Saturday, 29 March 2025

புத்தகம் -34


30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-11
பக்கங்கள் -124
நாள்-5

அழல் பழுத்த கனி
-தமிழில் கோ.கமலக்கண்ணன்

பார் லாகர்க்விஸ்ட் எழுதிய பராபாஸ் ஒரு புகழ்பெற்ற நாவல். தமிழில் அழல் பழுத்த கனி என மொழி பெயர்ப்பு வந்துள்ளது.இதன் தலைப்பு அழல் பழுத்த கனி என்பது பழுத்த வாழைப்பழத்தை குறிக்கும்.

இந்நாவல் பராபாஸ் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது. பராபாஸ் என்பவர் பைபிள் கதையில் குறிப்பிடப்படும் ஒரு கொள்ளையன்.நாவல் இயேசுவும் அவருடன் இருந்தவர்கள் சிலுவையில் அறையும் காட்சியுடன் துவங்குகிறது. நான்காவதாக சிலுவையில் அறைய இருந்தவன் தான் பராபாஸ்.மூவரின் இறப்பையும் கண்ணால் பார்க்கிறான்.தன்னுடைய குற்றத்திற்க்கான தண்டனை பெறவில்லை என்பதால் குற்றவுணர்வில் இருந்தான்.

 இயேசு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, ரோமன் அதிகாரிகள் யூத மக்களிடம், இயேசுவையா அல்லது பராபாஸையா விடுதலையாக்க வேண்டும் என்று கேட்டனர். மக்கள் பராபாஸை விடுதலையாக்குமாறு கோரிக்கை வைத்தனர், இதனால் பராபாஸ் விடுவிக்கப்பட்டு இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

இந்த நாவல், பராபாஸின் வாழ்க்கையை அதன் பின்னணியில் விவரிக்கிறது. சிலுவைப் போராட்டத்தைக் கண்டு கொண்ட பராபாஸ், இயேசுவின் இறப்பால் மனதளவில் பதற்றம் அடைகிறார். அவர் குற்ற உணர்ச்சியில் துயரமடைந்து, நம்பிக்கையற்றவனாக மாறுகிறார். ஏற்கனவே கடவுளில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், இயேசுவின் மரணம் அவரது மனதில் குழப்பத்தையும், தேடலையும் ஏற்படுத்துகிறது.

நாவல் பராபாஸின் மனஅழுத்தத்தையும், பாழான வாழ்க்கையையும், கடவுள் பற்றிய அவனது சந்தேகத்தையும் சித்தரிக்கிறது. பராபாஸ், இயேசுவின் சீடர்களையும், அவரை நம்பிய மக்களையும் சந்திக்கிறார். ஆனாலும் அவர் முழுமையாக தெய்வ நம்பிக்கையை ஏற்க முடியாமல் தவிக்கிறார்.இறை நம்பிக்கையில் சந்திக்கும் ஐயத்தையும்,கடவுள் பற்றிய கேள்வியையும் முன் வைக்கிறது.

நம்பிக்கை! கண் முன்பு சிலுவையில் தொங்கி உயிர்நீத்த மனிதன்மீது எப்படி நம்பிக்கை கொள்வது என சராசரி மனிதனின் ஐயத்தை கூறுகிறது பாத்திரம்.சுரங்க்த் தொழிலாளியாய் ஈடுபட்டு ஐம்பது வயதாகும் போது ஒரு நண்பன் கிடைக்கிறான்.பஸஹாக்குடன் உரையாடுகிறான் பராபாஸ்.சிலுவையில் அறைந்த இடத்துக்கு சென்று பார்க்கிறான்.இப்போது ஸஹாக்கும் அவனும்.கடவுள்.குறித்து உரையாடுகிறார்கள்.இரண்டாம் முறையாக ஸஹாக் சிலுவையில் கொல்லப்படுவதைப் பார்க்கிறான்.

அதற்கு பின் என்ன என்பது முடிவு. இந்நாவலின் பெரும்பலம் கோ. கமலக்கண்ணனின் மொழி பெயர்ப்பு என்பேன். அழுத்தமான மொழியில் இயல்பான நடையில் அட்டகாசமான வாசிப்பு உணர்வு தந்தது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment