வைரமுத்து பிறந்ததின பகிர்வு
*மணி
#நிறம் ஒரு ஒப்பீடுதான்,ஆப்பிரிக்காவில இருந்தால் நான் தான் அங்கு சிவப்பு
#வைரமுத்து
#உசுரை விட்டு போறது மட்டும் சாவு இல்லை,
ஊரை விட்டு போறதும் சாவு தான்
#வைரமுத்து
#பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்,
விலைக்கு வாங்க முடியாது
-வைரமுத்து
#இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து
#கட்டிலுக்கு தூக்க மாத்திரையும், ஊக்க மாத்திரையும் தேவைப்படாதவரை உடல் நலமுடன் இருப்பதாக அர்த்தம்
-வைரமுத்து
#சிறகிருந்தால் போதும்,
சிறியதுதான் வானம்.!
-வைரமுத்து
#வாரக்கடைசியில் காட்டிக்கொடுக்கும் சாயமடித்த மீசைப்போல,
மூடிமூடி வைத்தாலும்
முட்டி முட்டி எட்டிப்பார்க்கும் துக்கம்
-வைரமுத்து
#காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
-வைரமுத்து
#பிணங்களை எரிப்பதற்காக மேல் நாட்டில் மின்சார அடுப்பு தயாரிக்கிறார்கள்.இந்தியாவில் மகன்களை தயாரிக்கிறார்கள்
-வைரமுத்து
#உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள பொதைக்கிறோம்.மனசு செத்துப்போனா அவன் அத உடம்புக்குள்ளயே பொதச்சிர்றான்
-வைரமுத்து
#இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு
இனிமேல் இலட்சியத்துக்கு நீதான் இலக்கு
-வைரமுத்து
#இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து
#உசுரவிட்டு போறதுதான் சாவா?
ஊரவிட்டு போறதும் சாவுதான்
#வைரமுத்து
#மகிழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை
மனசின் கொள்ளளவு
-வைரமுத்து
#தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம் வை
பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு
-வைரமுத்து
#காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
-வைரமுத்து
#ஆடம்பர அவசரத்தில்
புல்லாங்குழலைப் பொன்னில்
செய்துவிடாதீர்கள்
அது மூங்கிலாகவே இருக்கட்டும்
-வைரமுத்து
#ஜனநாயகத்திற்கு ஜனங்கள் தேவையில்லை
இங்கே வெட்டியானுக்கும்
வேட்பாளனுக்கும்
பிரேதங்களே தேவை
-வைரமுத்து
#நூறு வருசம் எதுக்கு இருக்கனும்?
ஒரு மனுசன் சொந்தமா ஒன்னுக்கு போறவரைக்கும் தான் இருக்கனும்.ஏங்கையைத் தூக்கிவிட இன்னொரு கையி வேணுங்கிறப்ப நான் இருந்தா என்ன?போனா என்ன?
-வைரமுத்து
(க.இதிகாசம்)
#முடிக்கத் தெரியாத சிறுகதையைக்
குறுநாவல் என்று
கூப்பிட்ட மாதிரி
தீர்க்கத் தெரியாத பிரச்சனைக்கு
விதி என்று பெயரிட்டு
விலகிவிடுவதா?
-வைரமுத்து
#வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும்,மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான்
-வைரமுத்து
#இந்தப் பூவுலகிற்கு பிறந்து வருவதற்கு ஒரே வழிதான். ஆனால் அதை விட்டுப் போவதற்குத்தான் பல வழிகள்
-வைரமுத்து
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment