கற்றதும் பெற்றதும்-45
*மணி
"ஒரு மனிதனைச் சொற்களால் தொடுகிற அனுபவம் உன்னதமானது.சொல் வெளிச்சம் தரக்கூடியது. பேச்சின் நடுவில் இருந்து ஒரு வாக்கியம்,ஒரு சொல் ஒருவரின் மனதில் சென்று சேகரமாகிவிட்டால் போதும்,அது முத்தைப் போல விளைந்து ஒளி வீசத்துவங்கும்.பேச்சின் வலிமை அப்படியானது"
-எஸ்.ரா
#உலக இலக்கிய பேருரைகள்
ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்
-எஸ்.ராமகிருஷ்ணன்
நடிகர் விவேக் ஒருமுறை மேடையில் பேசும்போது.. சிறுவயதில் முதன்முதலில் அவரின் அப்பா இக்கதைகளை பரிசளித்தாரம்.அப்போதுதான் கதை என்றால் வரும் சுவாரஸ்யம், வாசிப்பின் மீதான ஈர்ப்பு என அனைத்தும் தந்தது ஆயிரத்தொரு அரேபிய இரவு கதைகள் என்று சொன்னார்.உண்மையில் இதுபோன்ற கதைகளை தேர்ந்த கதைசொல்லியின் வாயிலாக கேட்கும்போது இன்னும் உற்சாகம் பிறக்கும்.அவ்வகையில் எஸ்.ரா பேசிய உலக இலக்கிய பேருரையில் ஒருநாள் ஆற்றிய இக்கதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
#ஆயிரத்தொரு இரவுகள்
ஆயிரத்தொரு இரவுகள் என்பது மாபெரும் கதைக்களஞ்சியம். பாரசீக இலக்கியத்தின் தொகைநூல். இதை வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த மக்களிடையே வழங்கிய கதைகள் தொகுத்து ஒரு நூலாக வெளிக் கொண்டு வந்துள்ளனர்.
பாரசீக மன்னன் ஷாரியார் தனது மனைவி தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து அடிமையோடு கள்ளக்காதல் செய்வதை அறிந்து அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறான். பின்னர் எல்லா பெண்களும் நன்றி கெட்டவர் என அறிவித்து தினம் ஒரு பெண்ணை மணந்து மறுநாள் அவளைக் கொன்று விடுகிறான். அரசன் மணம் செய்வதற்கு பெண் தேடும் பொறுப்பை ஏற்றுள்ளார் அமைச்சர். சில காலங்களில் பெண் கிடைக்காமல் போகவே அமைச்சரின் உயிரை எடுக்க அரசர் கெடு விதிக்கிறார். இதனை அறிந்த அமைச்சரின் மகள் ஷெஹர்ஜாத் மணம் முடிக்க சம்மதிக்கிறாள்.ஊர் முழுக்க இச்செய்தி பரவுகிறது.இதற்கு அறிவுபூர்வமாக திட்டமிடுகிறாள்.
முதல் இரவு அறையில் தங்கை அக்காவை பார்த்து அழுது,நாளை கதை சொல்ல நீ இருக்கமாட்டாய்.
ஆதலால் இப்பொழுது கதை சொல் என்கிறாள்.மன்னரும்.இதற்கு இசைகிறாள்.
" ஒரு காலத்தில் ஒரு வணிகன் வியாபாரம் செய்து வந்தான். ஒருநாள் வெளியூருக்கு புறப்படும்போது நடுப் பகலில் வெயில் கடுமையாக இருந்ததால் ஆலமரத்தின் அடியில் படுத்து பேரீச்சம்பழங்களை உண்டான். தின்று விட்டு துப்பித் திரும்பிய போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானத்தை நோக்கி புகை மண்டலம் வந்தது. ஒரு பூதம் வந்தது.. என் அருமை மகனை கொன்று விட்டாய் என்றது. உன் மகனை நான் கண்களால் பார்க்கவே இல்லை என்கிறான். எனது மகனை உன்னால் பார்க்க முடியாது நீ பேரீச்சம் பழம் கொட்டை துப்பியபோது அவன் மீது பட்டு அந்த அதிர்ச்சி காரணமாக உயிரிழந்ததாக சொன்னது. ஆகவே உன்னை கொல்ல வந்திருக்கிறேன் என்றது. உடனே அந்த மனிதன் எனக்கு ஓராண்டு அனுமதி கொடு.. என் கடமைகளை முடித்துக்கொண்டு அடுத்த வருடம் இதே நாளில் நான் திரும்பி வருகிறேன் என்று கூறிச் செல்கிறான். சொன்னபடி ஒரு வருடம் கழித்து அன்றைய நாள் வந்து பூதத்திற்கு காத்திருக்கிறான்.
அந்த சமயம் மான்குட்டியை பிடித்துக்கொண்டு ஒரு முதியவர் வந்தார் மனவேதனையோடு. அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, சற்று நேரத்திற்கு பின் இரண்டு நாய்களுடன் ஒருவன் கோவேறு கழுதை ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு வருகிறான். வரும்போது பூதம் வந்தது. அவனைக் கண்டதும்.. அது சிரித்தது வந்து விட்டாயா.. என்று. அதனை கண்டு முதியவன் பரபரப்புடன் முன்னால் வந்து பூத ராஜனே தயவுசெய்து நான் சொல்வதைக் கேள் என்னை பற்றி மானை பற்றி ஒரு தகவல் உள்ளது உன்னிடம் சொல்கிறேன் என்று முதியவன் ஒரு கதை சொல்கிறான். கதைக்குள் மற்றொரு கதை விரியும்.அப்போது விடிந்துவிடும். மன்னரும் கதை கேட்ட சுவாரஸ்யத்தில் மீதியை நாளை சொல் என கொல்லாமல் விட்டுவிடுகிறான் மனைவியை.
அடுத்தநாள் முதியவன் கதை முடிந்ததும்,வழிபோக்கனும் தன் பங்கிற்கு மற்றொரு கதை பூதத்திடம் சொல்கிறான்.
இவ்வாறாக செல்லும்.
முடிவேயில்லாத இரவை குறிக்க ஆயிரத்து ஒன்றை குறிப்பிடுகிறார்கள்.அனுபவம், பயம்,சந்தோசம்,காமம் என அனைத்தையும் பேசும்.
இக்கதைகளிலிருந்து தான் அலிபாபாவும் 40திருடர்களும், பாக்தாத் திருடன், அலாவுதீன் அற்புதவிளக்கு,பட்டணத்தில் பூதம் போன்ற திரைப்படங்கள் உருவாகின.தினத்தந்தி சிந்துபாத்தும் அரேபிய இறக்குமதியே.பாக்தாத் எனும் சொல்லுக்கு கடவுளின் பூங்கா என்ற பொருள்.
கதை சொல்லும் முறை அபாரமானது. ஒரு கதை துவங்கி அதை கிளைவிட்டு, இன்னொரு கதையாக மாறி, அதிலிருந்து மூன்றாவது கரைக்கு அழைத்துச் செல்லும். இப்படி முடிவில்லாத முடிச்சுகள் வழியே கதைகள் ஒன்று சேர்கின்றன. அமானுஷ்ய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மிருகங்கள் பேசுகின்றன. ஒரு வகையில் நமது பஞ்சதந்திர கதைகள் போலவே இருக்கின்றன. அனைத்து தளங்களிலும் வசிப்பவர்கள் கதையில் இடம் பெறுகிறார்கள்.
ஒவ்வொரு நாள் இரவிலும் கதை கூறி சுவாரஸ்யத்தில் முடித்துவிட்டு மன்னர் தன்னை ஆயிரம் நாட்கள் கொல்லாமல் தன்னை காத்துக் கொள்வதாக கதை நீள்கிறது
இறுதியாக எஸ்.ரா இவ்வாறு முடிக்கிறார்..
எந்த அதிகாரமும் கதைகளை ஒதுக்கிவிடமுடியாது. கதைகள் உலகின் நினைவுகள் கதைகள் உயிருள்ளவை. ஆகவே கதைகளுக்கு முடிவே கிடையாது. ஆயிரம் இரவுகள் கடந்து போனாலும் இன்னுமொரு நாள் இருக்கத்தானே செய்கிறது. இந்த பிரபஞ்சம் எத்தனையோ கதைகளை கண்டிருக்கிறது. மனித வாழ்க்கையை சந்தோஷப்படுத்திக் கொண்டே இருக்கின்றன கதைகள். ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதையை சொல்லிக் கொண்டே இருக்கலாம் அதை வாசிக்கவும் என்று கூறி ஒரே முடிக்கிறார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment