Sunday, 31 July 2022

திருச்செந்தாழை

பிரிந்திருந்தோம்.
அவள் கேட்டாள் , " இது நிரந்தரமா?".
" தற்காலிகம்தான் "

சேர்ந்திருந்தோம்.
அவன் கேட்டான், " இது நிரந்தரமா?"
" தற்காலிகம்தான் " 

தற்கணத்தின் நிறைவோடும்,
விடுதலையின் மகிழ்வோடும்
நாங்கள் சேர்ந்திருந்த நிமிடங்களில்,
மணற்கடிகாரத்தின் துகள்கள்
அனைத்தும் பொன்னாக
மாறியிருந்தன

-திருச்செந்தாழை

No comments:

Post a Comment