Sunday, 6 August 2023

தாவோ


ஒரு நாள் இளவரசன் ஒருவன் தன் படைகளோடு காட்டிற்கு சென்றான். அவனைப் பார்த்ததும் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள் எல்லாம் ஓடிவிட்டன. ஆனால் ஒரே ஒரு குரங்கு மட்டும் இவனைப் பற்றி கவலைப்படாமல் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருந்தது. அது அந்த இளவரசனக்கு எரிச்சலை ஏற்படுத்த அந்த குரங்கை நோக்கி அம்பை எய்தான்.

 அந்த குரங்கு தன்னை நோக்கி பாய்ந்து வந்த அம்பை கையால் பிடித்து தூர வீசியது. கோபம் அடைந்த இளவரசன் தன் படைவீரர் அனைவரையும் அழைத்து குரங்கை கொல்ல உத்தரவிட்டான். அடுத்த கணம் நூற்றுக்கணக்கான அம்புகள் பாய குரங்கு அந்த இடத்திலேயே உயிர் விட்டது. ஒருவனுக்கு திறமைகள் இருந்தால் அதை அத்தனை பேருக்கும் விளம்பரமாய் காட்டக்கூடாது. அதுவே அழிவுக்கு காரணம் ஆகிவிடும்.

-தாவோ

No comments:

Post a Comment