[24/04, 7:34 am] மணிகண்ட பிரபு: நூறு பூ தாங்க
எனக் கேட்கும்
குழந்தைக்கு
எண்ணாமல்
பத்துக் கண்ணிகள்
அதிகமாய் விட்டு
நறுக்கித் தரும்
பெண்ணுக்காகப்
பெய்கிறது மழை
-கலாப்ரியா
[24/04, 7:44 am] மணிகண்ட பிரபு: மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன.சண்டை போட்டுக்கொள்ளும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களாக சண்டை போட்டுக்கொள்கின்றன
-டால்ஸ்டாய்
[24/04, 7:48 am] மணிகண்ட பிரபு:
தோசை தெய்வம்
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.
-படித்தது
No comments:
Post a Comment