சரியான பேச்சு
வெளிப்படையாக பேசுகிறோம் என்ற பெயரில் சில நேரங்களில் நாம் விகாரமாகப் பேசிவிடுகிறோம். அதன் மூலம் மற்றவர்களின் மனதில் உள் முடிச்சுகளை உருவாக்கிவிடுகிறோம். பிறகு, "நான் உண்மையைத்தானே சொன்னேன்" என்று சொல்லி சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.
நாம் பேசியது உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நாம் பேசும் விதம் தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தினால், அது "சரியான பேச்சு" அல்ல.
உண்மையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முன்வைக்க வேண்டும். சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் வார்த்தைகளைக் கொண்டு பேசுவது சரியான பேச்சு அல்ல.
நாம் பேசுவதற்கு முன், நம்முடன் உரையாடுபவரை புரிந்து கொள்ளவேண்டும். நாம் எதையும் கூறுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கவனித்து, அதன்படி பேச வேண்டும். இப்படி செய்தால், நமது பேச்சு, பேசும் விதத்திலும் உள்ளடக்கத்திலும் "சரியான பேச்சாக" மாறும்.
உண்மையான பேச்சு, சரியானதாகவும் இருக்கும் போது தான் அன்பும், அமைதியும் மலரும்.
~ திச் நாத் ஹான்
No comments:
Post a Comment