சார்பட்டா பரம்பரை விமர்சனம்
*மணி
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் சார்பட்டா பரம்பரை.குத்துச் சண்டை கதை என்றவுடன் நினைவுக்கு வரும் கதை,யூகிக்க முடியும் திரைக்கதை என்றாலும்
சுவாரஸ்யமாய் சொன்ன விதத்தில் பாராட்டு பெறுகிறார் ரஞ்சித்.3 மணி நேர படத்தில் பைபாஸ் சாலையில் சென்ற விறுவிறுப்புடன் செல்லும் கதையில் இடையில் ஊருக்குள் போய் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கி மீண்டும் பைபாஸ் பயணத்தில் நிறைவு செய்திருக்கிறது படம்
#கதை
1975ல் நடக்கும் கதை.சார்பட்டா பரம்பரையில் குத்துச்சண்டை வாத்தியார் பசுபதி.இடியாப்ப பரம்பரை சேர்ந்தவர் ஜி.எம் சுந்தர். இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் சுந்தர் பசுபதியிடம் தோற்றிருப்பதால் வேம்புலி எனும் ஜான் கொக்கேனை சார்பட்டா பரம்பரையை சேர்ந்த வீரரை சண்டையில் வீழ்த்த வாய் தகராறு ஏற்படுகிறது.சார்பட்டா அணி பசுபதி மகன் கலையரசனும் சந்தோஷ பிரதாப்பும் அடுத்த வாரிசாய் வேம்புலியாய் எதிர்க்க தன்னை நியமிப்பார் என காத்திருக்கின்றனர்.ஆனால் மகனைவிட திறமையான சந்தோசை தயார் படுத்துகிறார்.
ஒரு கட்டத்தில் சந்தோஷ் குருவை உதாசினம் செய்கிறார்.அப்பொது அதே பரம்பரையை சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரனின் மகன் ஆர்யா பசுபதி மானம் காக்க சந்தோசை வீழ்த்துகிறார். ஆர்யாதான் வேம்புலியை வீழ்த்த சரியான ஆள் என நினைக்க போட்டி ஆரம்பிக்கிறது.ஆர்யா ஜெயிக்கும் தருவாயில் சிலர்
போட்டியின் பாதியிலேயே ரகளை செய்ய ஆட்டம் தடைபடுகிறது. எமர்ஜென்சியால் திமுக கலைக்கப்பட கலவரம் மூள்கிறது.திமுக விசுவாசியான பசுபதி கைதாகிறார்.
இடையில் தடம் மாறும் ஆர்யா, அடிபட்ட வேம்புலி,சந்தோஷ் பழிவாங்கல்,அவுட் ஆப் பார்மான ஆர்யா..இறுதியில் சார்பட்டா ஜெயித்ததா,இடியாப்ப பரம்பரை ஜெயித்ததா, பசுபதி கனவு நிறைவேறியதா என்பதே கதை
#ப்ளஸ்
*இயக்குநர் ரஞ்சித், ஒளிப்பதிவாளர் முரளிக்குப் பிறகு படத்தின் முதுகெலும்பு ராமலிங்கத்தின் கலை.1975ஐ கண் முன் நிறுத்துகிறது
*காங்கிரஸ்-திமுக பற்றி காலகட்டத்திற்கு ஏற்ப அரசியல் பேசியிருப்பது இயல்பு
*மின்வசதி இல்லாத ஊர், சைக்கிள்வித் பாக்ஸ்,புத்தர் சிலை,
வாய்ப்பு கிடைப்பது அபூர்வம் எனும் வசனத்திற்கு பின் அம்பேத்கர் படம் என குறியீடுகள்
*ஆர்யா-பசுபதி-சுந்தர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று சிறப்பாய் நடித்துள்ளனர்
*தமிழ் பாக்சிங் ஆங்கிலேயர்களால் மாறிய கதை,பரம்பரை வரலாறு, பாக்சிங் தவம் போல எனும் வசனங்கள் மற்றும் சென்னை வட்டார வழக்கு என கவனம் ஈர்க்கின்றனர் தமிழ்பிரபா&ரஞ்சித்
*தொய்வான இடத்தில் ஆர்யா- ரோஸ்பாக்சர், ராமன் சண்டைகள் வேகப்படுத்துகின்றனர்.
*டைகர் கார்டன் தங்கதுரை, காளி வெங்கட் போன்றோர் தங்கள் பாத்திரங்களை இயல்பாய் செய்துள்ளனர்.
*இருபாடல் மட்டும் இருப்பது ஆறுதல்.முதல்பாடல் ஆட வைக்கிறது.ஹீரோயின் இருந்தும் டூயட் இல்லை. நன்றி ஐயா
#மைனஸ்
*2.53 நிமிட படம் என்பதால் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்
*இதுதான் நடக்க இருக்கிறது என்பதை முன்பே ஊகிக்க முடிகிறது
*அடிவாங்கிய ரோஸ் நுணுக்கங்களை கற்று தந்தும் முதல்
ஆட்டத்தில் வேம்புலி அடிவாங்குவது
ஏனோ?(மேட்ச் ஃபிக்சிங்கா)
*சமயத்தில் ஜான் விஜய் பேசுவதும், ஆர்யா அம்மா இங்கிலீஸ்ல பேசுவதும் கொஞ்சம் ஜெர்க் ஆகுது.
*தங்கலில் அமீர்கான் பல்வேறு நுணுக்கங்களை சொல்லிக் கொடுப்பார்.அதே போல் சில நுணுக்கங்களை பசுபதி சொல்லிக் கொடுத்திருக்கலாம்
*இரண்டாம் வெற்றிக்கு காரணமான பீடி ராயப்பனை கெளரவித்திருக்கலாம்.அல்லது ப்ரேமலயாவது காட்டியிருக்கலாம்
சின்னசின்ன குறைகள் இருந்தாலும் வேகமான காட்சிகள் அதை மறக்க வைக்கிறது.நீளமான படம் அதே சமயம் போர் அடிக்காமல் போகும். நம்பிப் பார்க்கலாம்
No comments:
Post a Comment