Saturday, 29 March 2025

கலீல் ஜிப்ரானின் இக்கவிதை தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. எதிர்மறை கருத்தையும் நேர்மறை கருத்தாக மாற்றவல்லது. எண்ணமே வாழ்வு! நேர்மறை எண்ணங்களைக் கொண்ட மனிதனுக்கு என்றுமே தோல்வி கிடையாது.பயம்======சமுத்திரத்தில்சங்கமிப்பதற்கு முன்புசஞ்சலப்பட்டு நிற்கிறது நதி!சர்வ நாடியும் துடிக்க பயந்து நடுங்குகிறது சாகப் போவதை நினைத்து !நடந்து வந்த பாதையைநினைவலைகளில் அசை போடுகிறது நதி !மலைமுகட்டில் தொடங்கிகாடுகளில் நுழைந்துகிராமங்களில் புகுந்துபாதைகளில் வளைந்து நெளிந்துநெடுந்தூரம் கடந்து..நிறைவேற்றிய சாகசப்பயணம் அன்றோ!கண்முன்னே இப்போதுகாட்சி தருகிறதுபரந்து விரிந்த பெருங்கடல் !கலந்து விட்டால் கணப்பொழுதில்கரைந்து காணாமல் போய் விடுவோம்என்ற யதார்த்தம் நதிக்கு நன்கு புரியும் !வேறு வழி என்ன உண்டு இப்போது?‘கறந்த பால் முலைப் புகாகடைந்த வெண்ணெய் மோர் புகா’புறப்பட்டு வந்த பாதைக்குபோக முடியாது நதியால் !நதிக்கு ‘ரிஸ்க்’' எடுப்பது‘ரஸ்க்’ சாப்பிடுவதைப் போல !துணிந்து ஒரு முடிவெடுத்தால்தான்பயத்தை வெற்றி கொள்ள முடியும் !நதிக்கு யதார்த்தம் நன்கு புரியும்பெருங்கடலில் கரைந்து நாம் இப்போதுகாணாமல் போய்விடுவோம் என்று!மாறாக....நாமே சமுத்திரமாக இப்போது உருமாறிசாகசம் செய்யப் போகிறோம் என நினைத்துதனக்குத்தானே பெருமிதம் கொள்கிறது !துணிந்து கலந்து ஜீவநதி சமுத்திரமாகிறது!மூலம் : கலீல் ஜிப்ரான்மொழிபெயர்ப்பு : #அப்துல்_கையூம்

No comments:

Post a Comment