கற்றதும் பெற்றதும்-43
*மணி
ஒரு நூறு வார்த்தைகளை
வாணலியில் போட்டு
ஆறு வார்த்தை வரும்வரை
வறுங்கள்.அதான் ஹைக்கூ
-அப்துல்ரகுமான்
#ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்
-சுஜாதா
நள்ளிரவில்
தூரத்தில் ஒருகதவு
இழுத்து சாத்தப்பட்டது
-இம்மூன்று வரிகளின் பரிணாமங்களை விவரிக்கிறார் சுஜாதா..இக்கவிதையில் அவன் தனிமையை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லையா, கவலையா, உடல்நலமின்மையா? யார்? ஏன் விழித்திருக்கிறான்? நகரமா? கிராமத்தில் அத்தனை சத்தம் இருக்காது. எனவே அது நிச்சயம் கிராமம்தான். அந்த வேளைக்கு வீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா? மனைவியா? மகனா? அழுது கோபத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்களா?
மூன்றே மூன்று வரிகள் அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை பாருங்கள்.ஒஸாகி ஹோஸாய் என்கிற நவீன கவிஞர் எழுதியது. உங்கள் சிந்தனை என்னும் ஜலபரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ
#ஹைக்கூ
ஹைக்கூ என்பதற்கு அர்த்தம் 5,7,5 அசைகள் கொண்ட ஜப்பானியக் கவிதை என்கிறது. ஹைக்கூ ஓர் அனுபவம். தனியே இருக்கும்போது வானத்திலோ, வீதியிலோ, ஒரு விந்தையான சமாச்சாரத்தை பார்த்ததும் உடனே தெரிந்தவரைக் கூப்பிட்டு 'அட! இதை வந்து பாரு' என்று சொல்கிறோமே அது போல ஒரு அனுபவ பங்கீடு.
#தமிழில் ஹைக்கூ
ஹைக்கூ இலக்கண சுத்தத்தை மறந்துவிட்டால் பல காட்சிகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன.
"மூங்கில் இலைமேலே
தூங்கும் பனி நீரே"
சிலப்பதிகாரத்தில்
தளர்ந்த நடையில்
தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கை
மறையோன்
*கண்ணகியின் கதை குறித்து
மெய்யிற் பொடி
விரிந்த கருங்குழல்
கையில் தனிச் சிலம்பு
கண்ணீர்
*திருக்குறளில் சில
*யான் நோக்கின்
நிலம் நோக்கும்
என்பது நேரடி ஹைக்கூ
*ஐரோப்பாவிலும் ஹைக்கூ பரவி இளைஞர்களிடம் பிரபலியமாயிற்று.
"தண்ணீர் பக்கெட்டில்
குப்புற மிதக்கும்
செத்த எலி"
#ஹைக்கூ கலை
மூன்று வரிக்குள் சொல்ல மொத்தக்கவிதையில் பாதியிலோ அல்லது இரண்டாவது வரியின் இறுதியிலோ ஒரு கருத்து தொடர்ந்தால் வடிவம் பெறும்
"கொட்டும் மழைக்கு
வாயைத் திறந்து
இறந்த பூனை"
"காலி லிஃப்ட்
திறக்கிறது
மூடுகிறது".
ஹைக்கூ ஒன்றும் பெரிய செப்பிடு வித்தை இல்லை. இதுவரை படித்ததை வைத்துக்கொண்டு உங்கள் மனதில் பல ஹைக்கூ தோன்றும். அதை எழுதும் முன் சில யோசனைகள்
*நேரடி அனுபவம் &பார்த்து உணர்ந்ததை எழுதுங்கள்
* அலங்காரம் இல்லாமல் நேரடியாக அப்படியே கடத்தும் நோக்கத்துடன் எழுதவும்
*முதல் இரண்டு வரியில் ஒரு கருத்தும் அடுத்த வரியில் தொடர் கருத்தும் அமைக்க முயலவும்
* வெறும் வார்த்தை சித்திரம் மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில் சிந்தனை, அர்த்தங்கள் இருந்தால் சிறப்பு.
கல்லூரி மாணவர்கள் எழுதியது
"நேற்று என்
பேனாவையும் மீனாவையும்
கானோம்"
இஷிகாவா தாகு என்பவர்
*நிலைக்கண்ணாடி கடையில்
அதிர்ச்சி.
நான் தெருப்பொறுக்கி போல
ஜப்பானிய ஹைக்கூவில்
*அப்பா ஆபீஸ் போகிறார்
டாட்டா காட்டினேன்:
அப்பா கையை ஆட்டினார்"
அம்மா டாட்டா காட்டினாள்: அப்பா கையை ஆட்டவில்லை ஏன்?
மெல்லிய சோகத்தில் சிறுமி எழுதியிருப்பார்.
#கற்றதும் பெற்றதும்
ஹைக்கூ எனும் எளிய வடிவம் மென்மையானது.புதிரும் புதிர் விடுவிப்பு போன்றும் இருக்கும்.பெரிய கவிதையில் உள்ள வார்த்தை வீரியம் ஹைக்கூவிலும் உண்டு.நான் ரசித்த ஹைக்கூவில் சில
#விண்ணை முட்ட உயர வேண்டுமாயின் வெந்துதான் ஆக வேண்டும் -
"சூளையில் செங்கல்"
#ஒரு குமட்டலோடு தான்
முதல் மடக்கு ஆரம்பம்
"குடி"
#கலவரத்தில் கலந்து கொள்ளவில்லை, உடம்பெல்லாம் காயம்
"பேருந்து"
#ஆசையோடு வாங்கினேன்....
ஆவலோடு
உடைத்தேன்....
"உண்டியல்"
#துகிலுரிய வந்த நாடக
துச்சாதனன் திடுக்குற்றான்
பாஞ்சாலி சுடிதாரில்
#சாதி கேட்டது படிவம்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்றது பாடம்
#மெளன அஞ்சலிக்கூட்டம்
விடாது ஒலிக்கிறது
செல்போன்
-நா.மு
#கூண்டுக்கிளி
கத்தியது
Key key என்று..
-மணி
#காம்பஸ் இன்றி
வட்டம் வரைந்தது
குளத்தில் எறிந்த கல்!
-மணி
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment