“காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையை
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து
டிவி காம்பியருக்கு
பாவமாய் பதில் சொல்வாள்
"ஹவுஸ் வொய்ப்தான்"
-பரமேஸ்வரி
No comments:
Post a Comment