பார்த்தாயா?
இதைத்தான் இவன்
இவ்வளவு நாட்களாகப்
படித்துக்கொண்டிருக்கிறான்
என்று
மேசைப்புத்தகத்தின் பக்கங்களை
ஒவ்வொன்றாக விரித்துக் காட்டுகிறது…
மின்விசிறி ஜன்னலருகில்.
எழுத்தறிவற்ற அந்தியொளியோ
மஞ்சள் கைகளால் தடவித்தடவி
இல்லாத சித்திரங்களைத் தேடுகிறது
-யூமா வாசுகி
No comments:
Post a Comment