Monday, 31 March 2025

#30நாள்வாசிப்புப்போட்டி#25RM055#ஒரு_மாதம் _ஒருஎழுத்தாளர்புத்தகம்-16பக்கங்கள் -231நாள்-7கழிமுகம் -பெருமாள் முருகன்கழிமுகம் என்பது நதியும் கடலும் சேரும் இடம் ஆகும் இதனை அப்படியே நாவலுடன் ஒப்பிட்டால் மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. பழமையும் புதுமையும் இணையும் போது கிடைக்கும் புதிய சிந்தனைகள் புதிய வாழ்க்கை ஆகும். இந்த புத்தகத்தில் நான் படிக்க ஆரம்பித்தது மிகவும் ரசித்தது அதன் முன்னுரை பகுதி தான். நான் எழுதியவை, எழுதுபவை அனைத்தும் புனைவுதான். அவற்றில் சிறிதும் உண்மை கிடையாது. அது மட்டுமல்ல, உண்மை என்றே ஒன்று கிடையாது. உண்மை போலத் தோற்றம் காட்டுபவை உண்டு. இந்தக் கணத்தில் உண்மை போலத் தோன்றுவது அடுத்த கணத்தில் புனைவின் தன்மை கொண்டு விடுகிறது. ஆக எல்லாமே புனைவுதான். புனைவை உண்மை போலத் தோன்றச் செய்வதற்குத்தான் பெரிதும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அப்படிப் பலகாலம் மெனக்கெட்டிருக்கிறேன். அந்த மெனக்கெடல் வீண் போகவில்லை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துவிட்டேன். ஆனால் மேலும் மேலும் அப்படி மெனக்கெட என்னால் ஆகாது. ஆகவே புனைவைப் புனைவாகவே தோன்றச் செய்துவிடலாம் என முடிவெடுத்து எழுதிய நாவல் இது.என் நாவலில் நான் ரசித்தது கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் அசுரர்களின் பெயர்களாக இருக்கும். உதாரணத்திற்கு குமாரசுரர்,மங்காசுரி, மேகாஸ் என்று இருக்கும். இதற்கு காரணமாக அவர் முன்னுரையில் சொல்வது நாம் வாழும் வாழ்க்கை யை அன்றாட வாழ்வில் நெருக்கடியில் ஒரு அசுரலோகம் தான். அந்த அசுரலோகத்தில் உலவும் மனிதர்கள் அசுரர்களாகவே இருக்கிறார்கள். பிரச்சனை களில் மூழ்கி எழுவது பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவது கிட்டத்தட்ட அசுரலோகம் தான் என புரிந்து கொள்ள முடிகிறது. கதாபாத்திரங்கள் முதலில் நெருடலாக இருந்தாலும் போகப்போக நம் மனதுக்கு நெருக்கமாக ஆகிவிடுகிறது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் தான் கதைக்களமாய் நாவலாய் உருவாகியுள்ளது. குமாரசுரர் எனும் அரசு ஊழியிருக்கும் அவன் மகன் மேகாஸ் மற்றும் மனைவியுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். நடுத்தர வாழ்க்கையில் கல்வி தான் முக்கியம் என்று படிப்பதற்கு முக்கிய இடம் கொடுத்து மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்கிறார் .ஆனால் மகனோ மற்ற இளைஞர்களை போல பொறியாளராகவே என்று உறுதியாய் இருந்து ஆகி விடுகிறார். கல்லூரி தேடி அலையும் கதை ஒரு தனி அத்தியாயமா எழுதப்பட வேண்டியது.பொறியியல் கலந்தாய்வு மற்றும் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசிய போது தந்தையிடம் அவன் ஒரு விலை உயர்ந்த அலைபேசி வேண்டும் என கேட்கிறார் பழமையின் மகத்துவத்தை உணர்ந்து அவர் மன நெருக்கடியில் உள்ளாகிறார் .இறுதியில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து அவர்கள் அனைவரும் எந்த மனநிலையில் இருந்தார்கள் என்பதுதான் இந்த நாவலின் கதை. அப்பா மகன் உறவின் பிரச்சனைகளை மிக விரிவாக அலசி உள்ளார். ஒரு இடத்தில் சொல்லும்போது இன்றைய சமூகம் குற்றத்தை கூட மிகவும் ஆஆர்வத்துடன் உற்சாகமாய் செய்கிறது, உதாரணத்திற்கு லஞ்சம் கொடுப்பதை குற்றமாக இருந்தாலும் தன்னுடைய வேலை முடிய வேண்டும் என்பதில் நோக்கமாய் கொண்டு ஆர்வமாய் கொடுக்கின்றனர் அதேபோன்று அலைபேசி உள்ளிட்ட அனைத்து வகைகளையும் அலசி உள்ளார். பிரச்சனைகள் மூழ்கி அதனை சமாளித்து வெளியேறுவது மனிதர்களின் முக்கிய வேலையாய் உள்ளது கழிமுகம் என்பதற்கு பழமையும் புதுமையும் இணையும் இடம் என்று சொல்கிறார் அது நாவலில் மிக அழகாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.*காசு இருக்குதாய்யா? என்ற கேள்வி அக்கறையில் வருவது. இப்படித்தான் அப்பா மகனிடம் அக்கறையுடன் நடந்து கொள்ள முடிகிறது*படிக்கிறாயா என்னும் கேள்வி தகவல் பெறும் பொருட்டு கேட்கப்படும் கேள்வி அல்ல படிப்பதை நினைவூட்ட சொல்லப்படும் கேள்வி.*பேருந்து பயணத்தில் மகனிடம் ஹெட் போன் வாங்கி கேட்கும் தந்தையின் மனநிலையை அப்படியே தத்ரூபமா விவரித்து இருப்பார். மிக யதார்த்தமான நிலையை அப்போது காண முடிந்தது.எதார்த்தமான ஒரு நடுத்தர குடும்பத்தின் மனநிலையை தன்னுடைய நாவல்களில் இவ்வளவு தத்துருபமாய் விவரிக்க முடியுமா என்று தெரியாது. கடின நடையோ புரிந்துகொள்ள கடுமையாகவோ இல்லாமல் வெறுமனே நாம் அண்டை வீட்டில் நடக்கும் வாழ்க்கையை நாம் எழுத்துக்களில் பார்ப்பது போல இருந்தது மிகச்சிறப்பு.தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment