தாகூர் ஒரு சிலேட்டுப் பலகையில்தான் முதன்முறையாகத் தன்னுடைய கவிதைகளை எழுதத் தொடங்கினாராம். காரணம், ‘எழுதியது பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடலாம்’ என்கிற சுதந்தரம் அவருக்குப் பிடித்திருந்தது, அதுவே அவருக்கு எழுதும் துணிச்சலைத் தந்திருக்கிறது.
‘அச்சப்படாதே’ என்று அந்தச் சிலேட்டு தன்னிடம் சொல்வதாக உணர்கிறார்* தாகூர், ‘உனக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எழுது, சரிப்பட்டுவராவிட்டால் பிரச்னையில்லை, ஒரே தேய்ப்பு, அனைத்தையும் சட்டென்று அழித்துவிடலாம்.’
-என்.சொக்கன்
No comments:
Post a Comment