Wednesday, 26 March 2025

புத்தகம் 27


#Reading_Marathon2025
#25RM055

Book No:27/100+
Pages:360

#30நாள்வாசிப்புப்போட்டி
Day-2

ரைட்டர்
-சி சரவண கார்த்திகேயன்

ரைட்டரின் எழுத்துக்களை 2012ல் டிவிட்டரில் இருந்து வாசித்து வருகிறேன். பேட்ஸ் மேன் எல்லா பக்கத்திலும் ரன் அடித்து ஆடுவது போல்,சமூகம் அரசியல், ஜோக், இலக்கியம்,அறிவியல், நடிகை, வரலாறு, ரசனை என அனைதது ஜர்னரிலும் எழுதக் கூடியவர். நல்ல கேள்வியே நல்ல பதிலின் தாய் என்பது போல் மும்மூர்த்திகள் புத்தகம் இவரின் கேள்வி அறிவை எண்ணி சிலாகித்திருக்கிறேன். ரொம்ப இம்ப்ரஸ் ஆனது தடம் இலக்கிய இதழில்.பெடக்ஸ் பற்றி எழுதியிருப்பார். செம ரைட்டரே. அப்பவே மெசேஜ் செய்து வாழ்த்தினேன். அவரை பத்தி நானே சொன்னா போர் அடிக்கும். இனி அவரை பத்தி அவரே சொல்வதை பார்ப்போம். சுயசரிதை போல் விரியும் புத்தகம். எழுத்தை தீவிரமாய் ரசிப்பவனே நல்ல எழுத்தாளன் ஆவதற்கு உதாரணம்.

சுயபுராணம் தலபுராணம் என இரண்டு பகுதிகளாக புத்தகம் அமைந்துள்ளது சுய புராணத்தில் ஆரம்ப நாட்களில் இருக்கும் வாசிப்பும் எழுத்தாளராகவும் நோக்கமும் குறிக்கோளும் சினிமா, இதழ்கள், இணையம், நேர்காணல் என இப்படி விரிகிறது. தலபுராணத்தில் எழுத்தாளரின் அடுத்த கட்டமாக எழுத்து, கதை சொல்ல்,எழுத்தாளர்களுக்கு உரிய உரிமைகள் கடமைகள்,எழுத்தாளர்களாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள  எடுத்த அனுபவங்களையும் இதில் நமக்கு பகிர்கிறார்.

இன்றும் பலர் எண்ணிக் கொள்வது உயர்கல்வியில் தமிழ் படித்திருந்தால் தான் தமிழ் எழுத்தாளராக முடியும் என்பது இந்த அற்புதங்களை முற்றிலும் உடைத்தவர் சுஜாதா என நீளும் பட்டியலில் நம்முடைய ரைட் தரும் பொறியியல் கல்லூரி மாணவர்தான். சுயம் உண்டே தவிர சரிதம் கிடையாது என ஒப்புதல் வாக்குமூலமும் முன்னுரையில் கொடுத்துள்ளார். தலை பிரசவமான முதல் புத்தகத்தில் இளையராஜா குறித்து எழுதிய அனுபவத்துடன் தான் வாசித்து பிரம்மிப்படைந்த எழுத்தாளர்களை பற்றியும் கூறியுள்ளார். 

துக்கத்துக்கான ஒத்தடமே ஆறுதல் என்று கூறி ஆறுதல் பரிசுகள் எத்தனை ஆறுதலானவை என சொல்ல முடியவில்லை என நான் ஆறுதல் பரிசு பெற்ற அனுபவங்களையும் பகிர்கிறார். உண்மையில் புத்தகம் வெளியிடுவது என்பது பிரசவமான வேதனை தான் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவை வாசகர்களை சென்றடைய வேண்டும் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்க்காத எழுத்தாளனே இல்லை எனலாம். அதே போல் தான் கலந்து கொண்ட கருத்தரங்கங்கள் வாசிப்பாளனாக தனக்கு கிடைத்த அனுபவங்கள் என எழுதுவதற்கு தேவையான உரங்களை புத்தகம் மூலம் தான் பெற்றதாக அவரின் எழுத்துக்களில் காண முடிகிறது.

முகநூலின் அவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பின் வழியே அறிவது அவர் எப்போதும் நடுநிலை தவறிவதில்லை. பலர் சொல்வது போல நடுநிலை என்பது ஏமாற்று வேலை என்பார்கள் ஆனால் அதற்கான விளக்கத்தை அவரே தருகிறார். என் அறிதலில் உண்மை என்னவோ கருத்து என்றால் அதில் என் புரிதலை வந்தடையும் நிலைப்பாடு என்னவோ அதையே எழுதுவேன் அதன் பக்கமே நிற்பேன் என்கிறார். எல்லோருக்குமான இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த பல எழுத்தாளர்களை குறிப்பிடும்போது "எழுத்தில் சுயம்புகள் அரிது ஆனால் அதே சமயம் எழுத்தில் கற்றல் பொதுவாக ஏகலைவன் மார்க்கமாகவே நிகழும்" என்று உரைக்கிறார்.

முதல் குறும்பட அனுபவத்தையும் திரைப்படத்தில் தான் பங்கு கொண்டு நடந்த கசப்பான அனுபவத்தையும் நமக்கு பகிர்ந்துள்ளார். உண்மையில் எவ்வளவு தூரம் எழுத்தாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. மின்னதழில் பெருமாள் முருகன் நேர்காணலை வைத்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்த அனுபவம் திகைப்பூட்டுகிறது.

புனைவு எழுத்துக்களே ஒரு எழுத்தாளர் உருவாவதற்கான களம் என்பதனை கூறி புனைவு எழுத்தில் தான் பெற்ற அனுபவத்தையும் விவரிக்கிறார். கதைகளின் கதை எழுதுவதற்கான முதல் தகுதி வாசிப்பு என்பதனையும் பலர் மறந்து வரும் சூழலில் தன்னுடைய ஒவ்வொரு எழுத்திலும் தான் வாசித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
நான் நினைத்துப் பார்க்கிறேன் அப்போது வலைப்பூவில் அவர் 85 கட்டுரைகள் தான் ரசித்த பகுதிகளை பகிர்ந்தது இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது. அதனை அவ்வப்போது நானும் வாசித்து வந்துள்ளேன்.

பல மாணவர்கள் வளர்ந்து பெரியவரான உடன் ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை பார்ப்பதை தவிர்ப்பார்கள்.ஏனெனில் குழந்தையாய் இருக்கும்போது தான் செய்த குறும்புகளை அவர்தான் பார்த்திருக்கிறார் என்று நினைப்பில்.. அதேபோல் எழுத்தாளர்கள் தங்களுடைய முதல் கதைகளை தொகுப்பில் சிலர் அதனை தவிர்ப்பதை சுட்டிக்காட்டி உதாரணத்திற்கு காகஙகள் பகுதியில் சுந்தர்ராமசாமி தவிர்த்ததைப் பற்றி சொல்லியிருக்கிறார் .உண்மையில் நடைமுறை எதார்த்தத்தில் எழுத பழகிய ஒருவன் முதல் கதை படித்துப் பார்த்தால் சுமாராகத்தான் இருக்கும். தனது புகழை எடுத்து விடுமோ என்று எண்ணத்தில் பலரும் அதனை செய்து விடுவார்கள். ஆனால் ரைட்டர் அவர்கள் முதல் கதை என்பது நம்முடைய முதல் குழந்தை போல நாம் செய்த தவறுகள் நம்முன் தெரியும் என்பதனை சுட்டிக்காட்டியது மகிழ்ச்சி அளித்தது.

*எழுத்தாளனுக்கு மொழி ஆயுதம் அல்ல வாகனம் தான். சிந்தை தான் அவனது ஆயுதம் என்ற வரி மிகவும் ரசிக்க வைத்தது.

சுண்டக்காய் 8 அணா சுமை கூலி பத்து அணா என்பார்கள் அதே போல் தான் எழுதிய புத்தகத்தை மார்க்கெட்டிங் செய்வதும் புத்தக விழாக்கள் நடத்துவதும் மின்னூலின் ஆதிக்கமும் எழுத்தாளர் உரிமைகளை பற்றியும் இதில் எடுத்துரைத்துள்ளார்.
படைப்புச் சுதந்திரம் ராயல்டி பிரச்சனைகள் எழுத்தாளர்களின் கடமைகளாக முன்வைக்கும் கூறுகள் ஆகியவற்றை பற்றி இதில் இணைத்துள்ளார். அவ்வப்போது நேர்காணலையும் பகிர்ந்து புத்தகம் போர் அடிக்காமல் வாசிப்பு அனுபவத்தை தர எண்ணியுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வினை வர வைக்கும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment