சேவல் கூவியது
நான் எழும்போது இந்த சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது என்று கதிரவன் பூரித்துப் போனான். மாலை வந்தது.
மேற்கு திசையில் கவிழும் முன் நான் விழுகிறேனே என்னை தாங்க யாருமே வர மாட்டார்களா என்று ஏங்கினான்
சேவலை அவன் எதிர்பார்த்தான் வரவில்லை விழுந்து கொண்டே கதிரவன் சொன்னான்
"எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை"
-காசி ஆனந்தன்
No comments:
Post a Comment