மாணவர்கள் கால்பந்து பயிற்சியாளருக்காக ஆவலுடன் காத்திருந்த போது அந்த கோச் மைதானத்திற்கு வந்தார்.
விளையாடலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம். அவரிடம் கால்பந்து இல்லை.
ஏன் பந்து கொண்டு வரவில்லை? என்று கேட்டனர். அவர் கால்பந்து மைதானத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றார்.
22 பேர்.
எத்தனை கால்பந்துகள் மைதானத்தில் இருக்கும். 'ஒன்று'. எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருத்தரிடம் மட்டுமே பங்து இருக்கும். நாம் மீதம் இருக்கும் 21 பேரும் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்று கற்றுக் கொள்ளப் போகிறோம் என்றார்.
பந்து வைத்திருப்பவனைப் பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. பந்து இல்லாத மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதே வெற்றியை தீர்மானிக்கிறது
இனிய காலை
No comments:
Post a Comment