Tuesday, 30 January 2024

இனியகாலை


இளஞ்செடியை சுற்றி வேலிக்கூண்டு ஒன்றை அமைத்தான் தோட்டக்காரன். இது நம் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று செடி நினைத்தது. மனம் நொந்தது. வெளியே சுதந்திரமாக தெரியும் பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து பெருமூச்சு விட்டது. ஒரு கட்டத்தில் அதற்கு கோபம் வந்து. தன் ஒரு கிளையை வளைத்து வெளிக்கூண்டுக்கு வெளியே நீட்டியது.. ஆகா இதுவல்லவோ சுதந்திரம் என எண்ணியது.

 ஆனால் அங்கு வந்த மேய்ச்சல் மாடு ஒன்று தன் நாவினால் வெளியே இருந்த இலைகளை தாவி இழுத்து சுவைத்தது. பின்பு இளஞ்செடியை வேரோடு கீழே சாய்த்தது. மரமாக நிமிர்ந்து நிற்கும் வரை பொறுமையோடு இருந்திருந்தால் வேலிக் கூண்டு இல்லாமல் போயிருக்கும், சுதந்திரமும் கிடைத்திருக்கும்.

' ஏன் போடப்பட்டுள்ளது என்பதை அறியாத வரை எந்த வேலியையும் தகர்க்காதே" என்கிறார் 
ராபர்ட் ஃப்ராஸ்ட் 

இனிய காலை

No comments:

Post a Comment