கொடியிலே மல்லிகைப்பூ பாடல் எப்போது கேட்டாலும் இனிமை.முதல் வரியே துரியோதனின் வார்த்தைகளை பல்லவியாய் வடித்திருப்பார் வைரமுத்து.
இருவரின் சொல்லாத அன்பையும் தவிப்பையும் இப்பாடலில் சொல்லியிருப்பார்.பாடல் முழுக்கவே இருவரும் சொல்வதற்கான தயக்கத்தை வெளிப்படுத்தியிருப்பார்.எல்லாப் படங்களிலும் இது போல் சூழல் வைத்தாலும் இருவரின் மன உணர்வை சொல்லின் வழியே முத்துக்களை போல் கோர்த்திருப்பார் கவிஞர்.
பறிக்கச் சொல்லி தூண்டும் பவல மல்லிகை அமைந்த தோட்டம்.ஆனாலும் பறிக்க ஒரு கூச்சம்.
சொல்ல வந்து நிராகரித்தால் என்ன செய்வது என மனம் கற்பனை செய்து தயக்கம் காட்டுவதை
"மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்" முத்தாய்ப்பாய் மனசு நிறம் மாறும் என நிலையாமையை சொன்னது கிளாசிக் டச் என்றால்
அடுத்து வருவது தான் அக்மார்க் கிராமத்து டச்..அது "மாடு ரெண்டு.. பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்"இருவரின் உணர்வை பொதுப்பார்வையில் பார்த்திருப்பார்.
இருவரும் சொல்லாவிட்டால் இரு பாதைகளில் இரு மாடு சென்றால் வண்டி எங்கே போகுமென ஒரு கேள்வியை முன்வைத்து.. சொல்ல வேண்டுமென்று இருவரும் முடிவு செய்வதை இறுதிப்பத்தியில் சொல்லியிருப்பார் வைரமுத்து
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
-மணி
No comments:
Post a Comment