ஏந்திக் கொள்ளத்
தெரிந்த
உள்ளங்கைக்கு
எல்லாம் பூவே
-வண்ணதாசன்
சொற்களில் சிக்கிக்
கொள்ளும் மனதுக்கு
விடுதலை என்பது அரிது
-ஜே.கே
தானும் ஓர் இலை என அமர்ந்திருக்கும் பறவை..
தானும் ஓர் பறவை என படபடக்கும் இலை!
-மீனம்மா கயல்
வரலாற்றில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதும் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து இருப்பதும்தான் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கின்றன
-சமஸ்
No comments:
Post a Comment