உளி பழக செதுக்குகிறேன்
சிலை காண அல்ல.
~~~~
ஒரே மூச்சில் போய்
சேர்ந்திருக்கலாம்
பெருமூச்சில்
தூரத்தை
அதிகமாக்கி விட்டீர்கள்.
~~~
கடந்து வந்த தூரம்
கடக்க வேண்டிய
தூரத்தைக்
குறைத்துக்கொண்டே
வருகிறது.
~~~
யாரோ தள்ளி
யாரோ விழுவதைப்போல
உங்கள் வீழ்ச்சியை
பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.
~~~
நீந்தி தேடுகிறது
நதி
குளித்துப்போனவளின்
தடத்தை.
~~~~
வேலை முடித்தாயிற்று
யாரும் எழுப்ப மாட்டார்கள்,
என்று படுத்தேன்
அடுத்த வேலை எழுப்பிவிட்டது.
~~~~
கவனம் பெறும் ஒன்றை
நாம் செய்ய வேண்டும்
என்பதை விட
நாம் செய்யும் ஒன்று
கவனம் பெற வேண்டும்
என்பது சக்தி வாய்ந்தது.
~~~~
எழேத்தின் ருசியை
விட்டுவிட்டு
பிழையின் கசப்பை
அருந்துகிறீர்கள்.
~ராஜா சந்திரசேகர்
#தனித்து வரும்போது-கெட்ட
தறுதலை கண் வைத்தால்
இனிக்க நலம் கூறு-பெண்ணே
இல்லாவிடில் தாக்கு..
உமியல்ல பெண்ணின் வலக்கை-தீயோர்
உயிரை இடிக்கும் உலக்கை
-பாரதிதாசன்
#கடும்புதர் விலக்கிச் சென்று
களாப் பழம் சேர்ப்பார் போல
நெடும்புவி மக்கட்கான
நினைப்பினிற் சென்று
பலப்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர் அவற்றையெல்லாம்
கொடும் என அள்ளி உன் தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்
-பாரதிதாசன்
(அதாவது படித்து அறிந்த அனுபவங்களை ஷேர் செய்யுங்கள் னு சொல்றார்)
No man is a hero to his wife
நீங்க எல்லாருக்கும் ஹீரோவாக தெரியலாம்..ஆனால் உங்கள் மனைவிக்கு அல்ல
No comments:
Post a Comment