நெம்பு சக்தியாய் பயன்படுத்துவோம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 15 March 2025

டங்குவார்


டங்குவார் என்பது யாது?

டங்குவார் அறுந்து போவது என்றால் என்ன பொருள்?

இரண்டையுமே அறிவோம்

Tanga / Tonga என இந்தியில் அழைக்கப்படும் குதிரை வண்டியில் குதிரையை வண்டியுடன் பிணைக்க பயன் பட்ட தோல் வார் தான் (மாட்டுத் தோலால் ஆன பட்டையான கனமான பெல்ட் போன்ற ஒன்று) அழகு சென்னைத் தமிழில் டங்குவார் என்றாகியது…

குதிரையின் முழு பலமும் இந்த டங்குவாரின் மூலமே வண்டிக்கு கிடைக்கும்..

வண்டியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களின் ஊடே இந்த டங்குவார் நுழைக்கப் பட்டு குதிரையின் உடலோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும்.

இஃதன்றியும் தோல் காலணிகளில், காலணியின் மோதிரம் எனப்படும் கட்டைவிரல் வளையத்தையும் காலின் நடுப்பகுதியையும் இணைக்கும் தோல் பட்டையையும் இதே பெயரால் அழைப்பர்…

காலின் இயக்கத்துக்கு ஏற்றார் போல் காலணியின் நெகிழ்வை கட்டுப்படுத்தும் முக்கிய இணைப்பு இது

மேற்கண்ட டோங்கா வண்டிகள் முகலாயர் காலத்தியவை..

வண்டியோட்டி முன் புறம் பார்த்தபடி வண்டியோட்ட பயணிப்பவர்கள் பின்னோக்கி பார்த்தபடி அமர்ந்திருப்பர்..

பின்னர் ஆள வந்த ஆங்கில உயர் அலுவலர்களாலும் ஆங்கில மேட்டுக்குடி மக்களாலும் மிகுதியாக டோங்கா வண்டிகள் பயன்படுத்தப்பட்டன..

முறையான சாலைகளே இல்லாத வழிகளில் இந்த டோங்காக்கள் பயணிக்கும்..

தொடர்ச்சியாக ஓரே நாளில் பல மணி நேரங்களுக்கும் தொடர்ந்து பல நாட்களுக்கும் குதிரை ஓடும் போது இரும்பு வளையங்களின் இடையே உராய்ந்து உராய்ந்து இந்த டங்கு வார் தேய்ந்து வலிமை இழந்து விடும்.‌.

சில சமயங்களில் ஒரே பயணத்திலேயே இந்த டங்கு வார்கள் அறுந்து போகும்..

இதிலிருந்து அப்பயணத்தின் கடுமையை உணரலாம்..

சில கடும் பயண வழித்தடங்களை குறிப்பிட..

"ஐயோ அந்த ஊருக்கு போகனுமா? டங்குவார் அறுந்துடுமே"

என குறிப்பால் பயண கடுமையை குறித்துப் பேச அதுவே…

-படித்தது

Thursday, 13 March 2025

“நிலா-ராஜ்சிவா(ங்க்)இதுவரை சனிக்கோள், 145 நிலாக்களைத் தன்வசம் கொண்டிருந்ததை அவதானித்திருந்தோம். என்னதான் வியாழக்கோள் மிகப்பெரியதாக இருந்தாலும், அதற்கு, வெறும் 95 நிலாக்கள் இருப்பதாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நிலாக்களைத் தன்வசம் வைத்திருப்பதில் சனிக்கோள், வியாழக்கோளை முந்திவிட்டது. சனிக்கோளின் 145 நிலாக்களில், 83 நிலாக்களின் அமைவு திடமாக உறுதிசெய்யப்பட்டு, அவற்றுக்குப் பெயர்களும் இடப்பட்டிருக்கிறது. எஞ்சிய 62 நிலாக்களுக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. கதை இத்துடன் முடிந்துவிடவில்லை.மார்ச் 2025, 12ஆம் திகதி, ஹவாய் தீவில் அமைக்கப்பட்டிருக்கும் ‘கனடா-பிரான்ஸ்-ஹவாய் தொலைநோக்கியால், சர்வதேச வானியல் ஒன்றியம் ஆராய்ந்ததில் ( The International Astronomical Union, from the Canada-France-Hawaii Telescope), சனிக்கோளுக்கு மேலும் 128 நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இப்போது சனிக்கோளுக்குச் சொந்தமான மொத்த நிலாக்களின் எண்ணிக்கை, 274 ஆக உயர்கிறது (அம்மாடியோவ்!). ஆனாலும், இதற்கும் அதிகமான மேலும் கண்டுபிடிக்கப்படாத நிலாக்களும் இருக்கலாம் என்கிறார்கள் (முருகா….!). சனியை எட்டிப் பிடிக்க வியாழனால் முடியவே முடியாது.

Wednesday, 12 March 2025

நாம் முன்னாலும் பின்னாலும் பார்த்துக்கொள்கிறோம்எது இல்லையோ அதற்காக வருந்துகிறோம்நமது நேர்மையான சிரிப்புகள் யாவும்வேதனையோடு கலந்ததுதான்நமது இனிமையான பாடல்கள் யாவும்சோகமான எண்ணங்களையே சொல்கின்றன-ஷெல்லிதமிழில் நாகூர் ரூமி

புத்தகம்-21


#Reading_Marathon2025
#25RM055

Book No:21/100+
Pages:-119

மற்றாங்கே
-கலாப்ரியா

நெல்லை மாவட்டம் வீரத்துக்கு பெயர் பெற்ற பல விடுதலை வீரர்களை தந்ததும் பெருமை அடைந்தது அதன் எச்சமாக கவிஞர்களையும் படைத்திட்ட பெருமை நெல்லைக்கு உண்டு. கல்யாண்ஜி வண்ண நிலவன் கலாப்ரியா மூவரும் நெல்லை பற்றி பெருமை பேசும் போது ஆகா நாமும் நெல்லையில் பிறந்திருக்கலாமே என்ற எண்ணம் வரும். உண்மையில் முதன் முதலில் தாமிரபரணியில் கால்நனைத்த போது கல்யாண்ஜியை தான் நினைத்துக் கொண்டேன். இந்த ஈரத்தை தானே இவர்கள் தன்னுடைய கவிதைகளில் வாசக மனங்களை தொட்டிருப்பார்கள் என எண்ணியதுண்டு. நல்ல வரிகளுக்கு சிறகுகள் உண்டு. அவை விரைவில் பறந்து விடும் என்று சொல்வார்கள். கலாப்ரியா அவர்களின் கவிதை பட்டிதொட்டி எங்கும் ஒலித்த ஒன்று "சலுகை" எனும் தலைப்பில் வந்த 'அழகாயில்லாததால் /அவள் எனக்குத்/ தங்கையாகி விட்டாள்/ என்பதுதான். இது போன்ற கிளாசிக் கவிதைகள் புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது இத்தொகுப்பில் உண்டு.

அவளின் பார்வைகள் என்னும் கவிதையில் காயங்களுடன் 
கதறுடன் ஓடி 
ஒளியுமொரு பன்றியைத் தேடிக் கொத்தும் 
பசியற்ற காக்கைகள்

என பெண்களின் பார்வைகள் ஆண்களின் மனதை கொத்தும் வித்தையை சொல்லி இருப்பார் சிறிய நறுக்குகளில். 

என்ன செய்தும்/ இவன் காலடியில்/ தலை வைத்து பணிய மறுக்கிறது நிழல் /இவனின் நிழல்
என ஒருதலை காதலை சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருப்பார் 

ஈக்களுடன் மட்டுமே தூங்கும் /அனாதை பிணங்களின் உலகில்/ இந்த பைத்தியக்காரியை சில ஆவியற்ற பூக்களும் மொய்த்திருக்கின்றன/ என நஷ்ட ஈடு கவிதையில் சொல்லி இருப்பார்.

இயல்பாய் நடக்கும் ஒரு விஷயங்கள் சாதாரண மனிதனுக்கு இயல்பாக தான் தெரியும். ஆனால் ஒரு கவிஞனின் பார்வையில் அது பேருண்மையை உலருக்கு உணர்த்துகிறது அவர் வழியே சொல்கிறது. அந்த வழியை அஞ்சலி என்னும் தலைப்பிட்ட கவிதையில் 

உயர்ந்த கொடி மரத்தின் 
உச்சியில் 
புது கயிற்றைத்
தொடுக்கப் போன 
25 வயது பையன் 
தவறி விழுந்து 
கடைசி தியாகியானான்"

 கொடிக்காக உயிர் நீத்த குமரனை நினைவுபடுத்துகிறது கவிதை.

வேலை இல்லாதவனின் மனம் எல்லாவற்றையும் ரசித்து விட்டு இறுதியில் பெருமூச்சோடு சொல்லும்படி கவிதை என இறுதியில் 
"என் துயரங்களுக்கும் 26 வயசு முடிஞ்சு போச்சு" என்று முடித்து இருப்பார் முதுகலமான கவிதையின் இறுதியில் கோரமான உண்மையின் முகமும் நமக்குத் தெரிய வருகிறது.

வேலையில்லா திண்டாட்டத்தை எண்பதுகளின் ஆரம்பங்களில் பேசுபொருளாக இருந்தது. வெளிச்சமற்ற சங்கீதங்களின் கதையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞன் பற்றி சொல்லும் போது கடைசியில் 

கனத்து நகன்ற 
நாளெண்ணிப் பார்க்கையில் 
கவரில் தூங்கும் 
பட்டங்கள் 
இன்னும் கணக்கும் 

என வேலையில்லாதவன் ஏக்கக் குரலை பதிவு செய்திருப்பார்.

 மழை பிடிக்காத கவிஞர்கள் யாரும் இல்லை என சொல்லலா.ம் மழையை பாடுபொருளாக வைத்து பாடும் கவிதைகள் ஏராளம். கவிஞரும் மழை வேணும் என வார்த்தைகளில் வேண்டி நிற்கிறார்

"அந்தப் பரபரப்பு சுகத்தை 
எல்லாம் மனசுலையே 
ரசித்தபடி நனைகிறேன் 
என் கவிதைகளுடன் 
மழை எதையும் 
இழுத்துப் போகட்டும்
 மழை வேணும்"

தேசியக்கொடிகளும் 
நனைய 
மழை 
பகலிலும் பெய்யணும். 

என முடித்திருப்பார். 

அற்புதங்கள் எதுவும் இல்லாத இயல்பான சூழலில் கூட சில வரிகள் படிக்கும் போது உற்சாகம் கொள்ள இயலும். எதார்த்த நிகழ்வுகளில் கவிதைகள் முளைத்து பின்பு அற்புதத்தை நோக்கி பயணிக்கும் அதுவே கவிதையின் சிறப்பு. சாதாரண வரிகளில் கூட வாழ்வை குறித்த அழுத்தமான பார்வையை வாசகன் காண்கிறான். அதன் மூலம் புதிய அனுபவத்தை தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிறான். அல்லது ரசித்துக் கொள்கிறான். ஜன்னல் வழியே தான் காணாத உலகத்தை கவிதைகளின் வழியே காண்கிறான் அதில் இன்பமும் கொள்கிறான். கவிதைகளைப் பொறுத்தவரை நல்ல கவிதைகள் பிறரை எழுதத் தூண்டுகிறது. சில கவிதைகள் எண்ணி பிரம்மிக்க வைக்கிறது. வாழ்வின் நெருக்கடியில் சூழலின் இறுக்கத்தில் கவிதைகள் இன்றைய ரீலீஸ் பார்ப்பது போல நிம்மதியை தருகிறது. சிரிக்க வைக்கிறது‌. மனம் கணக்க வைக்கிறது. ரசிக்க வைக்கிறது. இதேபோல் நாமும் எழுதலாம் என தூண்ட வைக்கிறது .அதுவே கவிஞனின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-20


#Reading_Marathon2025
#25RM055

Book No:20/100+
Pages:-143

அருகில் வந்த கடல்
-மு.குலசேகரன்

இந்த ஆண்டு வாசிக்காத எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவலில் காலச்சவடு அய்யா சாமி சார் அவர்களின் உதவியுடன் இந்த புத்தகத்தை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வாங்கினேன். ஓரிரு கதைகளை படித்திருந்தாலும் இந்த தொகுப்பில் உள்ள 10 கதைகளும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அனுபவத்தை கொடுத்தது.

 கதைகளை நேர்கோட்டில் சொல்வது ஒரு உத்தி என்றால் நான் லீனியர் முறையில் கதைகள் சொல்வது, வார்த்தை ஜாலத்தில் அந்த கதையின் இறுதி பகுதியை மலை மேல் ஏறுவது போல் ரசிப்பு தன்மையுடன் சென்று அடைவது என்பது இன்னொரு வகைகளில் இருக்கும். குலசேகரன் அவர்களின் எழுத்துக்களில் திளைத்து எழுந்து வந்த உச்சியை அடையும்போது அது ஒரு நல்லதொரு அனுபவத்தை தந்தது.

மொழியின் சித்து விளையாட்டுகளில் மூழ்கி எழுந்து உச்சிவரை செல்லலாம் என்பதற்கு இந்த கதைகள் ஒரு உதாரணங்கள். மனதுடன் நெருங்கி கதாபாத்திரங்களையும் சூழலையும் விவரிக்கும் போது. அது எல்லை இல்லாமல் விரியும் சாத்தியமுள்ளது. இந்த சாத்தியத்தை தனது கதைகளில் எல்லாம் நுட்பமாய் பயன்படுத்தி வருகிறார். அகத்தில் தோன்றும் காட்சி படிமங்களை அப்படியே வார்த்தைகளின் தோற்றங்களில் காண முடிகிறது."அருகில் வந்த கடல் கதையில் கடற்கரையோரம் இருக்கும்போது வரும் பேரலையில் சிக்கித் தவிக்கின்றனர்.மொத்தமாய் விவரிக்க கிராமங்களும் மக்களும் சிக்கித் தவிப்பது போல் இருந்தது. இப்படியே விவரித்துச் செல்லும் போது கடைசியில் கனவாக கதை முடிகிறது.ஒரு வெற்றுக் காலத்தை,காட்சியை அவன் மனம் ஏற்க மறுக்கிறது என்பதனை இதில் கூறியிருப்பார் இதில் வரும் காட்சிப்படுத்துதல் கதைகளுக்கான வேகத்தை கூட்டி இருக்கிறது.

எழுதி முடிக்காத உயில் கதையில் வாரிசு இல்லாத தனது நோய்வாய்ப்பட்ட சித்தப்பாவை கவனித்துக் கொள்ளும் அண்ணன் மகனும் சித்தியும் தான்.. தற்போது மருத்துவமனைகளில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனை சூழலும் நோயாளியின் வலியையும் இந்த கதைகளில் நேரடி காட்சிகளைப் போல நமக்கு காட்டி இருப்பார். இறுதியில் எதிர்பார்த்த முடிவுகள் தான் என்றாலும் அதனை நோக்கிச் சென்ற விதம் ரசிக்கும் படி இருந்தது. நோயாளிகளை பற்றி சொல்லும் போது "மற்றவர்கள் எல்லாம் ரயில் பயணிகளைப் போலவும் அல்லது ஏதோ விற்பனை கூடத்தில் பொருட்களை வாங்க வந்தவர்களை போலவும் காணப்பட்டார்கள். ஓர் இருவர் மட்டும் தான் நோயாளிக்குரிய அறிகுறிகளுடன் இருந்தனர் என்று  புற உலகின் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வருகிறார்.

கதைகள் ஒவ்வொன்றும் பாசாங்கற்று வாசகனுக்கு மிகவும் நெருக்கமான மொழியில் இருந்தது தான் சிறப்பாக அமைந்திருக்கிறது. குடும்பச் சண்டையில் தனது தம்பி தூக்கு கயிற்றில் தொங்கிவிட அதற்குப் பிறகு குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள் தான் தூக்கு கயிற்றின் அழைப்பு கதை ஆகும். நடைமுறை வாழ்க்கையில் நிகழும் சாதாரண விஷயங்கள் குறித்தும் அதன் மீது அக்கறை கொள்ளாத மனிதர்களும் அதன் பின் அடையும் அவமானங்களையும் இக்கதைகளில் பதிவாக்கியுள்ளார்.

வாழ்க்கை தரும் நெருக்கடிகளின் உடைய மன இருப்பின் அவஸ்தைகளை விவரிப்பதில் அழாத இன்பம் எழுத்தாளர்களுக்கு திரும்பிச் செல்லும் வழியில் கதையில் நோய்வாய் பட்ட கணவன் சுந்தரேசனுக்கு ஆறுதலாய் பணிவிடை செய்கிறாள் பத்மாவதி. அவருடைய ஆதரவு அவனுக்கு பெரும் நம்பிக்கையும் காதலையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. எதிர்பாராத திருப்பத்துடன் சுந்தரேசன் கோபத்துடன் பழிவாங்க விரைகிறார். பேருந்து நிலையம் சென்றபோது ஓய்வின்றி குறுக்கும் நெடக்குமாய் அலைந்து கொண்டிருக்கும் பேருந்துகளில் மனமும் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை சொல்லி இருப்பார்.

நேரம் முடிவில்லாமல் வளர்ந்து கொண்டிருப்பது மையப்படுத்தி அணைக்கட்டு கட்டும் முயற்சியில் இறங்கி இருக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசாங்கத்தின் முயற்சியில் அந்த ஊரிலிருந்து காலி செய்யப்பட்டு சென்ற மனிதர்களின் உணர்வுகளை பேசுகிறது ஒற்றை முள்ளின் சுழற்சி கதை. நகரத்தின் வளர்ச்சி கிராமத்தினை கருவறுத்து விட்டது போல் நிலைமை .எங்கும் ரியல் எஸ்டேட் தொழில்கள் மலர விவசாயம் கருகிக் கொண்டிருக்கிறது என்பதை மையப்படுத்தி அவரவருக்கு சொந்தமான நிலம் கதையினை கூறியிருப்பார்.

அங்கங்கே இயந்திரங்கள் பெரிய விலங்குகளை போல் உறங்கிக் கொண்டிருந்தன அவற்றின் நுட்பமான எண்ணற்ற உள்ளுறுப்புகள் உயிரற்று உரைந்து இருந்தன இன்று மாபெரும் தொழிற்சாலையின் உள்இருப்பை மனிதர்களின் உழைப்பையும் ஓடாமல் போன இயந்திரம் கதை நமக்கு குறிப்பிடுகிறது இக்கதைகளில் வரும் வார்த்தைகள் நேரில் நின்று பார்த்த அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது."உற்பத்தியான பொருட்கள் எந்த மதிப்பும் இல்லாமல் ஓரமாகக் கிடந்தன. நிழலை போல் அரை இருட்டு சூழ்ந்து இருந்தது. சுற்றிலும் கவிழ்ந்திருந்த ஆழ்ந்த மௌனத்தின் அடியில் இருந்து பேரோசை எழுந்து கொண்டிருந்தது என்ற வரிகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன.

காதலித்த பெண்ணை கை பிடிக்க செல்லும் ஒருவன் திருமணத்தின் போது ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்கிறான். திருமணம் முடிந்து முதல் நாள் நடக்கும் ஏமாற்றும் அவனுக்கு எந்த வகையில் மன அமைதியைக் கொடுத்தது என்பதைத்தான் அழிக்க இயலாத கதையில் சொல்லி இருப்பார்.

கதைக்களங்கள் பெரும்பாலும் சிறிய பரப்பினுள் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தை தான் விவரணையாக சொல்லி இருப்பார். மனித மனங்களை அப்பட்டமாக சொல்லும்போது சில இடங்களில் நம்மையும் அதனோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. இந்த கதைகளின் முடிவுகள் மிக எளிமையாகவோ அல்லது எதிர்பார்க்கும் படியே இருந்தாலும் அந்த முடிவை நோக்கி அழைத்துச் செல்லும் வழி மிகவும் அழகாக நம்மை சொற்களின் வழியே கையைப் பிடித்து அழைத்திச் செல்வதில் தான் அவரின் எழுத்து திறமை நம்மை கட்டி போடுகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

"ஓடலாம் ஆடலாமென சொல்லும் விளம்பரங்கள் எந்த நாப்கின் அணிந்தால் தீட்டில்லை என்பதை மட்டும் சொல்வதேயில் லை.-பா.மகாலட்சுமி

Monday, 10 March 2025

சரிந்த பிறகும் அழகாய்ப் பெருக நீராக இருக்க வேண்டும்..அதுவும் தரையில்.-கல்யாண்ஜி

Panama canal💜பானாமா கால்வாயில் மொத்தம் மூன்று லாக் கேட்கள் இருக்கின்றன.அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் கப்பல்கள் பனாமா கால்வாய்க்குள் நுழையும் போது முதலில் வரும் கேட் கேண்டோன் லாக் என்று அழைக்கப்படுகிறது. இதில் கப்பல் நுழைந்தவுடன் மூன்று ஸ்டெப்களாக 85 அடிகள் உயர்த்தப்படுகிறது,கேண்டோன் லாக்கில் கப்பல் சிறிது நேரம் பயணம் செய்து குலிப்ரா கட் எனப்படும் மலைகளுக்கு நடுவே தோண்டப்பட்ட பெட்ரோ மீகுல் லாக்கை வந்தடையும் இந்த இடத்தில் இருந்து கப்பல் 31 அடிக்கு ஒரே ஸ்டெப்பில் கீழிறங்கி அடுத்ததாக தன்னுடைய பயனத்தை மிராபுலோர்ஸ் என்று அழைக்கப்படும் நதியில் பயணம் செய்யும் கடைசியாக அந்த மிராபுலோர்ஸ் லாக்கில் இரண்டு ஸ்டெப்களாக 54 அடிக்கு கீழிறங்கி பசிபிக் பெருங்கடலை வந்தடையும் . இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பனாமா கால்வாய் ஏன் சிறப்பு வாய்ந்த ஒரு கப்பல் வழித்தடமாக இருக்கிறது என..!!

Saturday, 8 March 2025

#வியாபாரம் ஒரு தெரு வியாபாரி உணவு வண்டி ஒன்றை அமைத்து, சுவையான பர்கர்களை ஒவ்வொன்றாக 5 டாலருக்கு விற்றார். ஆனால் யாரும் வாங்கவில்லை.ஒரு நாள், அவர் ஒரு பலகையில் இவ்வாறு எழுதினார்: "வரையறுக்கப்பட்ட சலுகை: 10 பர்கர்கள் மட்டுமே மீதம்!"சில நிமிடங்களில், மக்கள் வரிசையில் நின்று, ஒன்றைப் பெற சண்டையிட்டனர். அவர் உடனடியாக அனைத்தையும் விற்றுவிட்டார்.அடுத்த நாள், அவர் அதே பலகையை மீண்டும் வைத்தார். மீண்டும், அவர் அனைத்தையும் விற்றுவிட்டார்.மக்கள் ஒருபோதும் உணராதது என்னவென்றால், அவரிடம் வரம்பற்ற அளவு இருந்தது.நீதி: பற்றாக்குறை தேவை உருவாக்குகிறது. சில நேரங்களில், அரிதாகத் தோன்றுவது புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தல் மட்டுமே.

நியாண்டர்


மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் ப்ரிப்ரன்டல் கார்டெக்ஸ் (Prefrontal cortex) தான் என சொல்லபடுவதுண்டு

அதாவது மூளையின் முன் பகுதி (முன் மூளை)

இது இருப்பதால் தான் "25 ஆண்டுகளுக்கு பின்னர் பல மடங்கு பெருகும் முதலீடு ரியல் எஸ்டேட்டா, தங்கமா?" என நம்மால் யோசிக்க முடிகிறது. உலகில் வேறு எந்த மிருகமும் இம்மாதிரி 25 ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என சிந்திப்பதில்லை.

எதிராளியின் பத்து மூவ்களை கணித்து செஸ் ஆடவேண்டுமா? முன் மூளை உதவுகிறது. மனிதனை தவிர எந்த மிருகமும் செஸ் ஆட முடியாது. ஏனெனில் செஸ் விளையாட்டில் தர்க்கம், நீண்ட கால திட்டமிடல், மற்றும் அப்ஸ்ட்ராக்ட் சிந்தனை தேவைப்படுகிறது, இது மனிதர்களுக்கு மட்டுமே மிகவும் மேம்பட்டுள்ளது.

மிருகங்கள் சில வகையான பேட்டர்னை (Pattern recognition) மட்டுமே அடையாளம் காணும் வல்லமை கொண்டவை. உதாரணமாக துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டால் ஆபத்து என்பது மாதிரியான எளிய பேடர்ன்களையே அவற்றால் உணரமுடியும். 

ஆனால் முன் மூளையை பயன்படுத்துவது மிகுந்த நேரம் எடுக்கும் வேலை, செஸ் ஆடி முடித்தபின் எத்தனை களைப்பாக இருக்கும்?

அதனால் மனிதன் 99% முடிவுகளில் முன் மூளையை பயன்படுத்துவது கிடையாது. மிருகங்கள் மாதிரி 99% முடிவுகளை இவனும் பேட்டர்னை பயன்படுத்தி தான் எடுக்கிறான்

சைக்காலஜியில் இவற்றை Decision shortcuts என அழைப்பார்கள்

இரு பர்ப்யூம் பாட்டில்கள் விற்பனைக்கு உள்ளன. ஒன்றின் விலை ஆயிரம் ரூபாய். இன்னொன்றின் விலை நூறு ரூபாய்

இரன்டையும் ஆராயும் பொறுமை மக்களுக்கு இல்லை. Decision shortcuts பயன்படுத்துவார்கள். "விலை அதிகமான சென்டு பாட்டில் தான் தரமானதா இருக்கும். ரூபாய்க்கு பத்து சென்டை போட்டால் மூஞ்சி என்ன ஆவது? நீ ஆயிரம் ரூபாய் பாட்டிலையே பார்சல் பண்ணு"

கோடிவா என்ற சாக்லட் கம்பனி. சாதாரண சாக்லட்டுகளில் இருந்து தன்னை வித்தியாசபடுத்த சாக்லட்டுகளின் அட்டையை தங்க நிறத்தில் தயாரித்தது. பெரிய கடைகளில் மட்டுமே பொருளை விற்றது. தங்கம் என்றால் லக்சுரி. மக்கள் அதிக விலை கொடுத்து கோடிவா சாக்லட்டுகளை வாங்க ஆரம்பித்தார்கள்

டென்டுல்கர், கபில்தேவ், தோனி, விராட் கோலி எல்லாம் பூஸ்ட் குடிக்கறாங்களா? அப்ப அது ஆரோக்கிய பானமா தான் இருக்கும்

லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப். லக்ஸ் பயன்படுத்தினால் நாமும் கரீனா கபூர் மாதிரி ஆகலாம்

மனிதன் எல்லா சமயமும் சிந்தித்துக்கொன்டே இருக்க முடியாது. இது வேகமான உலகம். விரைவான முடிவுகளை, தவறான ஷாட்கட்டுகளை பயன்படுத்தியேனும் எடுத்தே ஆகவேண்டும்

இதை புரிந்துகொண்டவர்கள் #பிசினஸ்_பிஸ்தாக்கள் மட்டுமே

~ நியாண்டர் செல்வன்