Monday, 7 August 2023

ஜானகிராமன்


நாம் பேசும் மொழிக்கு சக்தி உள்ளது. பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகள், மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும், அது குணநலனையே கூட மாற்றியமைக்கும்.

தமிழில் "நான் சோகமாக இருக்கிறேன்" என்று சொல்வோம். இதையே ஆங்கிலத்தில் "I'm Sad" என்று கூறுவோம். இரண்டிலும் சோகம் என்ற உணர்வு நமக்குள்ளிருந்து வெளிப்பட்டதாக அர்த்தமாகிறது.

ஐரிஷ் மொழியில், ஒருவர் சோகத்துடன் இருப்பதை "Ta Bron Orm" என்பார்கள். அதனைத் தமிழில் மொழி பெயர்த்தால், "சோகம் என் மீது உள்ளது" என்று அர்த்தப்படும். 

இது மிக அழகிய அணுகுமுறை. உணர்ச்சிகள் வெளியில் இருந்து நம்மை அவ்வப்போது ஆட்கொள்கிறது, அந்த உணர்ச்சிகள் நான் அல்ல என உணர்ந்து கொள்ளும் போது, உணர்வு வயப்படுவது குறைகிறது. இப்போதைக்கு சோகம் என்ற மீது உள்ளது. பிறகு அது மாறும். வேறொரு உணர்ச்சி என் மீது வரும் என்ற மனநிலை நம்பிக்கைத் தருகிறது. 

இதே தான் மகிழ்ச்சிக்கும். நான் மகிழ்வாக இருக்கிறேன் எனும் போது, மனதுக்குள் ஒரு வித துள்ளல் ஏற்படுகிறது. அதே, "மகிழ்ச்சி என் மீது உள்ளது" என்று கூறினால் நம்மால் சமநிலையுடன் இருக்க இயலும்.

-படித்தது

No comments:

Post a Comment