'எனக்குச் சொற்களை மிகவும் பிடிக்கும்,
அறியப்படாத ஏதோவொரு உலகிலிருந்து அவை தோன்றுகின்றன,
வெள்ளி மீன்களைப் போல துள்ளிக்கொண்டிருக்கக்கூடியதும்,
கூழாங்கற்களைப் போல வடிவேறியதுமான சொற்களைத் தேடி ஓடுகின்றேன்,
ஒரு பழத்தைப் போல அவற்றைத் துடைத்துத் தோல் உரித்துக் கடித்துத் தின்பேன்,
கடினமான சொற்களை உருக்கிக் குடிப்பேன்,
பேராசையுடன் சொற் களைப் பிடித்து என் கவிதையில் சேகரித்து வைப்பேன்,
பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, சொற்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
-பாப்லோ நெரூதா
No comments:
Post a Comment