#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-2
பக்கங்கள் -112
அன்பின் ஐந்திணை
-க.மோகன் ரங்கன்
ஒரு கணத்தில் மின்னலென விரியும் மனதின் நினைவுகள் திடீரென கதையாக உருப்பெறும் போதும் நினைவுகளை அசைபோடும் போது நம் நெஞ்சில் தங்கி இருந்த கதைகளை மீட்டுருவாக்கம் செய்யும்போதும் சுவையான மொழியில் பகிரும் வகையில் அமையும் போது அந்த கதை ஒரு சிறப்பான கதையாக அமைகிறது. அந்த வகையில் திரு மோகனரங்கன் அவர்களின் அன்பின் ஐந்திணை கதைகள் அவரின் டைரி குறிப்புகள் போல் பால்ய காலத்தில் நடந்த கதைகளை தற்போது மீட்டூருவாக்கம் செய்வது போல் அமைந்திருந்தது
முதல் கதையான மனம் என்னும் மத்த யானை தன்னுடைய இளமைக்காலத்தில் தனது நண்பன் சேட்டு மற்றும் தனம் இருவரும் விரும்புகின்றனர். அவர்களின் பிரிவில் தனம் வேறொருவருக்கு நிச்சயமாகிறார். இதனை பொறுத்துக் கொள்ளாத சேட்டு நண்பன் கிருஷ்ணாவிடம் புலம்புகிறான். பிரிவின் வாதையை சொல்லும் கதையாக இக்கதை அமைந்துள்ளது."சைக்கிளை மெதுவாக தள்ளிக் கொண்டு நடந்தான் சேட்டு. ஒரு நாளிலேயே ஏழு எட்டு வயசு கூடியவனை போல் ஆகிவிட்டான்" என்று வார்த்தைகளில் விளையாடி இருப்பார் கவிஞர்.
முன்னையிட்ட தீக்கதையும் ஒரு காதல் தோல்வி கதை தான். கல்லூரியில் பயிலும் சேகர் டிராயிங் மாஸ்டரின் பெண்ணிடம் எடுத்த போட்டோ வெளியில் தெரிய ட்ராயிங் மாஸ்டர் ஜிம்காரரை உதவிக்கு அழைக்க அவரும் வந்து மிரட்டி விட்டு சென்றார். திரும்ப பஞ்சாயத்து பேச சென்றவரிடம் ஜிம்காரர் சொல்ல மீண்டும் சேகரிடம் காதலை விட்டுக் கொடுக்க தூண்டியது. கடைசியில் என்ன ஆனது என்பதே கதை. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் சிரிப்பு வருவது போல் உள்ளது ஆனாலும் அவர்களின் சோக கதை நம்மை விடாமலும் தடுக்கிறது.
சிறுகோட்டு பெரும்பலம் கதையில் காதலர்கள் கருணாநிதி காதல் தோல்வியால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறான் என்ற கதை மனதை அழுத்தும் விதத்தில் இருக்கிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு இதை அவன் செய்ததற்கு தர்க்கபூர்வமான உதாரணம் ஒன்றும் இருந்தது என விவரிக்கிறான் நண்பன். பரமபதத்தில் கனவு ஏணியில் உச்சிப்படி வரைக்கும் என்னை வழிநடத்திச் சென்ற பெண்ணை முடிவில் லௌதீக பாம்பின் வாய்க்கு திண்ண தந்து விட்டு ஆட்டத்தில் தோற்று திரும்பி இருந்த சமயமது இரவின் தனிமைக்கு அஞ்சி அவளவை செய்திருக்கலாம் என அதற்கு நியாயம் கற்பிப்பது போலும் கதை நகர்கிறது.
தன்னுடைய காதலியை குடிகார கணவனை கட்டிக் கொண்ட பிறகு அவளிடம் தன் காதலை தெரிவித்தான் நாயகன். ஆனால் அப்போது மறுத்துவிட்டு பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள் அப்போது நாயகனின் குழந்தைய வாங்கி முத்தமிட்டு திருப்பிக் கொடுக்கிறாள் ஜோதி அட்சத்தில் உன்னை பார்த்த மாதிரியே இருக்கான் உன் பையன் என்கிறாள் வயதுகளையும் வருடங்களையும் கடந்து வந்த அச்சிறுப்பில் முன்னே என்னை சுட்ட நெருப்பில்லை மாறாக தீண்டும் எதனையும் குளிரச் செய்யும் தன்மை இருந்தது அணங்கு கொல் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார்.
வார இறுதியில் தங்கள் நிம்மதிக்காக கொல்லிமலை செல்லும் நண்பர்கள் மலை ஏறும் போது அருவியை நோக்கி சென்று குளிக்க வேண்டும் என நினைத்து ஏறுகிறார்கள். ஏறும்போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் நினைவுகள் கற்பனைகள் அவைகளை அனைத்தும் அசைபோட்டு இறுதியில் நீரினை பார்த்து அவர்கள் பிரமிப்பது தான் கதையாக உள்ளது .இறுதியில் இந்த அருவி இல்லை .ஆறு கடல் ஏரி என நீர் பரப்பை பார்த்தாலும் ஒரு தடவை பார்த்து லயிச்சு போய் நின்னுட்டா அது அன்றோடு தீராது. மறுபடியும் எப்ப திரும்பி வரலாம் ன்னு உங்கள் நினைப்பு நிற்கும் என மாதேஸ்வரன் கூறியது நமக்கும் சொன்னது போல் உள்ளது.
இத்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் மிக எளிமையான நிலையில் உரையாடல் வடிவில் நினைவில் தங்கிய நிஜங்களை நமக்கு பகிரும் வகையில் கதைகள் யாவும் அமைந்திருந்தன.
"பஸ் புறப்பட்டு போன பிறகும் அது விட்டு சென்றபுகையில் டீசலின் மணம் மிதந்து கொண்டிருந்தது" எனும் வரி போல் ஆங்காங்கே வரும் வரிகள் மெல்லிய உணர்வை தட்டி எழுப்பும் படி உள்ளது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment