நீர்நிலை குறித்து சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் கட்டுரையிலிருந்து
*ஊருணி -ஊர் நடுவே உள்ள குடிநீர் குளம்
*இலஞ்சி-ஒரு சிறிய குடிநீர் தேக்கம்
*கட்டுங்கிணறு-சரளை நிலத்தில் வெட்டி இருப்பார்கள்.செங்கல்லால் ஆன உட்புறச்சுவர்
*கலிங்கு-ஏரி முதலிய நீர்தேக்கம் உடைப்பு எடுக்காமலிருக்க ஷட்டர் மாதிரியான கட்டமைப்பு
*கால்-நீர் ஓடும் வழியைக் கால் என்கிறோம்
*கால்வாய்-ஏரி,குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாயும் கால் வழி
*குட்டை-கால்நடைகளை குளிப்பாட்ட பயன்படும் நீர்நிலை
*குட்டம்-பெரிதாக இருக்கும் குட்டை
*குண்டு-சிறிய அளவில் குளிக்கும் நீர்நிலை/செயற்கை நீச்சல் குளம் போல
*குண்டம்-குளிப்பதற்கு உள்ள சிறிய களம் குண்டம்
No comments:
Post a Comment