கோலப்பொடி
Monday, 31 August 2020
முகுந்த் நாகராஜன்
வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தில்
பூ வேண்டும் என்கிறது
-முகுந்த் நாகராஜன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment