#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-15
பக்கங்கள் -384
நாள்-7
பவா சொன்ன கதைகள்
-பாரதி கண்ணம்மா
பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களிடம் இரு, ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் பல்வேறு பாடல்கள் பாடினாலும் கூட்டத்தில் யாரேனும் ஒருவர் ஏதாவது ஒன்றை பாடச் சொல்லிக் கேட்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்று அவர் உற்சாகமாய் பதில் சொன்னார். நான் அப்போதும் முதன்முறை மைக்கின் முன் நின்று பாடுவது போல உணர்ந்து பாடுவேன் .ஏனெனில் கலைஞனுக்கு அயர்ச்சி இருக்கக் கூடாது. எதிரில் இருப்பவருக்கு அது புதிதாய் இருக்கும். நமக்கு அந்த அலுப்பு வரவே கூடாது என்பார். இது பாவா அவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். மேடைகளில் கதைகளை சொன்னாலும் பல்வேறு இடங்களில் வாசகர்கள் அந்த கதைகளை அவர் வாயிலாக கேட்கும் போது அதே உற்சாகத்துடன் சொல்லுவார்.
அவரின் குரலும் ஒரு ஸ்லாங்கும் அந்த கதைக்கு புதிய வடிவத்தை சேர்க்கின்றன. முதல் கதையான யானை டாக்டரில் அவருக்கே உரிய வடிவத்தில் அதை சொல்லி இருப்பார் படிக்கும்போது அவருடைய குரல் நன்கு கேட்கிறது. எனக்கு பிடித்தது அந்த செந்நாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கே யின் மனநிலை தான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி விலங்கு குறித்த அச்சம் இன்றி உயிரை பணயம் வைத்து அவர் செய்திருப்பார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறம் தொகுப்பு வந்தவுடனேய முதலில் படித்தது யானை டாக்டரை தான்.
கந்தர்வனின்" தான் 'கதையை பவா சொல்லித்தான் நான் நேரடியாக கேட்டு இருக்கிறேன். அவர் சொல்லும்போதே அடுத்து என்ன என்ன என்று நம்மை எதிர்பார்க்க வைக்கும். இறுதியில் மனிதாபிமானத்தோடு நமக்கு கந்தர்வனின் மீதும் மரியாதையும் வரும். அவர் எழுதிய தொகுப்பு நூலை வம்சி பதிப்பகம் தான் கொண்டு வந்தது. ஒவ்வொரு கதையுமே அட்டகாசமாக இருக்கும். கந்தர்வனை அவர் உச்சி முகர்ந்து பாராட்டும் போது நாமே அந்த கலைஞனுக்கு அருகில் இருந்து மரியாதை செய்தது போல் இருக்கும்.
இலங்கைப் பெண்ணுக்கும் வியட்நாம் ஆணுக்கும் இடையில் உருவாகும் குழந்தை அமெரிக்காக்காரியாக பிறக்கிறதா என்பதை ஏக்கத்துடனும் வலியுடனும் இறுதியில் மன மகிழ்வுடன் கதையை முடித்து இருப்பாரா முத்துலிங்கம் அவர்கள் அமெரிக்கா காரி எனும் கதையில்.. அதில் தன் தாய்க்கு அலைபேசியில் பேசும்போது" ஒரே நேரத்தில் இருவரும் பேசுவார்கள் அப்போது அவர்களின் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன" என்று ஆ முத்துலிங்கம் தன்னுடைய அக்மார்க் முத்திரையை பதித்திருப்பார்.
கெடுபிடி நிறைந்த இடங்களில் தான் தவறுகள் மிகவும் மலிவாக நடக்கின்றன என்பார்கள் அதுபோல கருணா எழுதிய கெட்ட குமாரன் கதை பள்ளிக்குத் தாமதமாய் சென்றால் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் 37 வழிகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நிகழ்கிறது அதில் தலைமை ஆசிரியர் நிகழ்வும் மாணவரின் நிகழ்வும் எவ்வாறு மனமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருப்பார்கள்.
ஜா தீபா எழுதிய குரு பீடம் கதை ஆனந்த விகடனில் வெளிவந்து அந்த வாரம் முழுக்க பேசுபொருளானது. மனதை கணக்கச் செய்யும் கதையை பவா அவர்கள் தனக்கே உரிய பாணியில் பல்வேறு மேடைகளில் பேசியது குறிப்பிடத்தக்கது நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய கதை.
பெண்களின் அகவுலகை சொல்லும் போது நிச்சயம் சுந்தர ராமசாமி எழுதிய ரத்னாபாயின் ஆங்கிலம் தவறாமல் இடம்பெறும் கதைகளில் ஒன்று பெண்களின் உலகம் நுட்பமானது என்பதனை காட்டிட அந்த கதை ஒன்றே போதுமானது. அதேபோல ஜெயகாந்தனின் அந்தரங்கம் புனிதமானது கதையை பள்ளி நாட்களில் படித்தது மீண்டும் படித்து நினைவூட்டியது அந்த காலத்திற்கே சென்று வந்த உணர்வைத் தந்தது.
இந்த தொகுப்பில் 25 கதைகள் உள்ளன. நாம் வாசித்து அறியும்போது கிடைக்கும் உணர்வை விட கதை சொல்ல மூலம் கேட்டு அறியும்போது நம்மளுடைய கற்பனை இன்னும் அதிகமாக பரவும். நம்மை அந்த மூல வேர்களுடன் நம்மை இணைத்து பார்க்க செய்யும். அவரது குரலில் கேட்கும் போது நம்முடைய உள்ளத்தில் புதிய உணர்வுகளை தோற்றுவிக்கும். அவரின் குரல் அனைவரையும் ஈர்த்தது நம் மனதில் எவ்வாறெல்லாம் அந்த கதை இடம்பெற வேண்டும் என்பதை நம் வழியே அதை உருவகித்து இருப்பார் .இந்த கதைகளை எல்லாம் கேட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தகமாக்கும் வகையில ஈடுபட்டதற்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment