#Reading_Marathon2025
#25RM055
Book No:22/100+
Pages:-153
பைப்லைனில் பணம்
-பர்க் ஹெட்ஜஸ்
பணம் சம்பாதிக்க இந்த உலகில் பலரும் முயன்று கொண்டுதான் இருக்கின்றனர்.சிலர் வெற்றி பெறுகின்றனர்.சிலர் தொடர்ந்து வெற்றி பெற போராடுகின்றனர்.மொழிபெயர்ப்பு புத்தகங்கள் நம் ஊருக்கு ஒத்துவராது என்றாலும் சிலயோசனைகள் ஆமால்ல என்று எண்ண வைக்கும்.
இப்புத்தகம் முதலில் வரும் உருவகக் கதையில் இருந்து துவங்குகிறது.1801ம் ஆண்டு, மத்திய இத்தாலியிலுள்ள ஒரு பள்ளத்தாக்கு. அப்பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிற்றூரில், பாப்லோ, புரூனோ ஆகிய இரண்டு இளைஞர்கள் பாப்லோ, புரூனோ அருகருகே வசித்து வந்தனர். எப்பாடுபட்டாவது வாழ்க்கையில் முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தனர்.
அந்தச் சிற்றூருக்கு அருகே இருந்த ஓர் ஆற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து அந்த ஊரின் பொதுத் தொட்டியில் ஊற்றுவதற்காக இரண்டு பேரை வேலைக்கு அமர்த்த அந்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.இரு வாளிகளை கொடுத்து நூறு வாளி கொண்டுவந்தால் பணம் என்றனர்.முதல் நாள் இருவரும் உழைத்தனர்.பின் பாப்லோ கொஞ்சம் தயங்கினான்.எளிதாக செய்ய யோசித்தான். புரூனோ எப்போதும் போல் நீர் கொண்டு வந்தான். பாப்லோ வித்தியாசமாய் பைப் லைன் அமைத்து நீர் கொண்டு வந்து அசத்தினான். உலகம் முழுக்க பின்பற்ற முன்னோடியாய் இருந்தான்.ஏறத்தாழ எறும்பும் வெட்டுக்கிளியும் போல. கோடைக்காலத்திலேயே உணவையும் உண்டு பின் நாட்களுக்காக சேமிப்பதுதான் பைப்லைன் கதை.
இதை வைத்து விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். வாளியை தூக்குவதை நிறுத்தியதும் பணமும் நின்றுவிடுகிறது.உண்மையான பொருளாதாரப் பாதுகாப்பு வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பாப்லோ செய்ததைப்போல வாளியைத் தூக்கிக் கொண்டு திரியும்போதே பைப்லைனைப் போடுவதுதான் என்கிறது.
நாம் ஏன் வாளிகளை தூக்கிக்கொண்டு செல்லும் வேலைக்கே ஈர்க்கப்படுகிறோம்.நம்மைச் சுற்றியுள்ள மக்களில் 99 சதவீதத்தினர் வாளிகளைத் தூக்கிக் கொண்டு திரியும் வேலைகளில் இருப்பதால், வாழ்க்கையில் நாம் பெற விரும்புபவற்றைப் பெறுவதற்கான ஒரே வழி அதுதான் என்று நாம் அனுமானித்துக் கொள்ளுகிறோம்.பெரிய ஆட்கள் பெரிய வாளி பயன்படுத்துகின்றனர் அவ்வளவே. அவர்களுக்கான செலவு அதிகம் என்பதால் அவர்களும் சராசரி ஊழியர்களைப் போலவே மாத நாட்களை ஓட்டுகின்றனர்.சேமிப்பற்ற பெரிய வருமானமும் இறுதியில் ஒன்றுமில்லாமலேயே போகிறது.
வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேளைதான் நீண்டகாலப் பைப்லைன் போன்ற ஒன்றைத் துவக்குவதற்கு உகந்த ஆகும்.
*செல்வம் என்பது நீங்கள் சேர்க்கும் பணமே அன்றி, நீங்கள் செலவழிக்கும் பணம் அல்ல
*நீண்ட காலமுதலீட்டில் முதலீடு செய்து பணம் பார்ப்பது
*பிரம்மாண்டமான ஓக் மரத்தின் உச்சிக்குச் செல்ல இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, அம்மரம் விதையாக இருக்கும்போது நீங்கள் அந்த விதையின்மீது ஏறி உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அம்மரத்தில் விறுவிறுவென்று ஏற வேண்டும்.
*ரோலக்ஸ் கைக்கடிகாரங்களையும் விலையுயர்ந்த ஆடைகளையும் அணிந்து கொண்டிருப்பவர்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருப்பதுபோலத் தோன்றக்கூடும். ஆனால் அவர்களில் பலர் பெருங்கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கக்கூடும்.
இப்புத்தகத்தை முடித்ததுவுடன் அறிய முடிந்தது வருவாய்க்கு ஏற்ற செலவும் சேமிப்பும். வேலைகளை எவ்வாறு எளிமையாக்கிக் கொள்வது., வாளி தூக்கியாக இல்லாமல் புதிய ஐடியா மூலம் நிலை நிறுத்திக் கொள்வது, பணக்காரர்களை ஒப்பிட்டு நோக்காமல் நாம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்துவது, யாரும் நிம்மதியாக இல்லை எல்லோருமஓடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.நமக்கு சிறிய பிரச்சினை எனில் பிறருக்கு பெரிய பிரச்சினை. புதிய முயறையை கைவிடாமல் இலக்கை அடைவோம். நேரத்தை வீணக்காமல் நெம்பு சக்தியாய் பயன்படுத்துவோம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment