Wednesday, 30 March 2022

இந்திய வரலாற்றில் வ.உ.சி-ப முத்துக்குமாரசுவாமி

#30நாள்_வாசிப்புப்போட்டி

#RM105

Book:4
Pages:816

இந்திய வரலாற்றில் வ.உ.சி
-ப முத்துக்குமாரசுவாமி

தமிழகத்து விடுதலைப் போராட்ட வீரர்களில் முதன்மையானவராக வைத்து போற்றத் தக்கவர் வஉசி அவர்கள்.திலகரின் போராட்ட குணத்தையும், நாட்டின் விடுதலையை இரு கண்ணாக மதித்து செயல்பட்டவர். "நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ" என்று வெள்ளையனை பார்த்து கேள்வி கேட்ட ஒப்பற்ற வீரர்.
வெறுமனே வாழ்க்கை வரலாறு நூலாக மட்டும் அமையாமல் அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், நினைவுகளின் பதிவுகள், யாரும் அறியாதவாறு வ உசியின் படைப்புலகம் குறித்த பதிவுகள், அரசியல் அறிஞர்களின் பார்வையில் வஉசி, தமிழர்களின் பார்வையில் வஉசி மற்றும் வஉசி குமாரரிடம் எடுத்த நேர்காணல்கள் என வ உசி குறித்த பிம்பங்கள் அனைத்தையும் ஒருசேர வாசிக்க கிடைக்கிறது இந்த நூல்.

வ உ சி யின் காலகட்டத்தில் சுதேசிக் கிளர்ச்சி உச்சநிலையை அடைந்திருந்தது .பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி சிறைவாசம் பெற்று தமிழ்த் தொண்டாற்றி வழக்கறிஞர் தொழிலையும் பார்த்தவர். வ உசி மீனாட்சியம்மை தம்பதியருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் நான்கு பெண் பிள்ளைகள் என மொத்தம் எட்டுபேர். ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரும் தனக்கு உதவிய நண்பர்களின் நினைவாக வைத்து  நன்றிக்கடன் தீர்த்தவர்.

#நிகழ்வுகள்

வ உ சி யின் அரசியல் பிரவேசம் இருபத்தி ஒன்றாம் வயதில் பாலகங்காதர திலகரின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்து அரசியல் ஆர்வம் கொண்டார். பின்னாளில் பாரதியின் கருத்துக்கு ஞானபானுவில் விவாதக் கட்டுரை எழுதும் அளவுக்கு அவரின் தனித்துவம் வளர்ந்தது. வ உசி உருவாக்கிய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் துவக்கமும் அதன் பங்குதாரர்கள் பற்றிய விபரமும், கப்பல் கம்பெனியின் நோக்கமும் விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது.

1885 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட காங்கிரஸ்.. அடுத்த 13 ஆண்டுகளில் இந்தியாவின் தென்கோடி ஒட்டப்பிடாரத்தில் ஒரு கிளை அமைத்தார் வஉசி. அதற்கு அவரே செயலாளர் பொருளாளர் ஆக அமைந்ததால் தென் தமிழகத்தில் மூத்த காங்கிரஸ்காரராக திகழ்ந்தார்.

அரசியல்வாதியின் மறுபுறம் தமிழ் தொண்டராக திகழ்ந்தார். தாய் தமிழ் மீது கொண்ட தனியாத காதலால
 1905 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்கம் வஉசி தனது உறுப்பினராக வரவேற்றுக் கொண்டது. சுதேசமித்திரன் விவேகபானு முதலிய இதழ்களில் கருத்தாழமிக்க கட்டுரையை எழுதி வந்தார்.

ரவுலட் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தபோது ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து
 பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன . 34ஆம் ஆண்டு அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணச் செலவுக்கு பணவசதி இல்லாமல் இருந்தபோது வ உசி அவருடைய நண்பரின் தண்டபாணி பிள்ளை செய்த ஏற்பாட்டில் ஈவே ராமசாமி நாயக்கர் உடன் வ.உசி அமிர்தசரஸ் சென்றார். காந்தியின் கொள்கையின் பால் ஈடுபாடு கொண்டாலும் போராடி சிறைக்குச் செல்லாமல் சுயராஜ்யம் கிடைத்துவிடும் என்று நினைக்காதீர்கள் என்று மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். திலகரின் போராட்ட குணம் அவரின் வாழ்நாள் இறுதி வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சுதேசி கப்பல் கம்பெனியை 1909ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆரம்பித்தார். எக்ஸாண்ட்ரியா புதிய கம்பெனியின் ஏஜெண்டுகள் லண்டனில் உள்ள இந்திய வர்த்தக கம்பெனியின் மூலம் 50 ஆயிரம் பவுனுக்கு விலைக்கு வாங்கினார். பம்பாய் துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்டு 1069 டன் எடையுள்ள பிராணிகளையும் சரக்குகளை ஏற்றிச் செல்ல வசதியுடன் 200 பிரயாணிகளை ஏற்றும் வசதியும் உண்டு. யுத்தத்திற்கு முன்பு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே 2000 டன் சரக்குகளை வாரம் இருமுறை அதாவது செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு கொழும்பில் இருந்து திங்கள் வியாழன் அன்று புறப்படும் வகையில் இருந்தது. திரைப்படங்களில் பார்த்தது போல சுதேசி இயக்கத்தை கட்டமைத்தது மக்களிடையே அமைதி இன்மையை ஏற்படுத்தியதாகவும் ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றவர் நம்முடைய வஉசி அவர்கள்

1912 ஆம் ஆண்டு கண்ணனூர் சிறையில் இருந்து வெளியே வந்த வ உ சி அவர்கள் தனது சொந்த ஊருக்குச் செல்லாமல் சென்னையில் சென்று வறுமை நிலையிலும் வேலை பார்த்து வந்தார் அப்போது திலகர் தனது இந்தியன் ஹோம்ரூல் நிதியிலிருந்து மாதம் 100 ரூபாய் அனுப்பி வந்தார். சென்னையில் தொழிலாளர் இயக்கத்தை சீர் அமைத்ததுடன் கோவையிலும் தொழிலாளர் இயக்கத்தை சீர் அமைக்க எண்ணி குடிபெயர்ந்தார்.

வ உ சி யின் இன்னொரு முகம் எழுத்தாளனாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியது. சென்னையில் நடைபெற்ற திலகரின் மேடை பேச்சை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் நம்முடைய வ.உசி அவர்கள்தான்.

மிதவாதிகளின் போக்கை கண்டித்ததுடன் ஆங்கிலேயர் நம்மை ஆள தெரிந்து கொண்டு வந்தால் நம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைப்பார்களாம் என்பது அறியா பேச்சு.நீச்ச தெரிந்து கொள்ள விரும்பும் முன்  நீ முதலில் நீந்த கற்றுக் கொண்ட பிறகு நீரில் இறங்கலாம் என்று சொல்வது போல் ஆகும் என்று தனக்கே உரிய தீவிரவாத சிந்தனையுடன் மக்களிடையே எழுச்சி உரையை ஆற்றியவர் வ உசி அவர்கள்.

வ உ சி யின் திருக்குறள் உரை, தொல்காப்பிய உரை, சிவஞானபோத உரை, வஉ சி கண்ட மெய்ப்பொருள், ஜேம்ஸ் ஆலன் எழுதிய எளிமையில் இருந்து வலிமைக்கு எனும் நூல் பரவலான பாராட்டை பெற்ற நூலாகும், பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகள் வ உசியை பற்றிய தெரியாத அறியாத சுவையான நிகழ்ச்சிகளை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. வழக்கறிஞர் தொழிலில் வாய்மை காத்தல் இந்நாளில் கடினம் என நினைத்த அவர் தம் பிள்ளைகள் வழக்குரைஞராக வரவேண்டும் என்று விரும்பவில்லை. வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார் என்று வக்கீல் குறித்த தன் கருத்தையும் இதில் அவர் மகன் பதிவு செய்துள்ளார்.

ஐந்தாண்டு  சிறைவாசம் அவர் உடல்நலத்தை பெரிதும் கெடுத்தது. சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின்னர் வறுமையில் இருந்தாலும் 1932 ஆம் ஆண்டு 60 ஆவது நிறைவு விழாவை ஒட்டி தேச மக்களுக்கு உள்ள நன்றியறிதல் நிகழ்வாய் டாக்டர் வரதராஜூலு நாயுடு முதலில் நண்பர்கள் பண உதவி பொருள் உதவி செய்தார்கள். 1936ஆம் ஆண்டு தேசத்திற்காக போராடிய இந்த தியாகி சுதந்திரத்தை பார்க்காமலேயே வீடு பேறு அடைந்தார்

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 
இல்லாண்மை ஆக்கிக் கெளல்

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment