Saturday, 15 October 2022

கற்றது கைம்மண் அளவு.


கற்றது கைம்மண் அளவு.

ஔவை பிராட்டி, ஏன் கற்றது கைம்மண் அளவுன்னு சொன்னாங்க? கற்றது சிறு துளின்னு சொல்லியிருக்கலாம், கற்றது கடுகளவுன்னு சொல்லியிருக்கலாம். கைம்மண் என்ற சொல்லை நாம் எப்படி புரிந்துகொள்ளலாம்? 

கையளவு மண்ணை எடுத்துக்கொள்ளுங்க. இது தான் நாம் கற்ற அளவு. கையளவு மண், அதே அளவு இருப்பதில்லை. விரலிடுக்குகள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக கீழே கொட்ட ஆரம்பிக்கும். அதே போல, சிறிது நேரத்தில் நமது கை வலிக்க ஆரம்பிக்கும், கை அசையும், அப்பவும் மண் கீழே கொட்டும். 

அதே போல நாம கற்றதை நிறுத்திட்டு, இது போதும்ன்னு திருப்தி அடைஞ்சிட்டா, கைம்மண் போல கொஞ்சகாலத்தில் அது நம்மிடருந்து கரைய ஆரம்பித்து விடும். இல்லை. நான் வலுவானவன், கையை ஸ்டெயிட்டா பிடித்துக்கொண்டு, இருக்கும் மண்ணை கொட்டாம வைத்திருப்பேன்னு சொல்வீங்கன்னா, எவ்வளவு நேரம் அப்படி கையை ஒரே நிலையில் வைத்திருக்கமுடியும்? ஐந்து மணி நேரம்... அல்லது பத்து மணி நேரம்.... அல்லது இரண்டு நாள்? அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல கை வலிக்க ஆரம்பித்துவிடும். 

அதே போலத் தான் நாம மேலே கற்காமல், கற்றுக்கொண்டதோடு போதும் என நிறுத்திவிடும் போது ஒரு கட்டத்தில் நாம கத்துக்கிடட விஷயமே சுமையாகி போய்விடும். அப்பப்ப கைல இருக்கும் மண்ணை கொட்டிட்டு, புது மண்ணை அள்ளிக்க வேண்டியது தான். 

இதைத் தான் learning - delearning - relearning அப்படின்னு சொல்றாங்க.

No comments:

Post a Comment