Tuesday, 21 April 2020

யுகபாரதி

முப்போகமும்
முங்கித் திளைத்த
மகசூலால்
வைப்பதற்கு இடமற்ற
நிறை வாழ்வு

மினுக்கும், ஷோக்கும்
மேலோங்க
குதிரை வண்டிகளில்
சேக்காளி சகிதம்
கூத்தியாளை வாழவைக்க
கழுத்து நிரம்பிய
காசு பணத்தைக்
காமத்துக் கழித்த
கதைகள் கோடி

காவிரிப் பாசனம்
கரை புரண்டோட
வருஷம் முழுக்க
வற்றாத வாழ்க்கை

வருமானத்தை பத்தாயத்திற்குள்
பதுக்கின ஜமீன் குடில்கள்

இஷ்டத்துக்கு இறைத்த கேணி
ஊற்றுக்கண் அடைபட
பூசிய சாயம் பொய்யென்றாகக்
கதியானதோ கந்தல் துணி
கக்கடைசியில்

சோறுடைத்த சோழநாடு
சோத்துக்கில்லாமல்
பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில்

-யுகபாரதி

No comments:

Post a Comment