பிரிந்திருந்தோம்.
அவள் கேட்டாள் , " இது நிரந்தரமா?".
" தற்காலிகம்தான் "
சேர்ந்திருந்தோம்.
அவன் கேட்டான், " இது நிரந்தரமா?"
" தற்காலிகம்தான் "
தற்கணத்தின் நிறைவோடும்,
விடுதலையின் மகிழ்வோடும்
நாங்கள் சேர்ந்திருந்த நிமிடங்களில்,
மணற்கடிகாரத்தின் துகள்கள்
அனைத்தும் பொன்னாக
மாறியிருந்தன
-திருச்செந்தாழை
No comments:
Post a Comment