அம்மன் பட சீசன்னா ஆடிவெள்ளியில் தான் ஆரம்பித்து.. அப்போது சக்கைப் போடுபோட்டது. அதே வரிசையில் அதிக படம் வந்து அந்த உக்கிரம் அடங்கிய பின் தெலுங்கு ரீமேக் அம்மன் வந்து ரீ என்ட்ரி கொடுத்தார் அம்மன். கிராபிக்சில் வந்த பின் தான் அம்மன் பட மார்க்கெட் எகிறியது. பேருக்கு பின்னால் குமார் சேர்க்கும் 80 கிட்ஸ் ட்ரென்ட் போல.. எந்தப் படம் பேர் வைத்தாலும் பேருக்கு பின்னும் அம்மன் சேர்த்து விட்டனர்.ஒரு கட்டத்தில் படம் ஓடாமல் சீசன் முடிந்த பிறகு அம்மனே அப்புறம் வர்றேன்னு போய்ட்டாங்க.
திரும்பவும் எப்பெல்லாம் அம்மனை மறக்கிறோமோ அம்மனே அவதாரம் எடுப்பது போல் வந்தவர்தான் மூக்குத்தி அம்மன்.
வழக்கமா குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சனையெனில் ஓடி வரும் அம்மன் இம்முறை சமூக பிரச்சனைக்கு வந்திருப்பதை வரவேற்கலாம்.சாமியை நம்பு சாமியாரை நம்பாதே னு சொல்லியிருக்காங்க.
#கதை
நாகர்கோவிலில் வசிக்கும் மிடில் க்ளாஸ் குடும்பம் ஆர்.ஜே.பாலாஜி.
சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிபோன அப்பா,தாத்தா மெளலி, அம்மா ஊர்வசி,மூன்று தங்கைகள். டெம்ரவரி நியூஸ் ரிப்போர்டராக பணிபுரிந்து வருகிறார்.தாய் ஊர்வசி திருப்பதி செல்லும் ஆசைநிராசை ஆகிக்கொண்டே இருக்க..ஒரு கட்டத்தில் குலதெய்வமான மூக்குத்தி அம்மனை வழிபட குடும்பமாய் செல்கின்றனர்.அன்றிரவு அவனுக்கு காட்சித்தருகிறார் மூக்குத்தி அம்மன். சிறு தெய்வ வழிபாட்டை புறக்கணிக்கும் மிடில்க்ளாஸ்களை கண்டு காண்டாகும் அம்மன்.. தன் கோயிலும் பிரபலமடைய பாலாஜி உதவியை நாடுகிறார். சில வழிகள் மூலம் கோயில் பிரபலமடையும் போது கார்ப்ரேட் சாமியார் அங்கு வந்து மலைகளை அழித்து 13,000 ஏக்கர் அதாவது 45கி.மீ நிலத்தை தனக்காக்கிக் கொள்கிறார்.
சாமியே ஸ்டன் ஆகிவிடுகிறது இதைப் பார்த்து.. சாமியா? சாமியாரா? பாட்ஷாவா? ஆண்டனியா?எனும் கேள்விக்கு கப்புனு குத்துது மூக்குல மூக்குத்தி அம்மன் க்ளைமேக்ஸில்..
போலிச்சாமியார்களை கண்டு கடவுளே இப்பிடி காண்டாகி வந்தால் தான் உண்டு என நினைக்கத் தோன்றுகிறது.
#டின்ச்
*படத்தின் கதையை டைட்டிலிலேயே ஆரம்பித்திருப்பது நன்று. இப்படிப்பட்ட கதையை தைரியமாய் எடுத்ததற்கே பாரட்டலாம் ஏங்கல்ஸ் ராமசாமியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி,என்.ஜே சரவணன்
*கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அறை எண் 305ல் கடவுள் போல் கடவுள் வந்து நீதாண்டா எல்லாம்னு சொல்லிட்டு போய்டுவாங்க ஆனால் நயன்தாரா போலிச்சாமியாரை நம்பாதேனு சோசியல் மெசேஜ் சொல்லிட்டு போயிருக்காங்க.
*சிறு தெய்வங்களை நம்பாமல் பெரு தெய்வங்களை மட்டும் பூஜிக்கும் அம்மாவாக ஊர்வசி கச்சிதம். வெங்கடாசலபதி நீ என்னை காப்பத்தலைனா அடுத்து பாபாவை கும்பிடுவதை தவிர வேற வழியில்லனு சொல்லும் மிடில் க்ளாஸ் அம்மாவாய் நிறைவு.
*போலிச்சாமியார் அஜய் கோஷ் கண்களால் மிரட்டுகிறார்.தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நாகர்கோவிலை நகர் வலம் வர வைத்திருக்கிறது.இடையில் வரும் பாட்டுகள் கொஞ்சம் கொட்டாவி வரவைக்கிறது.
*ட்விட்டர் வசனங்கள் ஆங்காங்கே தெரிவது போல் இருப்பது எனக்கு மட்டுந்தானா."சமையல் பிடிக்கலைனா உடனே சொல்லுவோம், பிடிச்சதுன்னா சொல்லமாட்டோம் மாதிரி.
*குடும்பத்தை விட்டு சென்று சாமியாரிடம் சேரும் நடப்பு சம்பவங்களையும் நாடி பிடித்து சேர்த்திருப்பது நன்று.
*முதல் பாதியில் இயல்பான கலகலப்பில் அஞ்சாவதுகியர் போட்டுச் செல்லும் இடைவேளைக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இறுதியில் வேகமெடுக்கிறது.
*இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவாய் இருக்கிறது.கமேண்டிங் ஆர்டரில் இருக்கும் அம்மன் களத்தில் இறங்கியிருந்தால் அதகளம் செய்திருக்கலாம்.
*பட டைட்டில் ஆரம்பிக்கும் போதே வெள்ளி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர், வன அழிப்பு, யானை வழித்தடப்பாதை ஆக்கிரமிப்பு என எளிதில் யூகிக்கமுடிகிறது.அதனை தைரியமாய் சொன்ன இயக்குநருக்கு பாராட்டுகள்.
#ஃபேமிலி எண்டர்டெய்னர்.. தாராளமாய் பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா சூப்பரா வந்திருக்கும்.கார்ப்ரெட் சாமியார் பக்தர்களுக்கு பிடிக்காது
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment