Tuesday, 29 May 2018

யுகபாரதி

பாவனை

ஒருத்தியைக்
காதலிப்பது போன்ற பாவனையிலிருந்து
ஆண்கள் விலகுவதில்லை

அந்த பாவனையில்
தன்னைக் கரைத்துக்கொள்வது
அவர்களுக்கு உவக்கிறது

தாங்கள் கட்டமைக்கும் பாவனையை
ஒருகட்டத்தில் உண்மை எனவும்
கருதிவிடுகிறார்கள்

பாவனைகளை சம்பாதித்து
முத்தமும் குழந்தைகளும் கூட
பெற்றுவிடுகிறார்கள்

பாவனை கூட்டிலேயே
பொழுதுகளைக் கடத்துகிறார்கள்

வேறு என்ன செய்வார்கள்
வாழ்வை பாவனையாக
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்

-யுகபாரதி

No comments:

Post a Comment