Thursday, 20 October 2022

-சுந்தர ராமசாமி


மனித இதயங்களில் தான் எவ்வளவு துக்கம் உறைந்து கிடக்கிறது. அத்துக்கங்களைக் கொட்ட அனுதாபத்தோடு ஆழ்ந்து கேட்கும் முகங்களைத் தேடி அலைகிறார்கள். சுற்றத்திடமும் பந்தங்களிடத்திலும்தான் மனிதன் தன் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வான் என்றும், அவர்களிடம் தான் வெளிப்படையாகப் பேசுவான் என்றும் நம்புகிறோம். அல்ல. மூன்றாம் மனிதனிடமே, முன்பின் தெரியாதவர்களிடமே தன்னைப்பற்றி, தான் விரும்பும் விதத்தில் கூறி, தனது விருப்பங்களுக்கு ஏற்ப தன்னை முன்வைத்து,"எனக்கு இந்த கொடுமை நிகழலாமா?" என்று மனிதனால் கேட்க முடியும்.
                                            
                                            -சுந்தர ராமசாமி

No comments:

Post a Comment