பாவனை
ஒருத்தியைக்
காதலிப்பது போன்ற பாவனையிலிருந்து
ஆண்கள் விலகுவதில்லை
அந்த பாவனையில்
தன்னைக் கரைத்துக்கொள்வது
அவர்களுக்கு உவக்கிறது
தாங்கள் கட்டமைக்கும் பாவனையை
ஒருகட்டத்தில் உண்மை எனவும்
கருதிவிடுகிறார்கள்
பாவனைகளை சம்பாதித்து
முத்தமும் குழந்தைகளும் கூட
பெற்றுவிடுகிறார்கள்
பாவனை கூட்டிலேயே
பொழுதுகளைக் கடத்துகிறார்கள்
வேறு என்ன செய்வார்கள்
வாழ்வை பாவனையாக
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
-யுகபாரதி
No comments:
Post a Comment