💥அந்த நாலு நாய்கள்
குரைத்துக் கொண்டுதான்
இருக்கும்.,
அரிப்பெடுக்கும் நாக்கும்
குறுகுறுக்கும் பல்லும்
குரைப்பதற்கு பொருள் தேடி
குடல் தெறிக்க அலையும்
வானத்துக் குளிர் நிலவே
பூமி இருட்டோடு
போரிடும் ஒளி விளக்கே...
💥அந்த நால்வருக்கும் அஞ்சாமல்
நடு வானில் நில் .
*தேவதச்சன்*
No comments:
Post a Comment