Saturday, 18 April 2020

Vikrithi (மலையாளம்)*மணி



எந்த எதிர்பார்ப்போ பெரிய நடிகரோ இல்லை.ஆனால் ஒரு ஃபீல் குட் மூவி. ஒரு உண்மை சம்பவத்தை மிக அழகாக நேர்த்தியாக சொல்லும் படம்.பெரிய திருப்புமுனை எதுவுமின்றி சிறிய விஷயம் எப்படி பெரிய விஷயமாய் உருவெடுக்கிறது என்பதே கதை.

#கதை

வாய்பேச முடியாத தம்பதிகளாக ட்ரைவிங் லைசென்ஸ் புகழ் சூரஜ்ஜும் அவர் மனைவியும். சூரஜ் ஒரு பள்ளியில் லைப்ரரியன்.அவர் மனைவி ஒரு தையல் வேலை செய்யும் தொழிலாளி.ஒரு கால்பந்து வீரரான மகன் மற்றும் தங்கை.அமைதியாய் செல்லும் வாழ்க்கை

அதே ஊரில் துபாயிலிருந்து வரும் செளபின்.மிடில் க்ளாஸ் முஸ்லிம் குடும்பம்.அவன் தங்கையோடு பிடித்த பெண்ணை காதலித்து கைப்பிடிக்க நாள் குறிக்கப்படுகிறது.

ஒருநாள் சூரஜ்ஜின் மகளுக்கு காய்ச்சல். மருத்துவமனை ஐசியூவில் அனுமதிக்கப்படுகிறார்.2 நாள் முழுக்க இரவும் பகலும் கவனித்துக் கொள்கிறார் சூரஜ்.மனைவியை விட்டுவிட்டு வீட்டுக்கு மெட்ரோவில் செல்லும்போது அசதியில் நீட்டி படுத்துவிடுகிறார்.அப்போது அதே ரயிலில் வரும் செளபின் அவரை போட்டோ எடுத்து குடிகாரன் என முகநூலில் பகிர அது சூரஜ்ஜின் வாழ்விலும் குடும்பத்திலும் ஏற்படும் குழப்பம் தான் கதை.இது தவறென தெரியவர செளபீனின் மன உளைச்சல், அவனை கைது செய்ய வரும் காவல்துறை அதிகாரி,இறுதியில் ஒரு நெகிழ்வான நிகழ்வுடன் படம் முடிகிறது.

#சூரஜ்

ஒருகை ஓசை, மொழி  படத்துக்குப் பின் ஒரு வாய் பேச முடியாத கதாநாயகன்.ரொம்ப உணர்வு பூர்வமாக இயல்பாய் அவரின் உடல்மொழி உள்ளது.தான் குடிக்கவில்லை என கதறும்போதும், மகனிடம் அதை உணரவைக்கும் போதும் நம் மனசையும் கரைத்துவிடுகிறார் சூரஜ்.

முகநூலை அன் இன்ஸ்டால் செய்வது,செய்ததவறுக்கு மருகுவது, மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிடுவது,மன்னிப்பு கேட்க மன்றாடுவது, இறுதிகாட்சியில் பீதி என  பக்கத்து வீட்டுக்காரராய் தெரிகிறார் செளபீன்.

#டின்ஜ்

*பொருத்தமான இடங்களில் வரும் மான்ட்கேஜ் சாங் கச்சிதம்

*படம் மெதுவாகத்தான் நகரும் ஆனால் ரசிக்கும் விதத்தில்

* வாய் பேச முடியாதவர் மனைவியும் அவ்வாறு இருப்பது நடைமுறை இயல்பாய் இருக்கிறது.பரிதாபம் வருகிறது.

*தந்தைக்காக கோபப்படுவதும்,
அந்த இயலாமையை தந்தையிடம் காட்டுவதும்,காவல் நிலையத்தில் ஆக்ரோஷமாகவும் மகன் வாழ்ந்திருக்கிறார்.இறுதியில் தன் தந்தை குடிகாரனில்லை எனவும் சமூக வலைதளத்தில் பகிர்கிறார்..தந்தையை விட்டுக்கொடுக்காமல்

*படத்தின் இறுதிக்காட்சி தான் மைல்கல்.பொழுதுபோக்கிற்கு ஒரு போட்டோ எடுத்து லைக்கிற்காக பகிர,
பாதிக்கப்பட்ட சூரஜ் அந்த கோபத்தில் அவரின்  குடும்பத்தை சந்திக்கும் போது அதை தன் நடிப்பால் உணர்வு பூர்வமாய் நம்மையும் உணர வைப்பார்.அட்டகாசம் சாரே.

ஒரு நல்ல எதார்த்த படம். பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment