கம்பர் விழாவில் கலந்துகொண்டு பேச எம்.ஆர். ராதாவுக்கு அழைப்பு வந்தது. போனார். பேசினார்.
‘பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே. நீங்கள்ளாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்க அப்படின்னு உங்களுக்குத் தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...’
குறுக்கிடும் ஒருவர் ‘அய்யா, அவரு நாடாரு இல்லை.’
‘நாடார் இல்லையா. நம்மாளு போலருக்கு. இந்த கம்ப முதலியராகப்பட்டவர்...’
‘அய்யா, அவரு முதலியாரும் இல்லை.’
‘முதலியாரும் இல்லையா! சரி என்னன்னு புரிஞ்சு போச்சு. இந்த கம்பர் அய்யர் ஆனவர்...’
‘அய்யா, அவரு அய்யரும் இல்லை.’
‘என்னது நாடார் இல்லை, முதலியார் இல்லை, அய்யரும் இல்லை. அப்ப இப்பதான் சாதியை எல்லாம் சொல்லிக்கிட்டிருக்கோமா? அப்ப ஜாதி கிடையாதா? சரிதான். இந்த சாதியில்லாத கம்பன் விழாவிலே...’
ராதாவின் பேச்சு தொடர்ந்தது.
*முகில்
No comments:
Post a Comment